ETV Bharat / state

பெண்களை மிரட்டும் கருப்பை வாய்ப் புற்றுநோய்.. காரணம் என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 17, 2023, 2:21 PM IST

Updated : Sep 17, 2023, 5:25 PM IST

Cervical Cancer Awareness: கருப்பை வாய்ப் புற்றுநோய் குறித்து பல்வேறு அறிவுரைகளை அரசு மகப்பேறு மற்றும் மகளிர் நோயியல் நிலையத்தின் புற்றுநோய் பிரிவு உதவி பேராசிரியர் மருத்துவர் கவிதா சுகுமாரன் வழங்கி உள்ளார்.

Cervical Cancer Awareness
பெண்களை மிரட்டும் கருப்பை வாய்ப் புற்றுநோய்
அரசு மகப்பேறு மற்றும் மகளிர் நோயியல் நிலையத்தின் புற்றுநோய் பிரிவு உதவி பேராசிரியர் மருத்துவர் கவிதா சுகுமாரன் அளித்த பேட்டி

சென்னை: தற்போது மாறியுள்ள உணவுப் பழக்க வழக்கம் காரணமாகவும் இளம் பெண்களுக்கும் கருப்பை வாய் புற்றுநோய் வருகிறது எனவும் உடல் பருமன் காரணமாக புற்றுநோய் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது என அரசு மகப்பேறு மற்றும் மகளிர் நோயியல் நிலையத்தின் புற்றுநோய் பிரிவு உதவி பேராசிரியர் மருத்துவர் கவிதா சுகுமாரன் தெரிவித்தார்.

ஈ டிவி பாரத்திற்கு அளித்த சிறப்புப் பேட்டியில், "பெண்களுக்கு பொதுவாக மார்பக புற்றுநோய் மற்றும் கருப்பை வாய்ப் புற்றுநோய் வருகிறது. இதில் மார்பக புற்றுநோய் உலக அளவிலும் தற்போது அதிகரித்து வருகிறது. கருப்பை வாய்ப் புற்றுநோய் தற்போது உலகளவில் குறைந்து கொண்டு வருவது நல்ல அறிகுறியாக இருக்கிறது. இந்த இரண்டு வகை புற்று நோய்க்குக் குறித்தும் பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய மிகவும் அவசியமாகும்.

HBV வைரஸ்: கருப்பை வாய்ப் புற்றுநோய் HBV என்ற வைரஸ் கிருமித் தொற்றினால் ஏற்படும். உடல் உறவின் போதுகூட இந்த வைரஸ் தொற்று பெண்களுக்கு வர வாய்ப்புள்ளது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் உள்ளவர்களுக்கு அந்த வைரஸ் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.

மேலும் பெண் உடம்பிற்குள் சென்ற HBV வைரஸ் ஒரு செல்லில் அமர்ந்து உடலில் சுமார் 30 ஆண்டுகளுக்குப் பின்னர் அது உடல் பலவீனம் அடையும் பொழுது, புற்று நோயாக அறிகுறி காண்பிக்கவும் வாய்ப்புள்ளது. ஆனால், அதனை முன்கூட்டியே கண்டறிந்து தடுக்க முடியும்.

பெண்களுக்கு விழிப்புணர்வு இல்லாததால் அது புற்றுநோயாக மாறி இரண்டு அல்லது மூன்றாவது நிலையை அடையும் பொழுது தான் சிகிச்சை பெறுவதற்கே வருகின்றனர். இந்த நிலையில் வரும்பொழுது சிகிச்சை அளித்தாலும் அதன் பலன் அதிக அளவில் இருப்பதில்லை.

HBV தடுப்பூசி: கருப்பை வாய்ப் புற்றுநோய் என்பது ஒரு நல்ல நோய் என கூறலாம். காரணம், இளம் வயதினருக்கு வருவதில்லை. மேலும், நோய்த் தொற்றின் மூலமாக மட்டுமே வருகிறது. இதனைத் தடுப்பதற்கு HBV தடுப்பூசிகள் உள்ளன. மத்திய மாநில அரசுகள் வழங்குகின்றன.

