ETV Bharat / state

கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான இடஒதுக்கீடு ஏற்பு!

author img

By

Published : Feb 5, 2021, 4:57 PM IST

சென்னை: மத்திய அரசு இட ஒதுக்கீட்டை தமிழ்நாடு அரசு ஏற்க மறுத்துள்ள நிலையில், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகத்தில் முதுகலை மருத்துவ உயிர் தொழில்நுட்பவியல் (M.sc medical biotechnology) பாடப்பிரிவில் மத்திய அரசின் இட ஒதுக்கீடு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

bharathiyar
bharathiyar

தமிழ்நாட்டில் தற்போதுவரை உயர் ஜாதிப் பிரிவில் பொருளாதாரத்தில் பின் தங்கிய வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டு முறை அமல் படுத்தபடவில்லை. இந்நிலையில் கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய பிரிவினருக்கு கல்வியில் 10 விழுக்காடு தனி இட ஒதுக்கீட்டின் கீழ் மாணவர்களை சேர்த்து இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாரதியார் பல்கலைகழகத்தில் எம்.எஸ்சி முதுகலை மருத்துவ உயிர் தொழில்நுட்பவியல் படிப்பில் வட மாநில மாணவர் ஒருவருக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் கீழ் ஒதுக்கப்பட்டிருப்பது அம்பலமாகி இருக்கிறது. பொதுப்பிரிவில் 4 மாணவர்கள், ஓபிசி பிரிவினரில் 3 மாணவர்கள், எஸ்.சி பிரிவில் ஒரு மாணவர், உயர் சாதி பிரிவு ஏழைகளுக்கான இட ஒதுக்கீட்டில் ஒரு மாணவர் என ஒன்பது பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

bharathiyar
பொருளாதாரத்தில் பின் தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு

இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்எஸ்சி படிப்பு, மத்திய அரசின் நிதி பங்களிப்புடன் செயல்பட்டு வந்த நிலையில், மத்திய அரசு இட ஒதுக்கீட்டை ஏற்க முடியாது என மறுத்த தமிழ்நாடு அரசு, தற்போது பாரதியார் பல்கலைக்கழகத்தில் மத்திய அரசு ஒதுக்கீட்டை அனுமதித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

உயர் சாதிப் பிரிவினருக்கு இட ஒதுக்கீட்டை இதுவரை தமிழ்நாட்டில் அமல்படுத்தவில்லை என்று அரசு அறிவித்துள்ள நிலையில், பாரதியார் பல்கலைக்கழகம் இந்த இட ஒதுக்கீட்டை அமல்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் தற்போதுவரை உயர் ஜாதிப் பிரிவில் பொருளாதாரத்தில் பின் தங்கிய வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டு முறை அமல் படுத்தபடவில்லை. இந்நிலையில் கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய பிரிவினருக்கு கல்வியில் 10 விழுக்காடு தனி இட ஒதுக்கீட்டின் கீழ் மாணவர்களை சேர்த்து இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாரதியார் பல்கலைகழகத்தில் எம்.எஸ்சி முதுகலை மருத்துவ உயிர் தொழில்நுட்பவியல் படிப்பில் வட மாநில மாணவர் ஒருவருக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் கீழ் ஒதுக்கப்பட்டிருப்பது அம்பலமாகி இருக்கிறது. பொதுப்பிரிவில் 4 மாணவர்கள், ஓபிசி பிரிவினரில் 3 மாணவர்கள், எஸ்.சி பிரிவில் ஒரு மாணவர், உயர் சாதி பிரிவு ஏழைகளுக்கான இட ஒதுக்கீட்டில் ஒரு மாணவர் என ஒன்பது பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

bharathiyar
பொருளாதாரத்தில் பின் தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு

இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்எஸ்சி படிப்பு, மத்திய அரசின் நிதி பங்களிப்புடன் செயல்பட்டு வந்த நிலையில், மத்திய அரசு இட ஒதுக்கீட்டை ஏற்க முடியாது என மறுத்த தமிழ்நாடு அரசு, தற்போது பாரதியார் பல்கலைக்கழகத்தில் மத்திய அரசு ஒதுக்கீட்டை அனுமதித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

உயர் சாதிப் பிரிவினருக்கு இட ஒதுக்கீட்டை இதுவரை தமிழ்நாட்டில் அமல்படுத்தவில்லை என்று அரசு அறிவித்துள்ள நிலையில், பாரதியார் பல்கலைக்கழகம் இந்த இட ஒதுக்கீட்டை அமல்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.