ETV Bharat / state

சாலை தடுப்புச்சுவர் மீது மோதி தொழிலதிபர் உயிரிழப்பு

author img

By

Published : May 9, 2020, 5:50 PM IST

சென்னை: தாம்பரம் அருகே சாலையின் நடுவே அமைக்கப்பட்ட தடுப்பின் மீது இருசக்கர வாகனம் மோதியதில் தொழிலதிபர் சம்பவ இடத்திலேயே பலியானர்.

accident
accident

சென்னை கெருகம்பாக்கத்தைச் சேர்ந்தவர் வடிவேல். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். செங்கல்பட்டில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று விட்டு பூந்தமல்லி புதிய புறவழிச்சாலை வழியாக வீடு திரும்பியுள்ளார்.

அப்போது தாம்பரம் அடுத்த எருமையூர் அருகே சாலை சீரமைக்கும் பணி நடைபெறுவதால் சாலையின் நடுவே வைக்கபட்டிருந்த தடுப்புச்சுவர் மீது இவர் மோதியதில், தலையில் பலத்த காயம் அடைந்த வடிவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

accident
பலியான தொழிலதிபர் வடிவேல்

இதைப்பார்த்த மக்கள் சோமமங்கலம் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் அடிப்படையில் அங்கு வந்த காவல் துறையினர், வடிவேல் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புதிதாக அமைக்கபட்டு வரும் பூந்தமல்லி புறவழிச்சாலை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால் ஆங்காங்கே சாலையின் நடுவே தடுப்புகள் வைக்கபட்டுள்ளன. இதை அறியாத வாகன ஓட்டிகள் அறிவிப்பு பலகைகள் இல்லாததால் விபத்தில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே அலுவலர்கள் எச்சரிக்கை பலகைகளை அமைத்து இரவில் ஒளிரும் ஸ்டிக்கர்களை ஒட்ட வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

சென்னை கெருகம்பாக்கத்தைச் சேர்ந்தவர் வடிவேல். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். செங்கல்பட்டில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று விட்டு பூந்தமல்லி புதிய புறவழிச்சாலை வழியாக வீடு திரும்பியுள்ளார்.

அப்போது தாம்பரம் அடுத்த எருமையூர் அருகே சாலை சீரமைக்கும் பணி நடைபெறுவதால் சாலையின் நடுவே வைக்கபட்டிருந்த தடுப்புச்சுவர் மீது இவர் மோதியதில், தலையில் பலத்த காயம் அடைந்த வடிவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

accident
பலியான தொழிலதிபர் வடிவேல்

இதைப்பார்த்த மக்கள் சோமமங்கலம் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் அடிப்படையில் அங்கு வந்த காவல் துறையினர், வடிவேல் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புதிதாக அமைக்கபட்டு வரும் பூந்தமல்லி புறவழிச்சாலை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால் ஆங்காங்கே சாலையின் நடுவே தடுப்புகள் வைக்கபட்டுள்ளன. இதை அறியாத வாகன ஓட்டிகள் அறிவிப்பு பலகைகள் இல்லாததால் விபத்தில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே அலுவலர்கள் எச்சரிக்கை பலகைகளை அமைத்து இரவில் ஒளிரும் ஸ்டிக்கர்களை ஒட்ட வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.