ETV Bharat / state

கரோனாவைத் தடுக்க தமிழ்நாடு முழுவதும் 144 தடை உத்தரவு!

author img

By

Published : Mar 23, 2020, 4:45 PM IST

Updated : Mar 25, 2020, 9:52 AM IST

கரோனா பரவுவதைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட எல்லைகளையும் மூட உத்தரவிட்டு, மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவை சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிறப்பித்தார்.

cm announced 144 section imposed in tamilnadu
cm announced 144 section imposed in tamilnadu

இதுதொடர்பாக சட்டப்பேரவையில் அவர் பிறப்பித்த உத்தரவு விவரம் வருமாறு:

  • தமிழகத்தில் நாளை மாலை 6 மணி முதல் 31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு
  • அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்படும்
  • பால், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் கடைகளைத் தவிர மற்ற கடைகள் மூடப்படும்
  • தனியார் நிறுவனங்கள் வீட்டில் இருந்தே ஊழியர்கள் பணியாற்ற அனுமதிக்க வேண்டும்
  • அத்தியாவசியப் பொருள்கள் விற்பனை, மருந்துப் பொருள்கள் விற்பனைக்கு எந்த தடையும் கிடையாது
  • அத்தியாவசியப் பணிகளுக்கு மட்டுமே வெளியில் வர வேண்டும்
  • விடுதியில் தங்கியிருப்பவர்கள் வசதிக்காக அம்மா உணவகம் செயல்படும்.
  • கர்ப்பிணிகள், முதியவர்களுக்கு உதவிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்
  • கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது
  • அவரச உதவிக்கான ஆம்புலன்ஸ் சேவை, அத்தியாவசியப் பொருள் போக்குவரத்துத் தவிர மற்ற அனைத்துக்கும் தடை
  • பொதுப் போக்குவரத்து, தனியார் பேருந்துகள், ஆட்டோ, டாக்ஸிகள் உள்ளிட்டவை இயங்காது
  • மாவட்டங்களுக்கு இடையே அத்தியாவசியப் பொருள்கள் போக்குவரத்து தவிர மற்றவற்றுக்குத் தடை
  • பால், காய்கறி, மளிகை, இறைச்சி கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகள், வணிக வளாகங்களை மூட உத்தரவு
  • அத்தியாவசியப் பணிகள், அவசர அலுவல்கள் தவிர மற்ற அரசு அலுவலகங்கள் செயல்படாது
  • காவல்துறை, சுகாதாரத்துறை, உள்ளாட்சி துறை, தீயணைப்பு துறை ஆகியவை தொடர்ந்து செயல்படும்
  • அத்தியாவசியப் பணிகளில் ஈடுபடும் தனியார் நிறுவனங்கள், தனியார் மருத்துவமனைகள் தொடர்ந்து இயங்கும்
  • அத்தியாவசிய கட்டடப் பணிகள் தவிர பிற கட்டுமானப் பணிகள் அனைத்திற்கும் தடை
  • தடை உத்தரவு நாட்களில் வேலைக்கு வராத ஊழியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யக் கூடாது
  • வீடுகள் தவிர விடுதிகளில் தங்கியிருப்போருக்கு உணவுகள் கிடைக்கும் விதத்தில் உணவகங்கள் செயல்பட அனுமதி
  • பிற இடங்களுக்குச் சென்று வந்தவர்கள், கரோனா அறிகுறி தென்பட்டால் தனிமைப்படுத்திக் கொண்டு சோதனைக்கு உட்படுத்த வேண்டும்
  • குடும்ப உறுப்பினர்கள், மற்றவர்களுக்கு வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பது முக்கியமானது
  • வெளிநாடுகளுக்குச் சென்று வந்தவர்கள், உடனடியாக அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்
  • தடை உத்தரவால் கர்ப்பிணிகள், முதியவர்களுக்கு ஏற்படும் இடையூறை களைய மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு

கட்டுப்பாடுகள் தொடர்பான விரிவான அறிக்கை இன்று மாலை வெளியிடப்படும் இவ்வாறு முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.

