ETV Bharat / state

ByElection2019: 'தேர்தல் அலுவலர்கள் மீது நம்பிக்கை இல்லை' - புதுவையில் புகார் அளித்த அதிமுக கூட்டணியினர்!

புதுச்சேரி: தேர்தல் விதிகளுக்கு புறம்பாகச் செயல்படும் காங்கிரஸ் கட்சியினரை தேர்தல் அலுவலர்கள் கண்டுகொள்ளாததால், இடைத்தேர்தல் நியாயமான முறையில் நடக்கும் என்ற நம்பிக்கை தங்களுக்கு இல்லை என அதிமுக எம்எல்ஏ அன்பழகன் தெரிவித்துள்ளார்.

author img

By

Published : Oct 8, 2019, 6:10 PM IST

அதிமுக எம்எல்ஏ அன்பழகன்

ByElection2019: காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜான் குமாரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என அதிமுக கூட்டணி கட்சியினர் புதுச்சேரி தேர்தல் அலுவலரிடம் புகார் மனு அளித்தனர்.

தேர்தல் அலுவலரிடம் புகார் மனு அளித்த எதிர்க்கட்சியினர்

புதுச்சேரி காமராஜ் நகர் இடைத்தேர்தல் அறிவித்த பிறகு, கடந்த இரு தினங்களுக்கு முன் காங்கிரஸ் கட்சி சார்பில் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள கம்பன் கலையரங்கத்தில் நாட்டின் பொருளாதாரம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் புதுச்சேரி காங்கிரஸ் கட்சி தலைவர் நமச்சிவாயம், முதலமைச்சர் நாராயணசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தினை அரசு கட்டடத்தில் நடத்தியதற்கு அதிமுக கூட்டணி கட்சிகளான பாஜக, என்ஆர் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்நிலையில் இன்று புதுச்சேரி ரெட்டியார்பாளையம் தேர்தல் தலைமை அலுவலகத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன், என்ஆர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பாலன், பாஜக மாநிலத் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான சுவாமிநாதன் உள்ளிட்டக் கூட்டணி கட்சியினர் புதுச்சேரி தலைமை தேர்தல் அலுவலர் சூர்பீர் சிங்கைச் சந்தித்தனர்.

அப்போது காமராஜ் நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜான் குமாரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். தேர்தல் தொடர்பானக் கட்சி கூட்டம் அரசு கட்டடத்தில் நடத்த அனுமதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்டக் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

அதிமுக எம்எல்ஏ அன்பழகன்

பின்னர் இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன், ’ஆளும் காங்கிரஸ் அரசு ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி தேர்தல் நன்னடத்தை விதிகளுக்கு புறம்பாக அரசுக்கு சொந்தமான கட்டடத்தில் கூட்டம் நடத்தியுள்ளது. தேர்தல் விதிகளை மீறிய, காங்கிரஸ் கட்சி வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். இதனைத் தேர்தல் அலுவலர் கண்டுகொள்ளவில்லை. இதனால் தேர்தல் நியாயமான முறையில் நடக்கும் எனும் நம்பிக்கை எங்களுக்கு இல்லை’ என அதிருப்தி தெரிவித்தார்.

இதையும் படிக்கலாமே: இலங்கை அதிபர் தேர்தல் புதிய வரலாறு

ByElection2019: காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜான் குமாரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என அதிமுக கூட்டணி கட்சியினர் புதுச்சேரி தேர்தல் அலுவலரிடம் புகார் மனு அளித்தனர்.

தேர்தல் அலுவலரிடம் புகார் மனு அளித்த எதிர்க்கட்சியினர்

புதுச்சேரி காமராஜ் நகர் இடைத்தேர்தல் அறிவித்த பிறகு, கடந்த இரு தினங்களுக்கு முன் காங்கிரஸ் கட்சி சார்பில் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள கம்பன் கலையரங்கத்தில் நாட்டின் பொருளாதாரம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் புதுச்சேரி காங்கிரஸ் கட்சி தலைவர் நமச்சிவாயம், முதலமைச்சர் நாராயணசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தினை அரசு கட்டடத்தில் நடத்தியதற்கு அதிமுக கூட்டணி கட்சிகளான பாஜக, என்ஆர் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்நிலையில் இன்று புதுச்சேரி ரெட்டியார்பாளையம் தேர்தல் தலைமை அலுவலகத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன், என்ஆர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பாலன், பாஜக மாநிலத் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான சுவாமிநாதன் உள்ளிட்டக் கூட்டணி கட்சியினர் புதுச்சேரி தலைமை தேர்தல் அலுவலர் சூர்பீர் சிங்கைச் சந்தித்தனர்.

