ETV Bharat / state

விஷ்ணு விஷால் தந்தைக்கு எதிரான பண மோசடி புகார் - விசாரணைக்கு ஆஜரான நடிகர் சூரி

author img

By

Published : Apr 19, 2022, 8:05 AM IST

நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை மற்றும் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் ஆகியோருக்கு எதிராக நடிகர் சூரி பண மோசடி புகார் அளித்துள்ள நிலையில், அதுதொடர்பான விசாரணைக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவில் இரண்டாவது முறையாக அவர் ஆஜரானார்.

விஷ்ணு விஷால் தந்தைக்கு எதிரான பண மோசடி புகார்
விஷ்ணு விஷால் தந்தைக்கு எதிரான பண மோசடி புகார்

திரைப்பட காமெடி நடிகரான சூரி நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையும் முன்னாள் டி.ஜி.பி-யுமான ரமேஷ் குடவாலா மற்றும் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் ஆகியோர் மீது நிலம் வாங்கித் தருவதாகக் கூறி 2.70 கோடி ரூபாய் பண மோசடி செய்ததாக அடையாறு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதன் மீது நடவடிக்கை இல்லை என் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், வழக்கை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றியதுடன், 6 மாதகாலத்துக்குள் வழக்கை முடிக்க உத்தரவிட்டது.

இதனையடுத்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வழக்கு தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திலுள்ள மத்திய குற்றப்பிரிவில் நடிகர் சூரி ஏற்கனவே விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். அதன் தொடர்ச்சியாக இன்றும் (ஏப்ரல் 18) இரண்டாவது முறையாக நடிகர் சூரி விசாரணை அதிகாரி முன் ஆஜரானார். மதியம் 12 மணிக்கு ஆஜரான அவரிடம் சுமார் 5 மணி நேரத்துக்கும் மேல் விசாரணை நடைபெற்றதாக தெரிகிறது.

இந்த விசாரணையில் வழக்கு தொடர்பாக கேட்கப்பட்ட 110 கேள்விகளுக்கு நடிகர் சூரி பதிலளித்துள்ளதாக போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பண மோசடி புகார் தொடர்பாக நடிகர் சூரியிடம் முழுமையான விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும், வருவாய்த்துறை மற்றும் சம்மந்தப்பட்ட வங்கி நிர்வாகத்துக்கு உரிய விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் டி.ஜி.பி ரமேஷ் குடவாலா மற்றும் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

இதையும் படிங்க : இசைஞானிக்கு வேறுஞானம் இல்லை - ராஜ்கிரண் கருத்து

திரைப்பட காமெடி நடிகரான சூரி நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையும் முன்னாள் டி.ஜி.பி-யுமான ரமேஷ் குடவாலா மற்றும் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் ஆகியோர் மீது நிலம் வாங்கித் தருவதாகக் கூறி 2.70 கோடி ரூபாய் பண மோசடி செய்ததாக அடையாறு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதன் மீது நடவடிக்கை இல்லை என் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், வழக்கை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றியதுடன், 6 மாதகாலத்துக்குள் வழக்கை முடிக்க உத்தரவிட்டது.

இதனையடுத்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வழக்கு தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திலுள்ள மத்திய குற்றப்பிரிவில் நடிகர் சூரி ஏற்கனவே விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். அதன் தொடர்ச்சியாக இன்றும் (ஏப்ரல் 18) இரண்டாவது முறையாக நடிகர் சூரி விசாரணை அதிகாரி முன் ஆஜரானார். மதியம் 12 மணிக்கு ஆஜரான அவரிடம் சுமார் 5 மணி நேரத்துக்கும் மேல் விசாரணை நடைபெற்றதாக தெரிகிறது.

இந்த விசாரணையில் வழக்கு தொடர்பாக கேட்கப்பட்ட 110 கேள்விகளுக்கு நடிகர் சூரி பதிலளித்துள்ளதாக போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பண மோசடி புகார் தொடர்பாக நடிகர் சூரியிடம் முழுமையான விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும், வருவாய்த்துறை மற்றும் சம்மந்தப்பட்ட வங்கி நிர்வாகத்துக்கு உரிய விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் டி.ஜி.பி ரமேஷ் குடவாலா மற்றும் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

இதையும் படிங்க : இசைஞானிக்கு வேறுஞானம் இல்லை - ராஜ்கிரண் கருத்து

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.