மேலும், பள்ளி மாணவிகளுக்கும் HBV வைரஸ் தடுப்பூசி போடலாமா என்பது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. HBV தடுப்பூசி ஒன்பது வயது முதல் 16 வயதிற்கு உட்பட்ட வளரிளம் பெண்களுக்குக் கொடுக்க வேண்டும். அதிகபட்சமாக 26 வயது வரை பெண்களுக்குக் கொடுக்கலாம். உடலுறவு கொள்வதற்கு முன்னர் இந்த தடுப்பூசியைக் கொடுக்க வேண்டும்.

பரிசோதனை: தடுப்பூசி போடாதவர்கள் திருமணம் செய்த பின்னர் அவர்கள் குறிப்பிட்ட நாட்கள் இடைவெளியில் பரிசோதனை செய்ய வேண்டும். 30 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் HBV வைரஸ் இருக்கிறதா என்பதை புற நோயாளிகள் பிரிவில் ஐந்து நிமிடத்தில் பரிசோதனை செய்து கொள்ளலாம்.

இந்த பரிசோதனை ஐந்தாண்டுக்கு ஒரு முறை செய்ய வேண்டும். அப்பொழுதுதான் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் வருகிறதா என்பதை எளிதாகக் கண்டறிய முடியும். தமிழ்நாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் உட்பட அனைத்திலும் இந்த பரிசோதனை வசதி உள்ளது.

நாம் சர்க்கரை ரத்த அழுத்தம் போன்றவற்றிற்குப் பரிசோதனை செய்து கொள்வது போல் தற்காத்துக் கொள்வதற்கு HBV பரிசோதனையும் செய்து கொள்ள வேண்டும். ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை தொடர்ந்து பரிசோதனை செய்யும் பொழுது அதில் சிறிய மாற்றங்கள் தெரிந்தாலும் அறிகுறியைக் கண்டறிந்து முன்கூட்டியே சிகிச்சை அளித்தால் எளிதில் குணப்படுத்தி விடலாம்.

பெண்களிடம் உள்ள விழிப்புணர்வு குறைவு அழைத்து வருவதற்கு ஆள் இல்லாமல் வெளியே சொல்வதற்குத் தயக்கம் போன்ற காரணங்களால் கால தாமதமாக வருவதால் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதிலும் சிரமமாக உள்ளது. கருப்பை வாய்ப் புற்றுநோய் நிலை இரண்டு அல்லது மூன்றில் வந்தாலும் அவர்கள் முழு சிகிச்சையும் எடுக்க வேண்டும் அவ்வாறு எடுக்காமல் பாதியில் விட்டுச் செல்கின்றனர் இதனால் அவர்களை முழுவதும் குணப்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது.

அறிகுறிகள்: கருப்பை வாய்ப் புற்றுநோய் வருவதற்கான அறிகுறிகளாக வெள்ளைப்படுதல், மாதவிடாய் நேரத்தில் அதிக அளவில் ரத்தப்போக்கு, குறிப்பிட்ட கால இடைவெளியில் மாதவிடாய் வராமல் இருத்தல். மேலும் மாதவிடாய் நின்ற பின்னர் ரத்தப் போக்கு இருந்தால் பெண்கள் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

அது போன்ற நேரத்தில் கருப்பை வாய்ப் புற்றுநோயோ அல்லது கருப்பைக்குள் புற்றுநோய் இருப்பதற்கோ வாய்ப்புள்ளது. கணவன் மனைவி உடலுறவு கொண்ட பின்னர் ரத்தப்போக்கு வந்தால் நிச்சயம் பரிசோதனை செய்ய வேண்டும்.

