ETV Bharat / state

துணிக்கடை பூட்டை உடைத்து 3 லட்சம் மதிப்பிலான பொருள்கள் கொள்ளை!

author img

By

Published : Sep 5, 2021, 7:28 PM IST

சென்னை: கோயம்பேட்டில் உள்ள துணிக்கடை ஒன்றின் பூட்டை உடைத்து மூன்று லட்சம் மதிப்பிலான பொருள்களை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

துணிக்கடை
துணிக்கடை

சென்னை: கோயம்பேட்டில் இருந்து பூந்தமல்லி செல்லும் சாலையில் ஜெயக்குமார் என்பவர் ஜாக்கி என்ற துணிக்கடையை நடத்தி வருகிறார். நேற்று (செப்.04) இரவு வழக்கம் போல் வேலை முடிந்து கடையை ஜெயக்குமார் பூட்டிச் சென்றுள்ளார்.

தொடர்ந்து இன்று (செப்.05) காலை வியாபாரம் செய்ய கடையைத் திறக்க அவர் வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது கடையில் வைத்திருந்த மூன்று லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருள்களை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.

இதனையடுத்து கோயம்பேடு காவல் நிலையத்தில் ஜெயக்குமார் அளித்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: 17% மேல் ஈரப்பதம் - நெல் கொள்முதல் செய்யப்படாததால் விவசாயிகள் அவதி

சென்னை: கோயம்பேட்டில் இருந்து பூந்தமல்லி செல்லும் சாலையில் ஜெயக்குமார் என்பவர் ஜாக்கி என்ற துணிக்கடையை நடத்தி வருகிறார். நேற்று (செப்.04) இரவு வழக்கம் போல் வேலை முடிந்து கடையை ஜெயக்குமார் பூட்டிச் சென்றுள்ளார்.

தொடர்ந்து இன்று (செப்.05) காலை வியாபாரம் செய்ய கடையைத் திறக்க அவர் வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது கடையில் வைத்திருந்த மூன்று லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருள்களை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.

இதனையடுத்து கோயம்பேடு காவல் நிலையத்தில் ஜெயக்குமார் அளித்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: 17% மேல் ஈரப்பதம் - நெல் கொள்முதல் செய்யப்படாததால் விவசாயிகள் அவதி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.