ETV Bharat / state

இடைத்தேர்தலில் அதிமுக பணப்பட்டுவாடா: 9 நெடுஞ்சாலைத் துறை அலுவலர்கள் மீது புகார்! - by election current update

சென்னை: நெடுஞ்சாலைத் துறை அலுவலர்கள் மூலம் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் அதிமுக பணப்பட்டுவாடா செய்வதாக திமுக வழக்கறிஞர் செயலாளர் கிரிராஜன் தலைமை தேர்தல் அலுவலரிடம் புகார் அளித்துள்ளார்.

girirajan
author img

By

Published : Oct 19, 2019, 4:21 PM IST

இது குறித்து, சென்னையில் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலரிடம் புகார் மனு அளித்துவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்த கிரிராஜன்,

"தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை தலைமைப் பொறியாளர் என். பாலமுருகன் தலைமையில் ஒன்பது நெடுஞ்சாலைத் துறை அலுவலர்கள் மூலம் அரசு வாகனத்தை வைத்து அதிமுக அரசு இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா செய்துவருகிறது.

திமுக வழக்கறிஞர் செயலாளர் கிரிராஜன்

என்ன விலை கொடுத்தேனும் இந்த இடைத்தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காகவே அதிமுக தலைமை இப்படி செய்துவருகிறது. இது குறித்து ஆதாரத்துடன் தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகுவிடம் புகார் மனு அளித்துள்ளேன். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்" என்றார்.

மேலும் படிங்க: நாங்குநேரி இடைத்தேர்தலை ஒத்திவைக்க கோரிய மனு தள்ளுபடி

இது குறித்து, சென்னையில் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலரிடம் புகார் மனு அளித்துவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்த கிரிராஜன்,

"தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை தலைமைப் பொறியாளர் என். பாலமுருகன் தலைமையில் ஒன்பது நெடுஞ்சாலைத் துறை அலுவலர்கள் மூலம் அரசு வாகனத்தை வைத்து அதிமுக அரசு இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா செய்துவருகிறது.

திமுக வழக்கறிஞர் செயலாளர் கிரிராஜன்

என்ன விலை கொடுத்தேனும் இந்த இடைத்தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காகவே அதிமுக தலைமை இப்படி செய்துவருகிறது. இது குறித்து ஆதாரத்துடன் தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகுவிடம் புகார் மனு அளித்துள்ளேன். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்" என்றார்.

மேலும் படிங்க: நாங்குநேரி இடைத்தேர்தலை ஒத்திவைக்க கோரிய மனு தள்ளுபடி

Intro:Body:நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் மூலம் விக்கிரவாண்டி நாங்குநேரி தொகுதிகளில் பணப்பட்டுவாடா செய்வதாக திமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் கிரிராஜன் தலைமைதேர்தல் அதிகாரிதிடம் புகார் அளித்துள்ளார்.


தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை தலைமை பொறியாளர் என் .பாலமுருகன் தலைமையில் 9 நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் அரசு வாகனத்தை வைத்து பணப்பட்டுவாடா செய்வதாக திமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் கிரிராஜன் தலைமை செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். மேலும் ஆதாரத்துடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவிடம் புகார் மனு அளித்துள்ளதாகவும் என்ன விலை கொடுத்தாவது இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுவிடலாம் என அதிமுகவினர் செயல்பட்டுவருவதாக தெரிவித்தார்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.