நோய் முற்றிய நிலையில் அடிவயிற்றில் வலி, சிறுநீரக கசிவு, மலம் கழிப்பதில் இரத்த கசிவு போன்ற அறிகுறிகள் வரும். தற்பொழுது இதுபோன்ற அறிகுறிகளுடன் ஆரம்ப நிலையில் வரும் நோயாளிகளை 100% முழுமையாக குணப்படுத்த முடியும்.

பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்: புற்றுநோய் வந்த நோயாளிகளுக்கு வீட்டில் உள்ள பிரச்சனைகள் அவர்களை அழைத்து வருவதற்கு ஆள் இல்லாதது மேலும் ஒரு மாதம் தங்கி சிகிச்சை பெறுவதற்கு உடன் இருப்பதற்கு ஆட்கள் இல்லாமல் இருப்பது வாழ்வாதாரத்திற்காகத் தினமும் வேலைக்குச் செல்வது போன்ற பிரச்சனைகளைப் பெண்கள் எதிர்கொள்கின்றனர். பெண்களுக்கு நோய் வலி தாங்க முடியுமா? சிகிச்சையின் வழியைத் தாங்க முடியுமா? என்ற பயமும் இருக்கின்றன.

புற்றுநோய் ஒரு தொற்று நோய் அல்ல எனவே வீட்டில் உள்ளவர்களுக்கு அது பரவாது நோய் வந்தவர்கள் முழு சிகிச்சையும் எடுத்துக் கொள்வதற்கு வீட்டில் உள்ளவர்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் அவ்வாறு அளித்தால் அவர்களை முழுமையாகக் குணப்படுத்த முடியும்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்குத் தான் கருப்பை வாய்ப் புற்றுநோய் வருகிறது அதனால் பெண்கள் குழந்தை பெறுவதில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. ஆனால் இளம் வயதினருக்கு ரத்த புற்றுநோய் அல்லது மார்பகப் புற்றுநோய் தற்பொழுது வருவதைப் பார்க்கிறோம்.

25 வயது பெண்களுக்கும் மார்பக புற்றுநோய் தற்போது வருகின்றன. இவர்கள் கருத்தரித்து குழந்தை பிறப்பதில் சிக்கல்கள் உள்ளது. சில புற்றுநோய்கள் 15 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கு வருகின்றன இவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் போது அவர்களின் குழந்தைப் பேறு மற்றும் கருத்தரித்தலையும் கணக்கில் கொண்டு தான் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

உணவு முறைகள்: கருப்பையினுள் வரக்கூடிய புற்றுநோய் தற்பொழுது அதிகளவில் வருகின்றது. இந்த புற்றுநோய் உடல் பருமனால் வருகிறது. மேலும் வாழ்க்கை முறை மாற்றத்தால் அதிகளவில் ஜங்க் ஃபுட் (Junk food) உட்கொள்கின்றனர். வளரிளம் பருவத்தில் உள்ளவர்களுக்கு மாதவிடாய் குறிப்பிட்ட நாட்களில் வராவிட்டால் அதுவும் பிரச்சனை தான்.

20 ஆண்டுகளுக்கு முன்னர் 25 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கருப்பையினுள் புற்றுநோய் வந்து பார்த்தது இல்லை. ஆனால் தற்பொழுது இதன் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. உணவு பழக்க வழக்கம் மற்றும் ஜங்க் ஃபுட் உட் கொள்வதால் புற்றுநோய் வரும் என்பது இளம் வயதினருக்குத் தெரிவதில்லை.

எனவே உடல் எடையை சரியாக பராமரித்து உணவை அளவாக எடுத்துக் கொள்ள வேண்டும் மேலும் பழம் மற்றும் காய்கறி போன்ற உணவுகள் புற்று நோய்க்கு நல்ல மருந்தாக உள்ளது. வீடுகளில் குழந்தைகளுக்கு நொறுக்குத் தீனியாக ஜங்க் ஃபுட் போன்றவற்றை அளிப்பதை விட்டுவிட்டு பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை அளிக்க வேண்டும். ஆரோக்கியமான உணவுகளை உண்பதால் உடல் நலத்திற்கு நல்லது" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: இந்தியாவில் 10-ல் 6 பெண்களுக்கு இரத்தசோகை.. ஆய்வு முடிவு கூறும் அதிர்ச்சி தகவல்!

