ETV Bharat / state

குற்றவாளிகளுக்கு சிசிடிவி கருவிகள் ஒரு ‘செக் மேட்’ - விஸ்வநாதன் ஆனந்த்!

author img

By

Published : May 11, 2019, 6:42 PM IST

சென்னை: சிசிடிவி கருவிகள் பொருத்துவதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் செஸ் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் நடித்துள்ள 'மூன்றாவது கண்' குறும்படம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வெளியிடப்பட்டது.

சென்னை

அப்போது பேசிய செஸ் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த், ‘சிசிடிவி கருவிகளால் குற்றங்கள் குறைந்துள்ளதோடு பாதுகாப்பாகவும் உணர்கிறோம். இந்த நிகழ்வில் பங்கேற்றது மகிழ்ச்சியளிக்கிறது. குற்றவாளிகளுக்கு சிசிடிவி கருவிகள் ஒரு செக் மேட்’ என்றார்.

குற்றவாளிகளுக்கு சிசிடிவி கருவிகள் ஒரு ‘செக் மேட்’ - விஸ்வநாதன் ஆனந்த்!

பின்னர் பேசிய காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், ‘ஒவ்வொரு 50 மீட்டர் தொலைவிலும் ஒரு சிசிடிவி கருவி பொருத்தும் பணிகளை முடித்துள்ளோம். சிசிடிவி கருவிகள் மூலமாக உடனடியாக குற்றவாளிகளை பிடிக்க முடிகிறது. காவலர்களின் பணிகளை விரைந்து முடிப்பதற்கு இது உதவியாக உள்ளது. அதேபோல், குற்றவாளிகளின் முகங்களை ஸ்கேன் செய்து தகவல் தெரிவிக்கும் வகையில் சிசிடிவி கேமராக்களில் புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வர வேண்டும். சிசிடிவி கருவிகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கவே மூன்று குறும்படத்தை வெளியிட்டுள்ளோம்” என தெரிவித்தார்.

அப்போது பேசிய செஸ் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த், ‘சிசிடிவி கருவிகளால் குற்றங்கள் குறைந்துள்ளதோடு பாதுகாப்பாகவும் உணர்கிறோம். இந்த நிகழ்வில் பங்கேற்றது மகிழ்ச்சியளிக்கிறது. குற்றவாளிகளுக்கு சிசிடிவி கருவிகள் ஒரு செக் மேட்’ என்றார்.

குற்றவாளிகளுக்கு சிசிடிவி கருவிகள் ஒரு ‘செக் மேட்’ - விஸ்வநாதன் ஆனந்த்!

பின்னர் பேசிய காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், ‘ஒவ்வொரு 50 மீட்டர் தொலைவிலும் ஒரு சிசிடிவி கருவி பொருத்தும் பணிகளை முடித்துள்ளோம். சிசிடிவி கருவிகள் மூலமாக உடனடியாக குற்றவாளிகளை பிடிக்க முடிகிறது. காவலர்களின் பணிகளை விரைந்து முடிப்பதற்கு இது உதவியாக உள்ளது. அதேபோல், குற்றவாளிகளின் முகங்களை ஸ்கேன் செய்து தகவல் தெரிவிக்கும் வகையில் சிசிடிவி கேமராக்களில் புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வர வேண்டும். சிசிடிவி கருவிகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கவே மூன்று குறும்படத்தை வெளியிட்டுள்ளோம்” என தெரிவித்தார்.

சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் 'மூன்றாவது கண்' குறும்படம் இன்று சென்னை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் வெளியிடப்பட்டது. இக்குறும்படத்தில் நடித்துள்ள செஸ் விளையாட்டின் கிராண்ட் மாஸ்டர் பத்மவிபூசன் விஸ்வநாதன் ஆனந்த் இதனை வெளியிட்டார்.

அப்போது பேசிய விஷ்வநாதன் ஆனந்த், "  சிசிடிவி கேமராக்களால் நாம் பாதுகாப்பாக உணர்கிறோம். இதன்மூலம் குற்றங்கள் குறைந்துள்ளது. இதில் பங்கேற்றதற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன். குற்றவாளிகளுக்கு சிசிடிவி கேமராக்களால் உண்மையில் ஒரு செக் மேட்" என்று தெரிவித்தார்.

பின்னர் பேசிய காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன், "நகர் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தியதன் மூலம் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தியுள்ளோம். சிசிடிவி கேமராக்கள் காவல்துறையினரின் பணிகளை மாற்றி அமைத்துள்ளது. இதன் மூலம் உடனடியாகவும், துள்ளியமாகவும் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவும் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றவும் முடிகிறது. பணியை இன்னும் நன்றாக மேற்கொள்ள சிசிடிவி கேமராக்கள் உதவுகிறது. 

குற்றாவளியின் முகத்தை ஸ்கேன் செய்து தகவல் தெரிவிக்கும் வகையில் சிசிடிவி கேமராக்களில் புதிய தொழில்நுட்பம் கொண்டுவர வேண்டும். சிசிடிவி கேமராக்கள் மிக முக்கியமான இன்றியமையாத ஒரு அங்கமாக செயல்படுகிறது.

ஒவ்வொரு 50 மீட்டர் தொலைவிலும் ஒரு கேமரா பொருத்த வேண்டும் என்று பணிகளை முடித்துள்ளோம். இது மேலும் அதிகமாக 10 மீட்டருக்கு ஒரு கேமரா என்று பொருத்தப்பட வேண்டும். அந்த வகையில் சிசிடிவி கேமராக்கள் ஒவ்வொரு வீட்டிலும், அலுவலகங்களிலும் இருக்க வேண்டும். இதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே 3 குறும்படத்தை வெளியிட்டுள்ளோம்" என்று தெரிவித்தார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.