ETV Bharat / state

ஊரடங்கு விதிமீறல்: 9.41 லட்சம் பேர் கைது! - corona virus

சென்னை: ஊரடங்கை மீறியதாக தமிழ்நாடு முழுவதும் கடந்த 135 நாள்களில் ஒன்பது லட்சத்து 41 ஆயிரத்து 752 பேரை காவல் துறையினர் கைதுசெய்து ஜாமினில் விடுவித்துள்ளனர்.

lockdown violations
ஊரடங்கு மீறல் வழக்கு பதிவு
author img

By

Published : Aug 6, 2020, 1:47 PM IST

கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் அவசியம் இன்றி வெளியில் வரக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், தடை உத்தரவை மீறுபவர்களைக் கண்காணித்து காவல்துறை நடவடிக்கை எடுத்துவருகிறது. மேலும், காவல் துறையினர் தடை உத்தரவை மீறுபவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்து அவர்களைக் கட்டுப்படுத்திவருகின்றனர்.

இந்நிலையில், ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்த கடந்த 135 நாள்களில் காவல் துறை தடையை மீறியதாக ஒன்பது லட்சத்து 41 ஆயிரத்து 752 பேரை காவல் துறை கைது செய்து ஜாமீனில் விடுவித்துள்ளது. அதேபோல் ஆறு லட்சத்து 67 ஆயிரத்து 324 வாகனங்களைப் பறிமுதல் செய்து, 19 கோடியே 75 லட்சத்து 52 ஆயிரத்து 783 கோடி ரூபாய் அபராதம் வசூலித்துள்ளனர்.

குறிப்பாக, சென்னையில் மட்டும் நேற்று ஒரே நாளில் ஊரடங்கை மீறியதாக 156 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு, 5 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இலங்கை நிழல் உலக தாதா அங்கோடா லொக்கா வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!

கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் அவசியம் இன்றி வெளியில் வரக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், தடை உத்தரவை மீறுபவர்களைக் கண்காணித்து காவல்துறை நடவடிக்கை எடுத்துவருகிறது. மேலும், காவல் துறையினர் தடை உத்தரவை மீறுபவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்து அவர்களைக் கட்டுப்படுத்திவருகின்றனர்.

இந்நிலையில், ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்த கடந்த 135 நாள்களில் காவல் துறை தடையை மீறியதாக ஒன்பது லட்சத்து 41 ஆயிரத்து 752 பேரை காவல் துறை கைது செய்து ஜாமீனில் விடுவித்துள்ளது. அதேபோல் ஆறு லட்சத்து 67 ஆயிரத்து 324 வாகனங்களைப் பறிமுதல் செய்து, 19 கோடியே 75 லட்சத்து 52 ஆயிரத்து 783 கோடி ரூபாய் அபராதம் வசூலித்துள்ளனர்.

குறிப்பாக, சென்னையில் மட்டும் நேற்று ஒரே நாளில் ஊரடங்கை மீறியதாக 156 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு, 5 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இலங்கை நிழல் உலக தாதா அங்கோடா லொக்கா வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.