ETV Bharat / state

நான் ஏன் வெட்கப்பட வேண்டும்; இந்த சமூகம் தான் வெட்கப்படவேண்டும் - 'சிங்கபெண்' லக்ஷ்மி அகர்வால்

சில வருடங்களுக்கு முன்பு நான் வெளியில் செல்லும் போது என் முகத்தை துணியால் மறைத்துக் கொண்டுதான் செல்வேன். ஆனால் இப்பொழுது நான் அப்படியல்ல எனது முகத்தை நான் எதற்காக மறைக்க வேண்டும் என் முகத்தை இந்த நிலைக்கு செய்த சமூகம் தான் வெட்கப்பட வேண்டும்

author img

By

Published : Nov 18, 2019, 4:00 AM IST

lakshmi

சென்னை: :ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் வெண்புள்ளி நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மணமகள் அலங்காரம் செய்து நடிகை சந்தோஷி அசத்தியுள்ளார்.

lakshmi
நடிகை ரக்ஷிதா

தமிழ் திரை படங்களில் குணச்சித்திர வேடத்திலும் தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்து பிரபலமானவர் நடிகை சந்தோஷி. இவர் நடிகையாக மட்டுமல்லாது அழகு நிலையமும் நடத்திவருகிறார். இந்நிலையில் இவர் சென்னை தனியார் நட்சத்திர ஓட்டலில் அழகுக்கலை குறித்த கருத்தரங்கை நடத்தினார்.

நடிகை சந்தோஷி கருத்தரங்கம்

இதில் அசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட லக்ஷ்மி அகர்வால், நடிகை நமீதா ஆகியோர் கலந்துக்கொண்டனர். மேலும் இந்த கருத்தரங்கில் சந்தோஷி ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட லக்ஷ்மி அகர்வால் மற்றும் வெண்புள்ளி நோயால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கும் மணப்பெண் அலங்காரம் செய்து காட்டினார்.

lakshmi
நடிகை சந்தோஷி கருத்தரங்கம்

இதில் கலந்துகொண்ட லக்ஷ்மி அகர்வால் பேசுகையில், கடந்த சில வருடங்களுக்கு முன்பு நான் வெளியில் செல்லும் போது என் முகத்தை துணியால் மறைத்துக் கொண்டுதான் செல்வேன். ஆனால் இப்பொழுது நான் அப்படியல்ல எனது முகத்தை நான் எதற்காக மறைக்க வேண்டும் என் முகத்தை இந்த நிலைக்கு செய்த சமூகம் தான் வெட்கப்பட வேண்டும்.

இப்போது என் முகத்தை வெளியில் காட்டி செல்ல தயங்குவது இல்லை. நான் ஒரு பாதிக்கப்பட்ட பெண் என்று கூறப்படுவதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்றார்.

சென்னை: :ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் வெண்புள்ளி நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மணமகள் அலங்காரம் செய்து நடிகை சந்தோஷி அசத்தியுள்ளார்.

lakshmi
நடிகை ரக்ஷிதா

தமிழ் திரை படங்களில் குணச்சித்திர வேடத்திலும் தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்து பிரபலமானவர் நடிகை சந்தோஷி. இவர் நடிகையாக மட்டுமல்லாது அழகு நிலையமும் நடத்திவருகிறார். இந்நிலையில் இவர் சென்னை தனியார் நட்சத்திர ஓட்டலில் அழகுக்கலை குறித்த கருத்தரங்கை நடத்தினார்.

நடிகை சந்தோஷி கருத்தரங்கம்

இதில் அசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட லக்ஷ்மி அகர்வால், நடிகை நமீதா ஆகியோர் கலந்துக்கொண்டனர். மேலும் இந்த கருத்தரங்கில் சந்தோஷி ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட லக்ஷ்மி அகர்வால் மற்றும் வெண்புள்ளி நோயால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கும் மணப்பெண் அலங்காரம் செய்து காட்டினார்.

lakshmi
நடிகை சந்தோஷி கருத்தரங்கம்

இதில் கலந்துகொண்ட லக்ஷ்மி அகர்வால் பேசுகையில், கடந்த சில வருடங்களுக்கு முன்பு நான் வெளியில் செல்லும் போது என் முகத்தை துணியால் மறைத்துக் கொண்டுதான் செல்வேன். ஆனால் இப்பொழுது நான் அப்படியல்ல எனது முகத்தை நான் எதற்காக மறைக்க வேண்டும் என் முகத்தை இந்த நிலைக்கு செய்த சமூகம் தான் வெட்கப்பட வேண்டும்.

இப்போது என் முகத்தை வெளியில் காட்டி செல்ல தயங்குவது இல்லை. நான் ஒரு பாதிக்கப்பட்ட பெண் என்று கூறப்படுவதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்றார்.

Intro:ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் வெண்புள்ளி நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மணமகள் அலங்காரம் செய்து அசத்திய நடிகை சந்தோஷி.Body:தமிழ் திரை படங்களில் குணச்சித்திர வேடத்திலும் தொலைக்காட்சியில் அண்ணி, அம்மு, அரசி உள்ளிட்ட 10 திற்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்து பிரபலமானவர். நடிகை சந்தோஷி கடந்த சில வருடங்களாக அழகு நிலையம் நடத்தி வருகிறார். இந்நிலையில் இன்று அழகுக்கலை குறித்த கருத்தரங்கு செய்முறை விளக்கங்களும் சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட லக்ஷ்மி அகர்வால் மற்றும் வெண்புள்ளி நோயால் பாதிக்கப்பட்ட பெண் இயக்குனர் ரம்யா ஆகியோருக்கு மணப்பெண் அலங்காரம் செய்யும் சவாலான செயலை இன்று செய்துகாட்டினார் நடிகை சந்தோஷி.

இந்த விழாவில் கலந்துகொண்ட லக்ஷ்மி அகர்வால் பேசுகையில், கடந்த சில வருடங்களுக்கு முன்பு நான் வெளியில் செல்லும் போது என் முகத்தை துணியால் மறைத்துக் கொண்டுதான் செல்வேன். ஆனால் இப்பொழுது நான் அப்படியல்ல எனது முகத்தை நான் இதற்காக மறைக்க வேண்டும் என் முகத்தை இந்த நிலைக்கு செய்த சமூகம் தான் வெட்கப்பட வேண்டும் என்று எண்ணி இப்போது என் முகத்தை வெளியில் காட்டி செயல்படுகிறேன் நான் ஒரு பாதிக்கப்பட்ட பெண் என்று கூறப்படுவதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

புள்ளி நோயால் பாதிக்கப்பட்ட ரம்யா பேசுகையில், நான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு காரணம் என்னைப்பார்த்து பலபேர் இன்ஸ்பயர் ஆக்குவார்கள் என்று சந்தோஷ கூறியதால் கலந்து கொண்டேன். எனக்கு வெண்புள்ளி நோய் உள்ளதற்கு நான் என்றுமே கவலைப்பட்டதில்லை .பொதுவாக என்னுடைய முகத்தை கண்ணாடியில் பார்க்கும் பொழுது எனக்கு மிகவும் பிடிக்கும். இன்று என் முகத்தை மேலும் அழகூட்டி உள்ளார் நடிகை சந்தோஷி மகிழ்ச்சி இருக்கிறது.




Conclusion:இவர்கள் மணப்பெண் அலங்காரத்துடன் மேடையேற்றி ராம்ப் வாக் நிகழ்ச்சியும் நடைபெற்றது. நடிகை நமிதா நடிகை ரக்ஷிதா சினிமா மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.