ETV Bharat / state

முதல்படியாக முதலமைச்சர் ஸ்டாலின் தொகுதியில் பிளாஸ்டிக் தடையை அமல் செய்க: உயர் நீதிமன்றம்

author img

By

Published : Feb 28, 2022, 11:04 PM IST

பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை உத்தரவை முதல்படியாக முதலமைச்சர் ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் அமல்படுத்தி, அதன் அறிக்கையை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதித்து தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்தது. இந்த அரசாணையை எதிர்த்து தமிழ்நாடு மற்றும் புதுவை பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கம் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் பிளாஸ்டிக் மீதான தடை செல்லும் என தீர்ப்பளித்திருந்தது.

இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி மீண்டும் தொடரப்பட்ட வழக்கை நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன் மற்றும் பி.டி.ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.

இந்த வழக்கு இன்று(பிப்.28) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் தரப்பில், தமிழ்நாட்டில் மட்டும் பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி தடை செய்யப்படுவதாகவும், பிற மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு கொண்டுவர அனுமதிக்கப்படுவதாகவும் குற்றஞ்சாட்டபட்டது.

அப்போது நீதிபதிகள், பிளாஸ்டிக் மீதான தடை உத்தரவை அமல்படுத்துவது என்றால் உற்பத்தி நிலையிலேயே தடுப்பதுடன், பிற மாநிலங்களிலிருந்து வருவதையும் தடுக்க வேண்டும். தடையை அமல்படுத்துவதில் அக்கறையில்லை என்றால் தமிழ்நாட்டில் மட்டும் உற்பத்தியை ஏன் தடுக்க வேண்டும்? பிளாஸ்டிக் பொருட்களைத் தடுப்பதா? அல்லது ஊக்குவிப்பதா? என அரசு உரிய முடிவெடுக்க அறிவுறுத்தினர்.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றான பொருட்களை அறிமுகப்படுத்த வேண்டும். பெரும்பாலான கடைகளில் பொருட்களை எடுத்துச்செல்ல பிளாஸ்டிக் பைகள் இலவசமாக கொடுக்கப்படுகிறது. ஆனால் மாற்றுப் பொருட்களால் ஆன பைகளுக்கு அதன் மதிப்பைவிட கூடுதலான தொகை வசூலிக்கப்படுகிறது என நீதிபதிகள் குற்றஞ்சாட்டினர்.

நீதிபதிகள் உத்தரவு

தமிழ்நாடு அரசு தரப்பில், நகராட்சி நிர்வாகத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை ஆகியவை இணைந்து பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடையை அமல்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட மஞ்சப்பை திட்டம் பெரிய அளவில் மக்களை சென்றடைந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

மீண்டும் மஞ்சப்பை திட்டம்
மீண்டும் மஞ்சப்பை திட்டம்

சுற்றுச்சூழலுக்கு உகந்த மாநிலமாக தமிழ்நாட்டைக் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசின் திடீர் ஆய்வுகள் மூலம் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் வணிக நிறுவனங்களுக்கு எதிராக அபராதம் விதிக்கப்படுகிறது.

தமிழ்நாடு அரசு எடுத்த நடவடிக்கை மட்டுமல்லாமல் நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளை அமல்படுத்தவும் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள் நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருள்களுக்கு முழுமையான தடை அமல்படுத்தப்பட்டுள்ளபோது, தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்துவதும் சாத்தியம் என தெரிவித்ததுடன், குறிப்பிட்ட ஒரு பகுதியை எடுத்துக்கொண்டு அதில் பிளாஸ்டிக் தடை பொருட்கள் மீதான உத்தரவை அமல்படுத்தலாம் என யோசனை தெரிவித்தனர்.

