ETV Bharat / state

சென்னையில் டாஸ்மாக் கடைகளை திறக்க ஏற்பாடுகள் தீவிரம்!

சென்னையில் நாளை முதல் மதுபானக் கடைகள் திறக்கப்படவுள்ள நிலையில், தகுந்த இடைவெளியை கடைப்பிடிக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

author img

By

Published : Aug 17, 2020, 6:40 PM IST

சென்னையில் டாஸ்மாக் கடைகளை திறக்க ஏற்பாடுகள் தீவிரம்
சென்னையில் டாஸ்மாக் கடைகளை திறக்க ஏற்பாடுகள் தீவிரம்

நாடு முழுவதும் கரோனா தொற்று காரணமாக மூடப்பட்டிருந்த மதுபானக் கடைகளானது கடந்த மே 7ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கப்பட்டது. இதில் சென்னையில் கரோனா தாக்கம் அதிகமாக இருந்ததால், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை தவிர்த்து தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்று வந்தது.

இந்நிலையில் நாளை (18.08.20) காலை 10 மணி முதல் 7 மணி வரை சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் மதுபானக் கடைகள் திறக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதில் நாள் ஒன்றுக்கு 500 நபர்களுக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்படும். மேலும் நோய் பாதித்த பகுதிகளிலும், வணிக வளாகங்களிலும் உள்ள கடைகள் திறக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக மது வாங்க வருபவர்கள் முகக்கவசம் அணிந்து வருவதோடு, தகுந்த இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மதுபானக் கடைகளில் அதிக கூட்டம் கூடாமல் இருப்பதற்காக தற்போது தடுப்பு கம்பங்கள் அமைக்கப்பட்டு, தகுந்த இடைவெளியை பின்பற்ற குறியீடுகள் வரையப்பட்டுள்ளது.

தொடக்கத்தில் ஒவ்வொரு நாளும் தனித்தனி டோக்கன்கள் வழங்கப்பட்டு, அதற்கேற்ப மது விற்பனை செய்யப்பட்டு வந்தது. பின் அந்த நடைமுறை கைவிடப்பட்டது. தொடர்ந்து தற்போதைய சூழலில் கரோனா தொற்றும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

நாட்டிலேயே மஹாராஷ்டிரா மாநிலத்துக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில்தான் அதிக அளவிலான மக்கள் கரோனா காரணமாக உயிரிழந்துள்ள நிலையில், தமிழ்நாடு அரசு டாஸ்மாக் கடைகளை திறக்க முடிவு செய்துள்ளது பொது மக்களிடையே கடுமையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

இதையும் படிங்க: 'கரோனாவைப் பரப்பியதில் மதுபானக் கடைகளுக்குப் பங்குண்டு எனத் தெரிந்தும்…' அரசை சாடிய ஸ்டாலின்

நாடு முழுவதும் கரோனா தொற்று காரணமாக மூடப்பட்டிருந்த மதுபானக் கடைகளானது கடந்த மே 7ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கப்பட்டது. இதில் சென்னையில் கரோனா தாக்கம் அதிகமாக இருந்ததால், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை தவிர்த்து தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்று வந்தது.

இந்நிலையில் நாளை (18.08.20) காலை 10 மணி முதல் 7 மணி வரை சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் மதுபானக் கடைகள் திறக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதில் நாள் ஒன்றுக்கு 500 நபர்களுக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்படும். மேலும் நோய் பாதித்த பகுதிகளிலும், வணிக வளாகங்களிலும் உள்ள கடைகள் திறக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக மது வாங்க வருபவர்கள் முகக்கவசம் அணிந்து வருவதோடு, தகுந்த இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மதுபானக் கடைகளில் அதிக கூட்டம் கூடாமல் இருப்பதற்காக தற்போது தடுப்பு கம்பங்கள் அமைக்கப்பட்டு, தகுந்த இடைவெளியை பின்பற்ற குறியீடுகள் வரையப்பட்டுள்ளது.

தொடக்கத்தில் ஒவ்வொரு நாளும் தனித்தனி டோக்கன்கள் வழங்கப்பட்டு, அதற்கேற்ப மது விற்பனை செய்யப்பட்டு வந்தது. பின் அந்த நடைமுறை கைவிடப்பட்டது. தொடர்ந்து தற்போதைய சூழலில் கரோனா தொற்றும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

நாட்டிலேயே மஹாராஷ்டிரா மாநிலத்துக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில்தான் அதிக அளவிலான மக்கள் கரோனா காரணமாக உயிரிழந்துள்ள நிலையில், தமிழ்நாடு அரசு டாஸ்மாக் கடைகளை திறக்க முடிவு செய்துள்ளது பொது மக்களிடையே கடுமையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

இதையும் படிங்க: 'கரோனாவைப் பரப்பியதில் மதுபானக் கடைகளுக்குப் பங்குண்டு எனத் தெரிந்தும்…' அரசை சாடிய ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.