ETV Bharat / state

‘பெருநிறுவன முதலாளிகளுக்கு உதவவே சட்டங்களில் மாற்றம்’ - மோடி மீது குற்றச்சாட்டு - benefit corporate employers

சென்னை: பெருநிறுவன முதலாளிகளுக்கு நன்மை செய்வதற்காகவே தொழிலாளர் நலச்சட்டங்களை பிரதமர் மோடி மாற்றி அமைக்கிறார் என மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் துரைபாண்டியன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

central Government Employees Federation
author img

By

Published : Aug 2, 2019, 7:15 PM IST

சென்னை அண்ணா சாலையில் உள்ள தபால் நிலையம் முன்பு மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அச்சங்கத்தின் பொதுச்செயலாளர் துரைபாண்டியன், ‘மத்திய அரசுக்கு நாடளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இருக்கின்ற ஒரே காரணத்தினால் இந்திய தேசத்தை பாதிக்கின்ற வகையில், பல்வேறு சட்டங்களை குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றி வருகிறது.

மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

இதில் குறிப்பாக கடந்த ஜூலை 23ஆம் தேதி பல்வேறு தொழிலாளர் நலச்சட்டங்களை மாற்றும் நோக்கில் 44ஆக இருக்கின்ற சட்டங்களை நான்கு சட்டங்களாக குறைப்பேன் என்று சட்டங்களுக்கு மாற்று திட்டங்கள் வகுத்துள்ளனர். மோடி கார்ப்பரேட் முதலாளிகளுக்கு நன்மை செய்வதற்காகத் தான் இச்சட்டங்களை மாற்றி வருகிறார். எனவே இதை எதிர்த்து நாடு முழுவதும் உள்ள தொழிலார்கள் இன்று கருப்பு நாளாக அறிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்’ என்றார்.

சென்னை அண்ணா சாலையில் உள்ள தபால் நிலையம் முன்பு மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அச்சங்கத்தின் பொதுச்செயலாளர் துரைபாண்டியன், ‘மத்திய அரசுக்கு நாடளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இருக்கின்ற ஒரே காரணத்தினால் இந்திய தேசத்தை பாதிக்கின்ற வகையில், பல்வேறு சட்டங்களை குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றி வருகிறது.

மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

இதில் குறிப்பாக கடந்த ஜூலை 23ஆம் தேதி பல்வேறு தொழிலாளர் நலச்சட்டங்களை மாற்றும் நோக்கில் 44ஆக இருக்கின்ற சட்டங்களை நான்கு சட்டங்களாக குறைப்பேன் என்று சட்டங்களுக்கு மாற்று திட்டங்கள் வகுத்துள்ளனர். மோடி கார்ப்பரேட் முதலாளிகளுக்கு நன்மை செய்வதற்காகத் தான் இச்சட்டங்களை மாற்றி வருகிறார். எனவே இதை எதிர்த்து நாடு முழுவதும் உள்ள தொழிலார்கள் இன்று கருப்பு நாளாக அறிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்’ என்றார்.

Intro:Body:மோடி முதலாளிகளுக்கு நன்மை செய்வதற்காக தொழிலார் நலச்சட்டங்களை மாற்றி அமைக்கிறார் என மத்திய அரசு ஊழியர் மக சம்மேளனம் பொதுச்செயலாளர் துரைபாண்டியன் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூலை 23 ஆம் தேதி மத்திய அரசு பல்வேறு தொழிலார் நலச்சட்டங்களை பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது. இதற்கு பல தொழில்சங்கங்கள் எதிரிபு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இன்று சென்னை அண்ணா சாலை தபால் நிலையம் முன்பு மத்திய அரசு ஊழியர் மக சம்மேளனம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பின்னர் செய்தியரளகளிடம் பேசிய மத்திய அரசு ஊழியர் மக சம்மேளனம் பொதுச்செயலாளர் துரைபாண்டியன் கூறுகையில்,
மத்திய அரசாங்கத்திற்கு பாராளுமன்றத்தில் மெஜாரிட்டி இருக்கின்ற ஒரே காரணத்தினால் இந்தியா தேசத்தை பாதிக்கின்ற பல்வேறு சட்டங்களை குரல் வாக்கு எடுப்பு மூலம் நிறைவேற்றி கொண்டு இருக்கிறது.

குறிப்பாக கடந்த ஜூலை 23 ஆம் தேதி பல்வேறு தொழிலார் நலச்சட்டங்களை மற்றும் நோக்கில் 44 ஆக இருக்கின்ற சட்டங்களை 4 சட்டங்களாக குறைப்பேன் என்று சட்டங்களுக்கு மாற்று திட்டங்கள் வகுத்துள்ளனர். குறைந்த பட்சம் ஊதியம் என்று இந்தியா நாடு ஒன்றாக கேட்பது 18,000 ரூபாய். ஆனால் இந்த சட்ட திருத்தத்தின் படி குறைந்த பட்சம் ஊதியம் என்பது வெறும் 4,624 ரூபாய் என்று மத்திய அரசாங்கம் சட்டத்திலே முன் முடிவு செய்துள்ளார்.

இதுபோல் பல்வேறு சட்டங்களை ஒன்றாக்கி அதன் மூலம் ஏற்படும் நன்மைகளை தடுக்க நினைக்கிறார்கள். மோடி அவர்கள் முதலாளிகளுக்கு நன்மை செய்வதற்காகத்தான் இந்த சட்டங்களை மாற்றி வருகிறார். எனவே இதை நாடு முழுவதும் உள்ள தொழிலார்கள் இன்று கருப்பு நாளாக ஆர்ப்பாட்டம் நடத்திவருகின்றனர். மத்திய அரசாங்கம் இந்த சட்டங்களை கைவிடவில்லை என்றல் மீண்டும் இந்தியா முழுவதும் அணைத்து தொழில் சங்கங்களும் ஒன்றினைந்து மாபெரும் வேலைநிறுத்தம் நடத்தப்படும் நிலை உருவாகும்.

மத்திய அரசாங்கம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றிய தொழிலார்களுக்கான சட்ட மசோதாவை திரும்ப பெறவேண்டும், தொழிலார்களையும், முதலாளிகளையும் அரசாங்கம் ஒன்றாக அழைத்து முக்கூட்டு மாநாடு நடத்தி ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை இந்த ஆர்ப்பாட்டம் மூலம் முன்வைக்கின்றோம். Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.