இதையும் படிங்க: அனைத்து மாவட்ட எல்லைகளையும் மூட முதலமைச்சர் உத்தரவு

இதுதொடர்பாக சட்டப்பேரவையில் அவர் பிறப்பித்த உத்தரவு விவரம் வருமாறு:

  • தமிழகத்தில் நாளை மாலை 6 மணி முதல் 31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு
  • அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்படும்
  • பால், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் கடைகளைத் தவிர மற்ற கடைகள் மூடப்படும்
  • தனியார் நிறுவனங்கள் வீட்டில் இருந்தே ஊழியர்கள் பணியாற்ற அனுமதிக்க வேண்டும்
  • அத்தியாவசியப் பொருள்கள் விற்பனை, மருந்துப் பொருள்கள் விற்பனைக்கு எந்த தடையும் கிடையாது
  • அத்தியாவசியப் பணிகளுக்கு மட்டுமே வெளியில் வர வேண்டும்
  • விடுதியில் தங்கியிருப்பவர்கள் வசதிக்காக அம்மா உணவகம் செயல்படும்.
  • கர்ப்பிணிகள், முதியவர்களுக்கு உதவிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்
  • கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது
  • அவரச உதவிக்கான ஆம்புலன்ஸ் சேவை, அத்தியாவசியப் பொருள் போக்குவரத்துத் தவிர மற்ற அனைத்துக்கும் தடை
  • பொதுப் போக்குவரத்து, தனியார் பேருந்துகள், ஆட்டோ, டாக்ஸிகள் உள்ளிட்டவை இயங்காது
  • மாவட்டங்களுக்கு இடையே அத்தியாவசியப் பொருள்கள் போக்குவரத்து தவிர மற்றவற்றுக்குத் தடை
  • பால், காய்கறி, மளிகை, இறைச்சி கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகள், வணிக வளாகங்களை மூட உத்தரவு
  • அத்தியாவசியப் பணிகள், அவசர அலுவல்கள் தவிர மற்ற அரசு அலுவலகங்கள் செயல்படாது
  • காவல்துறை, சுகாதாரத்துறை, உள்ளாட்சி துறை, தீயணைப்பு துறை ஆகியவை தொடர்ந்து செயல்படும்
  • அத்தியாவசியப் பணிகளில் ஈடுபடும் தனியார் நிறுவனங்கள், தனியார் மருத்துவமனைகள் தொடர்ந்து இயங்கும்
  • அத்தியாவசிய கட்டடப் பணிகள் தவிர பிற கட்டுமானப் பணிகள் அனைத்திற்கும் தடை
  • தடை உத்தரவு நாட்களில் வேலைக்கு வராத ஊழியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யக் கூடாது
  • வீடுகள் தவிர விடுதிகளில் தங்கியிருப்போருக்கு உணவுகள் கிடைக்கும் விதத்தில் உணவகங்கள் செயல்பட அனுமதி
  • பிற இடங்களுக்குச் சென்று வந்தவர்கள், கரோனா அறிகுறி தென்பட்டால் தனிமைப்படுத்திக் கொண்டு சோதனைக்கு உட்படுத்த வேண்டும்
  • குடும்ப உறுப்பினர்கள், மற்றவர்களுக்கு வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பது முக்கியமானது
  • வெளிநாடுகளுக்குச் சென்று வந்தவர்கள், உடனடியாக அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்
  • தடை உத்தரவால் கர்ப்பிணிகள், முதியவர்களுக்கு ஏற்படும் இடையூறை களைய மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு

கட்டுப்பாடுகள் தொடர்பான விரிவான அறிக்கை இன்று மாலை வெளியிடப்படும் இவ்வாறு முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.

இதையும் படிங்க: அனைத்து மாவட்ட எல்லைகளையும் மூட முதலமைச்சர் உத்தரவு

Last Updated : Mar 25, 2020, 9:52 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.