ETV Bharat / state

ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்யக் கோரி அதிமுக புகார் மனு

author img

By

Published : Apr 5, 2021, 2:51 PM IST

Updated : Apr 5, 2021, 2:57 PM IST

சென்னை: கொளத்தூர், சேப்பாக்கம், காட்பாடி, திருவண்ணாமலை, திருச்சி மேற்கு தொகுதிகளில் பணப்பட்டுவாடா நடைபெற்று வருவதாகக் கூறி இத்தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்ய அதிமுகவினர் தேர்தல் ஆணையத்தை அணுகியுள்ளனர்.

அதிமுக
அதிமுக

தமிழ்நாட்டில் நாளை (ஏப்.06) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதி, உதயநிதி ஸ்டாலின் போட்டியிடும் சேப்பாக்கம், முன்னாள் அமைச்சரும் திமுக பொதுச் செயலாளருமான துரைமுருகனின் காட்பாடி, எ.வ.வேலு போட்டியிடும் திருவண்ணாமலை, முன்னாள் அமைச்சர் கே.என். நேரு போட்டியிடும் திருச்சி மேற்கு ஆகிய தொகுதிகளில் பணப்பட்டுவாடா நடைபெற்று வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் தலைமையிலான அதிமுகவினர் தேர்தல் ஆணையத்தில் இன்று புகார் அளித்துள்ளனர்.

தேர்தல் ஆணையத்திற்கு வந்து புகார் அளித்ததைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், பணநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்து திமுக ஜனநாயகப் படுகொலையில் ஈடுபடுவதாகக் குற்றம் சாட்டினார்.

இதுகுறித்து அதிமுகவினர், முன்னதாக திருவண்ணாமலை சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளராக இருக்கும் எ.வ. வேலுவின் வீட்டில் வருமானவரித் துறையினர் நடத்திய சோதனையில் 25 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்ட நிலையில், அப்பணம் அத்தொகுதி மக்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த பணம் என்றும், 2016ஆம் ஆண்டு தேர்தலின்போதும் அவர் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஜெயகுமார்

மேலும், திமுகவினர் இத்தொகுதிகளில் நவீன முறையில் ஆன்லைன் மூலம் பணப்பட்டுவாடா செய்வதாகவும், குறிப்பாக ஓட்டுக்கு 5,000 ரூபாய் வரை பட்டுவாடா செய்வதாகவும் குற்றச்சாட்டுகள் வைத்துள்ளனர். நாளை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதிமுகவினரின் இப்புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: திமுக வேட்பாளர் நண்பர்கள் வீடுகளில் சோதனை: ரூ.35 லட்சம் பறிமுதல்

தமிழ்நாட்டில் நாளை (ஏப்.06) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதி, உதயநிதி ஸ்டாலின் போட்டியிடும் சேப்பாக்கம், முன்னாள் அமைச்சரும் திமுக பொதுச் செயலாளருமான துரைமுருகனின் காட்பாடி, எ.வ.வேலு போட்டியிடும் திருவண்ணாமலை, முன்னாள் அமைச்சர் கே.என். நேரு போட்டியிடும் திருச்சி மேற்கு ஆகிய தொகுதிகளில் பணப்பட்டுவாடா நடைபெற்று வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் தலைமையிலான அதிமுகவினர் தேர்தல் ஆணையத்தில் இன்று புகார் அளித்துள்ளனர்.

தேர்தல் ஆணையத்திற்கு வந்து புகார் அளித்ததைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், பணநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்து திமுக ஜனநாயகப் படுகொலையில் ஈடுபடுவதாகக் குற்றம் சாட்டினார்.

இதுகுறித்து அதிமுகவினர், முன்னதாக திருவண்ணாமலை சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளராக இருக்கும் எ.வ. வேலுவின் வீட்டில் வருமானவரித் துறையினர் நடத்திய சோதனையில் 25 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்ட நிலையில், அப்பணம் அத்தொகுதி மக்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த பணம் என்றும், 2016ஆம் ஆண்டு தேர்தலின்போதும் அவர் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஜெயகுமார்

மேலும், திமுகவினர் இத்தொகுதிகளில் நவீன முறையில் ஆன்லைன் மூலம் பணப்பட்டுவாடா செய்வதாகவும், குறிப்பாக ஓட்டுக்கு 5,000 ரூபாய் வரை பட்டுவாடா செய்வதாகவும் குற்றச்சாட்டுகள் வைத்துள்ளனர். நாளை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதிமுகவினரின் இப்புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: திமுக வேட்பாளர் நண்பர்கள் வீடுகளில் சோதனை: ரூ.35 லட்சம் பறிமுதல்

Last Updated : Apr 5, 2021, 2:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.