ETV Bharat / state

ரூ.10.26 கோடியில் 12 மேம்பாலங்கள் அழகுப்படுத்தும் பணி தீவிரம்!

author img

By

Published : Dec 17, 2022, 10:06 PM IST

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.10.26 கோடி மதிப்பீட்டில் 12 மேம்பாலங்கள் அழகுபடுத்தும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

சென்னை 2.0 திட்டம்: மேம்பாலங்கள் அழகுபடுத்தும் பணி தீவிரம்!
சென்னை 2.0 திட்டம்: மேம்பாலங்கள் அழகுபடுத்தும் பணி தீவிரம் (கோப்புப்படம்)

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சியில் 14 மேம்பாலங்கள் மற்றும் 12 இரயில்வே மேம்பாலங்கள் என 26 முக்கிய பாலங்கள், 16 வாகனச் சுரங்கப்பாதைகள், 5 பாதசாரிகள் சுரங்கப்பாதைகள், 4 நடைமேம்பாலங்கள் மற்றும் 234 சிறுபாலங்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது.சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.25 கோடி மதிப்பீட்டில் பெருநகர சென்னை மாநகராட்சியில் மேம்பாலங்களின் கீழ்ப்பகுதியில் செயற்கை நீரூற்று மற்றும் வண்ண விளக்குகள் அமைத்து பசுமையாக்கி அழகு படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.10.26 கோடி மதிப்பீட்டில் ௧௨ மேம்பாலங்களில் கண்கவரும் வகையில் வண்ண ஓவியங்கள் வரைதல், வண்ண விளக்குகள் மற்றும் செயற்கை நீரூற்று அமைத்தல் போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது.இவற்றில் ரூ.1.51 கோடி மதிப்பீட்டில் கோயம்பேடு மேம்பாலம், மதுரவாயல் புறவழிச்சாலை மேம்பாலம், தில்லை கங்கா நகர், புழுதிவாக்கம் மற்றும் ஆதம்பாக்கம் பகுதிக்குட்பட்ட எம்.ஆர்.டி.எஸ். ஆகிய 5 மேம்பாலத்தின் கீழ்ப்பகுதி அழகுபடுத்தும் பணிகள் முடிவடைந்துள்ளன.

மேலும் ரூ.8.51 கோடி மதிப்பீட்டில் பாந்தியன் சாலை - காசா மேஜர் சாலை சந்திப்பு மேம்பாலம், காந்தி மண்டபம் சாலை மேம்பாலம், சக்கரபாணி தெரு மேம்பாலம், காமாட்சி மருத்துவமனை மேம்பாலம், வடக்கு உஸ்மான் சாலை மேம்பாலம் மற்றும் ஜி.என்.செட்டி சாலையில் உள்ள கலைவாணர் மேம்பாலம் ஆகிய 6 மேம்பாலங்களில் அழகுப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பெரம்பூர் சுரங்கப்பாதையில் இரயில்வே பராமரிப்பு பணிகள் முடிவடைந்தவுடன் ரூ.24 இலட்சம் மதிப்பீட்டில் அழகுப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

இதையும் படிங்க: சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் உதயநிதி ஆலோசனை!

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சியில் 14 மேம்பாலங்கள் மற்றும் 12 இரயில்வே மேம்பாலங்கள் என 26 முக்கிய பாலங்கள், 16 வாகனச் சுரங்கப்பாதைகள், 5 பாதசாரிகள் சுரங்கப்பாதைகள், 4 நடைமேம்பாலங்கள் மற்றும் 234 சிறுபாலங்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது.சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.25 கோடி மதிப்பீட்டில் பெருநகர சென்னை மாநகராட்சியில் மேம்பாலங்களின் கீழ்ப்பகுதியில் செயற்கை நீரூற்று மற்றும் வண்ண விளக்குகள் அமைத்து பசுமையாக்கி அழகு படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.10.26 கோடி மதிப்பீட்டில் ௧௨ மேம்பாலங்களில் கண்கவரும் வகையில் வண்ண ஓவியங்கள் வரைதல், வண்ண விளக்குகள் மற்றும் செயற்கை நீரூற்று அமைத்தல் போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது.இவற்றில் ரூ.1.51 கோடி மதிப்பீட்டில் கோயம்பேடு மேம்பாலம், மதுரவாயல் புறவழிச்சாலை மேம்பாலம், தில்லை கங்கா நகர், புழுதிவாக்கம் மற்றும் ஆதம்பாக்கம் பகுதிக்குட்பட்ட எம்.ஆர்.டி.எஸ். ஆகிய 5 மேம்பாலத்தின் கீழ்ப்பகுதி அழகுபடுத்தும் பணிகள் முடிவடைந்துள்ளன.

மேலும் ரூ.8.51 கோடி மதிப்பீட்டில் பாந்தியன் சாலை - காசா மேஜர் சாலை சந்திப்பு மேம்பாலம், காந்தி மண்டபம் சாலை மேம்பாலம், சக்கரபாணி தெரு மேம்பாலம், காமாட்சி மருத்துவமனை மேம்பாலம், வடக்கு உஸ்மான் சாலை மேம்பாலம் மற்றும் ஜி.என்.செட்டி சாலையில் உள்ள கலைவாணர் மேம்பாலம் ஆகிய 6 மேம்பாலங்களில் அழகுப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பெரம்பூர் சுரங்கப்பாதையில் இரயில்வே பராமரிப்பு பணிகள் முடிவடைந்தவுடன் ரூ.24 இலட்சம் மதிப்பீட்டில் அழகுப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

இதையும் படிங்க: சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் உதயநிதி ஆலோசனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.