ETV Bharat / state

புகைப்படங்களை வைத்து மிரட்டுகிறார் - முன்னாள் காதலன் மீது நடிகை புகார் - புகைப்படங்களை வைத்து மிரட்டும் முன்னாள் காதலன்

சென்னை: காதலிக்கும்போது நெருக்கமாக எடுத்த புகைப்படங்களை வைத்து மிரட்டுவதாக தொலைக்காட்சி நடிகை முன்னாள் காதலர் மீது புகார் அளித்துள்ளார்.

case filed against actress lover
author img

By

Published : Sep 22, 2019, 5:30 PM IST

Updated : Sep 22, 2019, 6:00 PM IST

வடபழனி ஆற்காடு சாலை பகுதியைச் சேர்ந்தவர் ஜெனிஃபர். துணை நடிகையாக சினிமா, தொலைக்காட்சி, குறும்படங்களில் நடித்துவருகிறார். இவர் நேற்றிரவு வடபழனி காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அதில், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த பக்ருதீன் என்பவர் எனக்கு அறிமுகமானார். மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த இவர் கடந்த வருடம் என்னை காதலிப்பதாக கூறியதால் அவருடன் நெருங்கி பழகி வந்தேன்.

ஆனால், சில நாட்களாக அவருடன் நெருக்கமாக இருந்த படுக்கையறை காட்சிகளை வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு பணம் கேட்டு மிரட்டிவருகிறார். ஏற்கனவே இதுகுறித்து புழல், திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளித்ததன்பேரில், பக்ருதீனை காவல் துறையினர் எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று என் வீட்டிற்கு வந்த பக்ருதீன் எனது தாயை கொலை செய்துவிடுவதாகக் கூறியுள்ளார். எனவே, பக்ருதீன் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த வடபழனி மகளிர் போலீசார் பக்ருதீன் மீது கொலை மிரட்டல், வன்கொடுமை உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: நித்தி ஆசிரமத்தில் பல அட்டூழியங்கள்- விவரங்கள் உள்ளே

வடபழனி ஆற்காடு சாலை பகுதியைச் சேர்ந்தவர் ஜெனிஃபர். துணை நடிகையாக சினிமா, தொலைக்காட்சி, குறும்படங்களில் நடித்துவருகிறார். இவர் நேற்றிரவு வடபழனி காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அதில், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த பக்ருதீன் என்பவர் எனக்கு அறிமுகமானார். மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த இவர் கடந்த வருடம் என்னை காதலிப்பதாக கூறியதால் அவருடன் நெருங்கி பழகி வந்தேன்.

ஆனால், சில நாட்களாக அவருடன் நெருக்கமாக இருந்த படுக்கையறை காட்சிகளை வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு பணம் கேட்டு மிரட்டிவருகிறார். ஏற்கனவே இதுகுறித்து புழல், திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளித்ததன்பேரில், பக்ருதீனை காவல் துறையினர் எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று என் வீட்டிற்கு வந்த பக்ருதீன் எனது தாயை கொலை செய்துவிடுவதாகக் கூறியுள்ளார். எனவே, பக்ருதீன் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த வடபழனி மகளிர் போலீசார் பக்ருதீன் மீது கொலை மிரட்டல், வன்கொடுமை உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: நித்தி ஆசிரமத்தில் பல அட்டூழியங்கள்- விவரங்கள் உள்ளே

Intro:Body:ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 22.09.19

தொலைக்காட்சி நடிகையை காதலிப்பதாக கூறி நெருக்கமாக எடுத்த புகைப்படங்களை வைத்து மிரட்டிய நபர் மீது வழக்கு..

வடபழனி ஆற்காடு சாலை பகுதியைச் சேர்ந்தவர் ஜெனிபர் துனை நடிகை சினிமா தொலைக்காட்சி மற்றும் குறும்பட ஜெனிபர் நேற்று இரவு வடபழனி போலிசில் புகார் மனு ஒன்றை அளித்தார் அதில் கூறியிருப்பதாவது : கடந்த 3ஆண்டுகளுக்கு முன்பு திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த பக்ருதீன் என்பவர் எனக்கு அறிமுகமானார் மனைவியை பிரிந்து வாழந்து வந்த பக்ருதீன் கடந்த வருடம் என்னை காதலிப்பதாக கூறினார் இதை தொடர்ந்து அவருடன் நெருங்கி பழகி வந்தேன் ஆனால் பக்ருதீன் நான் அவருடன் நெருக்கமாக இருந்த படுக்கையறை காட்சிகளை வீடியோ படம் எடுத்து வைத்து கொண்டு பணம் கேட்டு மிரட்டி வருகிறார் ஏற்கனவே புழல் திருவல்லிக்கேணி போலிஸ் நிலையத்தில் புகார் அளித்தேன் அங்கு விசாரணை நடத்திய போலிசார் பக்ருதீனை எச்சரித்து அனுப்பி வைத்தனர் இந்த நிலையில் நேற்று என் வீட்டிற்கு வந்த பக்ருதீன் எனது தாயை கொலை செய்து விடுவதாக கூறிவிட்டு சென்றார் ஆகவே பக்ருதீன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த வடபழனி மகளிர் போலீசார் பக்ருதீன் மீது கொலை மிரட்டல் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட 3பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்...

tn_che_05_case_filed_against_a_man_who_threatened_tv_actor_script_7204894Conclusion:
Last Updated : Sep 22, 2019, 6:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.