அரசு மகப்பேறு மற்றும் மகளிர் நோயியல் நிலையத்தின் புற்றுநோய் பிரிவு உதவி பேராசிரியர் மருத்துவர் கவிதா சுகுமாரன் அளித்த பேட்டி

சென்னை: தற்போது மாறியுள்ள உணவுப் பழக்க வழக்கம் காரணமாகவும் இளம் பெண்களுக்கும் கருப்பை வாய் புற்றுநோய் வருகிறது எனவும் உடல் பருமன் காரணமாக புற்றுநோய் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது என அரசு மகப்பேறு மற்றும் மகளிர் நோயியல் நிலையத்தின் புற்றுநோய் பிரிவு உதவி பேராசிரியர் மருத்துவர் கவிதா சுகுமாரன் தெரிவித்தார்.

ஈ டிவி பாரத்திற்கு அளித்த சிறப்புப் பேட்டியில், "பெண்களுக்கு பொதுவாக மார்பக புற்றுநோய் மற்றும் கருப்பை வாய்ப் புற்றுநோய் வருகிறது. இதில் மார்பக புற்றுநோய் உலக அளவிலும் தற்போது அதிகரித்து வருகிறது. கருப்பை வாய்ப் புற்றுநோய் தற்போது உலகளவில் குறைந்து கொண்டு வருவது நல்ல அறிகுறியாக இருக்கிறது. இந்த இரண்டு வகை புற்று நோய்க்குக் குறித்தும் பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய மிகவும் அவசியமாகும்.

HBV வைரஸ்: கருப்பை வாய்ப் புற்றுநோய் HBV என்ற வைரஸ் கிருமித் தொற்றினால் ஏற்படும். உடல் உறவின் போதுகூட இந்த வைரஸ் தொற்று பெண்களுக்கு வர வாய்ப்புள்ளது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் உள்ளவர்களுக்கு அந்த வைரஸ் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.

மேலும் பெண் உடம்பிற்குள் சென்ற HBV வைரஸ் ஒரு செல்லில் அமர்ந்து உடலில் சுமார் 30 ஆண்டுகளுக்குப் பின்னர் அது உடல் பலவீனம் அடையும் பொழுது, புற்று நோயாக அறிகுறி காண்பிக்கவும் வாய்ப்புள்ளது. ஆனால், அதனை முன்கூட்டியே கண்டறிந்து தடுக்க முடியும்.

பெண்களுக்கு விழிப்புணர்வு இல்லாததால் அது புற்றுநோயாக மாறி இரண்டு அல்லது மூன்றாவது நிலையை அடையும் பொழுது தான் சிகிச்சை பெறுவதற்கே வருகின்றனர். இந்த நிலையில் வரும்பொழுது சிகிச்சை அளித்தாலும் அதன் பலன் அதிக அளவில் இருப்பதில்லை.

HBV தடுப்பூசி: கருப்பை வாய்ப் புற்றுநோய் என்பது ஒரு நல்ல நோய் என கூறலாம். காரணம், இளம் வயதினருக்கு வருவதில்லை. மேலும், நோய்த் தொற்றின் மூலமாக மட்டுமே வருகிறது. இதனைத் தடுப்பதற்கு HBV தடுப்பூசிகள் உள்ளன. மத்திய மாநில அரசுகள் வழங்குகின்றன.

