முதலமைச்சரின் முதன்மைச் செயலராக பணிபுரிந்து வரும் முனைவர் எம்.சாய்குமாரின் தாயார் குப்பம்மா, இன்று (ஆக. 29) உடல் நலக் குறைவால் காலமானார். இதையடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி K. பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் கடிதத்தில், “தங்களின் அன்புத் தாய் குப்பம்மா இன்று உடல் நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த மனவேதனை அடைந்தேன்.
ஈடுசெய்ய முடியாத இழப்பு தங்களுக்கு ஏற்பட்டுள்ள போதிலும், இந்தத் துயரத்தை தாங்கிக் கொள்ளக் கூடிய சக்தியையும், தைரியத்தையும் தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் அளிக்க வேண்டும் என்றும், உங்கள் தாயாரின் ஆன்மா, இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறவும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
குப்பம்மாவை இழந்து வாடும் தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.