நடிகர் உதயா எழுதி இயக்கிய "செக்யூரிட்டி" குறும்படம் ராணுவ வீரர்களின் பெருமையை உணர்த்தும் விதமாக உருவாக்கப்பட்டது. இந்தக் குறும்படம் பல சர்வதேச விருதுகளையும் வென்றுள்ளது.
இந்நிலையில் குடியரசு தினத்தன்று 'பரம்வீர் சக்ரா' விருதினை, இராமநாதபுரத்தைச் சேர்ந்த போர்க்களத்தில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் ஹவில்தார் பழனிக்கு வழங்கிட வேண்டும் எனப் பிரதமர் மோடிக்கு நடிகர் உதயா கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.
அந்த கோரிக்கை மனுவின் நகலை பாஜக மாநில தலைவர் எல். முருகனிடமும் அவர் வழங்கியுள்ளார்.
இதையும் படிங்க: மீனவர் வலையில் சிக்கிய ராணுவ விமானம்!