அப்போது காமராஜ் நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜான் குமாரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். தேர்தல் தொடர்பானக் கட்சி கூட்டம் அரசு கட்டடத்தில் நடத்த அனுமதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்டக் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

அதிமுக எம்எல்ஏ அன்பழகன்

பின்னர் இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன், ’ஆளும் காங்கிரஸ் அரசு ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி தேர்தல் நன்னடத்தை விதிகளுக்கு புறம்பாக அரசுக்கு சொந்தமான கட்டடத்தில் கூட்டம் நடத்தியுள்ளது. தேர்தல் விதிகளை மீறிய, காங்கிரஸ் கட்சி வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். இதனைத் தேர்தல் அலுவலர் கண்டுகொள்ளவில்லை. இதனால் தேர்தல் நியாயமான முறையில் நடக்கும் எனும் நம்பிக்கை எங்களுக்கு இல்லை’ என அதிருப்தி தெரிவித்தார்.

இதையும் படிக்கலாமே: இலங்கை அதிபர் தேர்தல் புதிய வரலாறு

Intro:நியாயமாக தேர்தல் நடக்குமா என தேர்தல் துறை மீது நம்பிக்கை இல்லை

காங்கிரஸ் கட்சி வேட்பாளர் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என அதிமுக கூட்டணி கட்சியினர் தேர்தல் துறையிடம் புகார் மனு


Body:புதுச்சேரி காமராஜ் நகர் இடைத்தேர்தல் அறிவித்த பிறகு கடந்த இரு தினங்களுக்கு முன் காங்கிரஸ் கட்சி சார்பில் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அரசு கட்டிடமான கம்பன் கலையரங்கத்தில் இந்தியன் நாட்டின் பொருளாதாரம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது இக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர் நமச்சிவாயம் முதல்வர் நாராயணசாமி ஆகியோர் கலந்து கொண்டனர் இக்கூட்டம் அரசு கட்டிடத்தில் நடத்தியதற்கு அதிமுக கூட்டணி கட்சிகளான பாஜக என்ஆர் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன


இந்நிலையில் இன்று புதுச்சேரி ரெட்டியார்பாளையம் தேர்தல் தலைமை அலுவலகத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் ,என்ஆர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பாலன் ,பாஜக மாநில தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான சுவாமிநாதன் கூட்டணி கட்சியினர் புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி சூர்பீர் சிங்கை அவரது அலுவலகத்தில் சந்தித்தனர் அப்போது காமராஜ் நகர் இடைத் தேர்தல் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜான் குமார் வேட்பாளர் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் தேர்தல் தொடர்பான கட்சி கூட்டம் அரசு கட்டிடத்தில் நடத்த அனுமதி அது அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புகார் மனு அளித்தனர்

பின்னர் இது தொடர்பாக செய்தியாளகளை சந்தித்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் ,
ஆளும் காங்கிரஸ் அரசு ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி தேர்தல் நன்னடத்தை விதிகள் புறம்பாக அரசின் சொந்தமான கட்டிடத்தில் கூட்டம் நடத்தி காமராஜர் நகர் தொகுதி வெற்றி வாய்ப்பு குறித்து என் ஆர் காங்கிரஸ் வேட்பாளர் புவனேஸ்வரன்யை மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி ஆகியோரை விமர்சனம் செய்து பேசியுள்ளார் என்றும் ஆட்சி அதிகாரத்தை வைத்துக்கொண்டு முதல்வர் நாராயணசாமி இவ்வாறு பேசியுள்ளார் மேலும் அரசு கட்டிடத்தில் தேர்தல் சம்பந்தமாக பேசியது தேர்தல் விதி மீறல் என குற்றம் சாட்டிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் இதுதொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்திற்கு நேற்று மனு அளித்துள்ளதாகவும் அந்த மனுவில் வேட்பாளர் தகுதி நீக்கம் செய்யவேண்டும் இதனை கண்டுகொள்ளாத புதுச்சேரி தேர்தல் துறை மீது தங்களுக்கு நியாயமான முறையில் தேர்தல் நடக்கும் என்று நம்பிக்கை இல்லை என அந்த மனுவில் புகார் அளித்துள்ளதாக அவர் தெரிவித்தார்


பேட்டி அன்பழகன் அதிமுக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர்


Conclusion:நியாயமாக தேர்தல் நடக்குமா என தேர்தல் துறை மீது நம்பிக்கை இல்லை காங்கிரஸ் கட்சி வேட்பாளர் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என அதிமுக கூட்டணி கட்சியினர் தேர்தல் துறையிடம் புகார் மனு
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.