சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தைச் சேர்ந்தவர் தியாகராஜன். இவர் 'தரிசு நிலம்' எனும் தமிழ் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
இந்நிலையில் 'நாடோடிகள்' படத்தில் துணை நடிகையாக நடித்த நடிகை ஒருவருடன் தியாகராஜனுக்கு பழக்கம் ஏற்பட்டதை அடுத்து, கடந்த 2011ஆம் ஆண்டு முதல் இருவரும் காதலித்து வந்ததுள்ளனர்.
திருமணம் செய்து கொள்வதாகக் கூறி துணை நடிகையுடன் தியாகராஜன் நெருக்கமாகப் பழகி வந்ததாகத் தெரிகிறது. மேலும் நடிகையிடம் இருந்து அவர் பணம், நகை உள்ளிட்டவற்றையும் வாங்கியதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், தியாகராஜனுக்கு சென்னை மாநகராட்சியின் தொழில்நுட்பப் பிரிவில் உதவி ஆய்வாளராக பணி கிடைத்ததைத் தொடர்ந்து அவர், காதலியுடன் பேசுவதை நிறுத்தியுள்ளார். இதனால் இருவரும் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
தொடர்ந்து, துணை நடிகை தன்னைவிட ஒரு வயது மூத்தவர் என்பதால் திருமணம் செய்து கொள்ள முடியாது என்றும் கூறி தியாகராஜன் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.