ETV Bharat / state

விமான நிலையத்தில் கரோனா வைரஸ் விழிப்புணர்வு

author img

By

Published : Mar 18, 2020, 7:05 PM IST

சென்னை: விமான நிலைய காவல் நிலையத்தில் கரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

கரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு கூட்டம்
கரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு கூட்டம்

உலகின் பல்வேறு நாடுகளில் கரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும், இந்த வைரஸின் அறிகுறி அதிகரித்து வருகின்றது. இதனால் தமிழ்நாடு அரசு உத்திரவின் பேரில், இந்த வைரஸ் பரவாமல் தடுப்பது குறித்து, பொது மக்களுக்கு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு கரோனா வைரஸ் அறிகுறி இருக்கிறதா என சோதனை செய்து, அறிகுறிகள் இருந்தால் அவர்களை தனிமைப்படுத்தி தனி ஆம்புலன்ஸ் மூலம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். மேலும், சென்னை விமான நிலையத்தில் நாளுக்கு நாள் பயணிகளின் வருகை குறைந்து காணப்படுகிறது. இதனால், அதிகளவில் விமானங்கள் ரத்து செய்யப்படுகின்றன.

விமான நிலையத்தில் கரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு
அதனைத் தொடர்ந்து, சென்னை விமான நிலைய காவல் நிலையத்தில், காவல் துறை சார்பில் மருத்துவக் குழு அமைக்கப்பட்டு காவலர்கள், துப்புரவுப் பணியாளர்கள், டேக்சி ஓட்டுநர்களுக்கு கரோனா வைரஸ் பரவாமல் தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் யாரிடமும் கைகுலுக்க வேண்டாம், அனைவரும் சானிடைசர் போன்றவற்றை கையில் வைத்துக்கொள்ள வேண்டும், முகக்கவசம் அணிந்து இருத்தல் வேண்டும் போன்ற அறிவுரைகள் வழங்கப்பட்டன.


இறுதியில், விமான நிலைய காவல் உதவி ஆணையர் நடேசன், காவலர்களுக்கும், துப்பரவுப் பணியாளர்களுக்கும், டேக்சி ஓட்டுநர்களுக்கும் முகக்கவசம் வழங்கினார்.

இதையும் படிங்க: கரோனா பெருந்தொற்று: பேருந்துகளில் கிருமி நாசினி தெளிப்பு

உலகின் பல்வேறு நாடுகளில் கரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும், இந்த வைரஸின் அறிகுறி அதிகரித்து வருகின்றது. இதனால் தமிழ்நாடு அரசு உத்திரவின் பேரில், இந்த வைரஸ் பரவாமல் தடுப்பது குறித்து, பொது மக்களுக்கு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு கரோனா வைரஸ் அறிகுறி இருக்கிறதா என சோதனை செய்து, அறிகுறிகள் இருந்தால் அவர்களை தனிமைப்படுத்தி தனி ஆம்புலன்ஸ் மூலம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். மேலும், சென்னை விமான நிலையத்தில் நாளுக்கு நாள் பயணிகளின் வருகை குறைந்து காணப்படுகிறது. இதனால், அதிகளவில் விமானங்கள் ரத்து செய்யப்படுகின்றன.

விமான நிலையத்தில் கரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு
அதனைத் தொடர்ந்து, சென்னை விமான நிலைய காவல் நிலையத்தில், காவல் துறை சார்பில் மருத்துவக் குழு அமைக்கப்பட்டு காவலர்கள், துப்புரவுப் பணியாளர்கள், டேக்சி ஓட்டுநர்களுக்கு கரோனா வைரஸ் பரவாமல் தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் யாரிடமும் கைகுலுக்க வேண்டாம், அனைவரும் சானிடைசர் போன்றவற்றை கையில் வைத்துக்கொள்ள வேண்டும், முகக்கவசம் அணிந்து இருத்தல் வேண்டும் போன்ற அறிவுரைகள் வழங்கப்பட்டன.


இறுதியில், விமான நிலைய காவல் உதவி ஆணையர் நடேசன், காவலர்களுக்கும், துப்பரவுப் பணியாளர்களுக்கும், டேக்சி ஓட்டுநர்களுக்கும் முகக்கவசம் வழங்கினார்.

இதையும் படிங்க: கரோனா பெருந்தொற்று: பேருந்துகளில் கிருமி நாசினி தெளிப்பு

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.