மேலும், பள்ளி மாணவிகளுக்கும் HBV வைரஸ் தடுப்பூசி போடலாமா என்பது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. HBV தடுப்பூசி ஒன்பது வயது முதல் 16 வயதிற்கு உட்பட்ட வளரிளம் பெண்களுக்குக் கொடுக்க வேண்டும். அதிகபட்சமாக 26 வயது வரை பெண்களுக்குக் கொடுக்கலாம். உடலுறவு கொள்வதற்கு முன்னர் இந்த தடுப்பூசியைக் கொடுக்க வேண்டும்.

பரிசோதனை: தடுப்பூசி போடாதவர்கள் திருமணம் செய்த பின்னர் அவர்கள் குறிப்பிட்ட நாட்கள் இடைவெளியில் பரிசோதனை செய்ய வேண்டும். 30 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் HBV வைரஸ் இருக்கிறதா என்பதை புற நோயாளிகள் பிரிவில் ஐந்து நிமிடத்தில் பரிசோதனை செய்து கொள்ளலாம்.

இந்த பரிசோதனை ஐந்தாண்டுக்கு ஒரு முறை செய்ய வேண்டும். அப்பொழுதுதான் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் வருகிறதா என்பதை எளிதாகக் கண்டறிய முடியும். தமிழ்நாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் உட்பட அனைத்திலும் இந்த பரிசோதனை வசதி உள்ளது.

நாம் சர்க்கரை ரத்த அழுத்தம் போன்றவற்றிற்குப் பரிசோதனை செய்து கொள்வது போல் தற்காத்துக் கொள்வதற்கு HBV பரிசோதனையும் செய்து கொள்ள வேண்டும். ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை தொடர்ந்து பரிசோதனை செய்யும் பொழுது அதில் சிறிய மாற்றங்கள் தெரிந்தாலும் அறிகுறியைக் கண்டறிந்து முன்கூட்டியே சிகிச்சை அளித்தால் எளிதில் குணப்படுத்தி விடலாம்.

பெண்களிடம் உள்ள விழிப்புணர்வு குறைவு அழைத்து வருவதற்கு ஆள் இல்லாமல் வெளியே சொல்வதற்குத் தயக்கம் போன்ற காரணங்களால் கால தாமதமாக வருவதால் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதிலும் சிரமமாக உள்ளது. கருப்பை வாய்ப் புற்றுநோய் நிலை இரண்டு அல்லது மூன்றில் வந்தாலும் அவர்கள் முழு சிகிச்சையும் எடுக்க வேண்டும் அவ்வாறு எடுக்காமல் பாதியில் விட்டுச் செல்கின்றனர் இதனால் அவர்களை முழுவதும் குணப்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது.

அறிகுறிகள்: கருப்பை வாய்ப் புற்றுநோய் வருவதற்கான அறிகுறிகளாக வெள்ளைப்படுதல், மாதவிடாய் நேரத்தில் அதிக அளவில் ரத்தப்போக்கு, குறிப்பிட்ட கால இடைவெளியில் மாதவிடாய் வராமல் இருத்தல். மேலும் மாதவிடாய் நின்ற பின்னர் ரத்தப் போக்கு இருந்தால் பெண்கள் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

அது போன்ற நேரத்தில் கருப்பை வாய்ப் புற்றுநோயோ அல்லது கருப்பைக்குள் புற்றுநோய் இருப்பதற்கோ வாய்ப்புள்ளது. கணவன் மனைவி உடலுறவு கொண்ட பின்னர் ரத்தப்போக்கு வந்தால் நிச்சயம் பரிசோதனை செய்ய வேண்டும்.

நோய் முற்றிய நிலையில் அடிவயிற்றில் வலி, சிறுநீரக கசிவு, மலம் கழிப்பதில் இரத்த கசிவு போன்ற அறிகுறிகள் வரும். தற்பொழுது இதுபோன்ற அறிகுறிகளுடன் ஆரம்ப நிலையில் வரும் நோயாளிகளை 100% முழுமையாக குணப்படுத்த முடியும்.

பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்: புற்றுநோய் வந்த நோயாளிகளுக்கு வீட்டில் உள்ள பிரச்சனைகள் அவர்களை அழைத்து வருவதற்கு ஆள் இல்லாதது மேலும் ஒரு மாதம் தங்கி சிகிச்சை பெறுவதற்கு உடன் இருப்பதற்கு ஆட்கள் இல்லாமல் இருப்பது வாழ்வாதாரத்திற்காகத் தினமும் வேலைக்குச் செல்வது போன்ற பிரச்சனைகளைப் பெண்கள் எதிர்கொள்கின்றனர். பெண்களுக்கு நோய் வலி தாங்க முடியுமா? சிகிச்சையின் வழியைத் தாங்க முடியுமா? என்ற பயமும் இருக்கின்றன.

புற்றுநோய் ஒரு தொற்று நோய் அல்ல எனவே வீட்டில் உள்ளவர்களுக்கு அது பரவாது நோய் வந்தவர்கள் முழு சிகிச்சையும் எடுத்துக் கொள்வதற்கு வீட்டில் உள்ளவர்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் அவ்வாறு அளித்தால் அவர்களை முழுமையாகக் குணப்படுத்த முடியும்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்குத் தான் கருப்பை வாய்ப் புற்றுநோய் வருகிறது அதனால் பெண்கள் குழந்தை பெறுவதில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. ஆனால் இளம் வயதினருக்கு ரத்த புற்றுநோய் அல்லது மார்பகப் புற்றுநோய் தற்பொழுது வருவதைப் பார்க்கிறோம்.

25 வயது பெண்களுக்கும் மார்பக புற்றுநோய் தற்போது வருகின்றன. இவர்கள் கருத்தரித்து குழந்தை பிறப்பதில் சிக்கல்கள் உள்ளது. சில புற்றுநோய்கள் 15 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கு வருகின்றன இவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் போது அவர்களின் குழந்தைப் பேறு மற்றும் கருத்தரித்தலையும் கணக்கில் கொண்டு தான் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

உணவு முறைகள்: கருப்பையினுள் வரக்கூடிய புற்றுநோய் தற்பொழுது அதிகளவில் வருகின்றது. இந்த புற்றுநோய் உடல் பருமனால் வருகிறது. மேலும் வாழ்க்கை முறை மாற்றத்தால் அதிகளவில் ஜங்க் ஃபுட் (Junk food) உட்கொள்கின்றனர். வளரிளம் பருவத்தில் உள்ளவர்களுக்கு மாதவிடாய் குறிப்பிட்ட நாட்களில் வராவிட்டால் அதுவும் பிரச்சனை தான்.

20 ஆண்டுகளுக்கு முன்னர் 25 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கருப்பையினுள் புற்றுநோய் வந்து பார்த்தது இல்லை. ஆனால் தற்பொழுது இதன் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. உணவு பழக்க வழக்கம் மற்றும் ஜங்க் ஃபுட் உட் கொள்வதால் புற்றுநோய் வரும் என்பது இளம் வயதினருக்குத் தெரிவதில்லை.

எனவே உடல் எடையை சரியாக பராமரித்து உணவை அளவாக எடுத்துக் கொள்ள வேண்டும் மேலும் பழம் மற்றும் காய்கறி போன்ற உணவுகள் புற்று நோய்க்கு நல்ல மருந்தாக உள்ளது. வீடுகளில் குழந்தைகளுக்கு நொறுக்குத் தீனியாக ஜங்க் ஃபுட் போன்றவற்றை அளிப்பதை விட்டுவிட்டு பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை அளிக்க வேண்டும். ஆரோக்கியமான உணவுகளை உண்பதால் உடல் நலத்திற்கு நல்லது" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: இந்தியாவில் 10-ல் 6 பெண்களுக்கு இரத்தசோகை.. ஆய்வு முடிவு கூறும் அதிர்ச்சி தகவல்!

Last Updated : Sep 17, 2023, 5:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.