அதன்படி முதல்படியாக முதலமைச்சர் ஸ்டாலினின் சென்னை கொளத்தூர் தொகுதியில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை உத்தரவை அமல்படுத்த உத்தரவிட்ட நீதிபதிகள், அதுதொடர்பான அறிக்கையை மூன்று வாரங்களுக்குப் பிறகு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை மார்ச் 24ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: உக்ரைனில் தவிப்பு: திருவாரூர் மாணவிக்கு முன்னாள் அமைச்சர் ஆறுதல்

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதித்து தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்தது. இந்த அரசாணையை எதிர்த்து தமிழ்நாடு மற்றும் புதுவை பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கம் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் பிளாஸ்டிக் மீதான தடை செல்லும் என தீர்ப்பளித்திருந்தது.

இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி மீண்டும் தொடரப்பட்ட வழக்கை நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன் மற்றும் பி.டி.ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.

இந்த வழக்கு இன்று(பிப்.28) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் தரப்பில், தமிழ்நாட்டில் மட்டும் பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி தடை செய்யப்படுவதாகவும், பிற மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு கொண்டுவர அனுமதிக்கப்படுவதாகவும் குற்றஞ்சாட்டபட்டது.

அப்போது நீதிபதிகள், பிளாஸ்டிக் மீதான தடை உத்தரவை அமல்படுத்துவது என்றால் உற்பத்தி நிலையிலேயே தடுப்பதுடன், பிற மாநிலங்களிலிருந்து வருவதையும் தடுக்க வேண்டும். தடையை அமல்படுத்துவதில் அக்கறையில்லை என்றால் தமிழ்நாட்டில் மட்டும் உற்பத்தியை ஏன் தடுக்க வேண்டும்? பிளாஸ்டிக் பொருட்களைத் தடுப்பதா? அல்லது ஊக்குவிப்பதா? என அரசு உரிய முடிவெடுக்க அறிவுறுத்தினர்.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றான பொருட்களை அறிமுகப்படுத்த வேண்டும். பெரும்பாலான கடைகளில் பொருட்களை எடுத்துச்செல்ல பிளாஸ்டிக் பைகள் இலவசமாக கொடுக்கப்படுகிறது. ஆனால் மாற்றுப் பொருட்களால் ஆன பைகளுக்கு அதன் மதிப்பைவிட கூடுதலான தொகை வசூலிக்கப்படுகிறது என நீதிபதிகள் குற்றஞ்சாட்டினர்.

நீதிபதிகள் உத்தரவு

தமிழ்நாடு அரசு தரப்பில், நகராட்சி நிர்வாகத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை ஆகியவை இணைந்து பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடையை அமல்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட மஞ்சப்பை திட்டம் பெரிய அளவில் மக்களை சென்றடைந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

மீண்டும் மஞ்சப்பை திட்டம்
மீண்டும் மஞ்சப்பை திட்டம்

சுற்றுச்சூழலுக்கு உகந்த மாநிலமாக தமிழ்நாட்டைக் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசின் திடீர் ஆய்வுகள் மூலம் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் வணிக நிறுவனங்களுக்கு எதிராக அபராதம் விதிக்கப்படுகிறது.

தமிழ்நாடு அரசு எடுத்த நடவடிக்கை மட்டுமல்லாமல் நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளை அமல்படுத்தவும் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள் நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருள்களுக்கு முழுமையான தடை அமல்படுத்தப்பட்டுள்ளபோது, தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்துவதும் சாத்தியம் என தெரிவித்ததுடன், குறிப்பிட்ட ஒரு பகுதியை எடுத்துக்கொண்டு அதில் பிளாஸ்டிக் தடை பொருட்கள் மீதான உத்தரவை அமல்படுத்தலாம் என யோசனை தெரிவித்தனர்.

அதன்படி முதல்படியாக முதலமைச்சர் ஸ்டாலினின் சென்னை கொளத்தூர் தொகுதியில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை உத்தரவை அமல்படுத்த உத்தரவிட்ட நீதிபதிகள், அதுதொடர்பான அறிக்கையை மூன்று வாரங்களுக்குப் பிறகு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை மார்ச் 24ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: உக்ரைனில் தவிப்பு: திருவாரூர் மாணவிக்கு முன்னாள் அமைச்சர் ஆறுதல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.