ETV Bharat / state

''பருத்திவீரனுக்கு முன் பிச்சை எடுக்கும் நிலையில் சரவணன் இருந்தார்'' - சித்தப்பு குறித்து மனைவி பரபரப்பு பேட்டி

'பருத்திவீரன்' புகழ் சரவணன் மீது அவரது முதல் மனைவி சூர்யஸ்ரீ தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் கொடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

author img

By

Published : May 12, 2023, 7:20 PM IST

Updated : May 13, 2023, 6:21 AM IST

”தனக்கு ஏதாவது நேர்ந்தால் அதற்கு சரவணன் தான் காரணம்” நடிகர் சரவணனின் மனைவி புகார்
”தனக்கு ஏதாவது நேர்ந்தால் அதற்கு சரவணன் தான் காரணம்” நடிகர் சரவணனின் மனைவி புகார்
''பருத்திவீரனுக்கு முன் பிச்சை எடுக்கும் நிலையில் சரவணன் இருந்தார்'' - சித்தப்பு குறித்து மனைவி பரபரப்பு பேட்டி

சென்னை: மவுலிவாக்கத்தைச் சேர்ந்த ஜெயமணி வித்யாவதி என்பவர், நடிகர் சரவணனின் முதல் மனைவியுடன் சேர்ந்து தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் மனு அளித்து உள்ளார்.

அதில், ’"தனக்குச் சொந்தமான கடையில் நடிகர் சரவணன் 07.05.2023அன்று அடியாட்களுடன் வந்து கடையை உடைத்து, உள்ளே இருந்த பொருட்களை வெளியே போட்டதாகக் கூறி, மாங்காடு காவல் துறையில் புகார் அளித்துள்ளார். எனினும் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை’’ எனத் தெரிவித்து உள்ளார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சரவணனின் முதல் மனைவி சூர்யஶ்ரீ, ”நான் நடிகர் சரவணனின் மனைவி. தன் உயிருக்கு பாதுகாப்பு இல்லை. எனக்கு ஏதாவது நேர்ந்தால் அதற்கு சரவணனும் அவருடன் இருக்கும் பெண்ணும் தான் காரணம்'' எனத் தெரிவித்து உள்ளார். மேலும் ஒரு பெண்ணை கொண்டு வந்து வைத்துக் கொண்டு டார்ச்சர் செய்கிறார் என்றும், கடையை உடைத்ததற்கு நானே சாட்சி என்றும்; நான் சம்பாதித்த பணத்தில் தான் வீடு வாங்கி உள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார், முதல் மனைவி சூர்யஸ்ரீ.

இருவரும் காதலித்து தான் கல்யாணம் செய்தோம் என்றும்; இதுவரை சரவணன் விவாகரத்தும் வாங்கவில்லை எனவும்; பருத்தி வீரனுக்கு முன்னால் பிச்சை எடுக்கும் நிலையில் இருந்தார் என்றும்; தான் சம்பாதித்த பணத்தில் தான் வாழ்ந்தார் என்றும் தெரிவித்து உள்ளார்.

இதையும் படிங்க: 'திமுக ஃபைல்ஸ் பார்ட்-2 ஜூலை முதல் வாரம் வெளியாகும்' - அண்ணாமலை

''பருத்திவீரனுக்கு முன் பிச்சை எடுக்கும் நிலையில் சரவணன் இருந்தார்'' - சித்தப்பு குறித்து மனைவி பரபரப்பு பேட்டி

சென்னை: மவுலிவாக்கத்தைச் சேர்ந்த ஜெயமணி வித்யாவதி என்பவர், நடிகர் சரவணனின் முதல் மனைவியுடன் சேர்ந்து தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் மனு அளித்து உள்ளார்.

அதில், ’"தனக்குச் சொந்தமான கடையில் நடிகர் சரவணன் 07.05.2023அன்று அடியாட்களுடன் வந்து கடையை உடைத்து, உள்ளே இருந்த பொருட்களை வெளியே போட்டதாகக் கூறி, மாங்காடு காவல் துறையில் புகார் அளித்துள்ளார். எனினும் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை’’ எனத் தெரிவித்து உள்ளார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சரவணனின் முதல் மனைவி சூர்யஶ்ரீ, ”நான் நடிகர் சரவணனின் மனைவி. தன் உயிருக்கு பாதுகாப்பு இல்லை. எனக்கு ஏதாவது நேர்ந்தால் அதற்கு சரவணனும் அவருடன் இருக்கும் பெண்ணும் தான் காரணம்'' எனத் தெரிவித்து உள்ளார். மேலும் ஒரு பெண்ணை கொண்டு வந்து வைத்துக் கொண்டு டார்ச்சர் செய்கிறார் என்றும், கடையை உடைத்ததற்கு நானே சாட்சி என்றும்; நான் சம்பாதித்த பணத்தில் தான் வீடு வாங்கி உள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார், முதல் மனைவி சூர்யஸ்ரீ.

இருவரும் காதலித்து தான் கல்யாணம் செய்தோம் என்றும்; இதுவரை சரவணன் விவாகரத்தும் வாங்கவில்லை எனவும்; பருத்தி வீரனுக்கு முன்னால் பிச்சை எடுக்கும் நிலையில் இருந்தார் என்றும்; தான் சம்பாதித்த பணத்தில் தான் வாழ்ந்தார் என்றும் தெரிவித்து உள்ளார்.

இதையும் படிங்க: 'திமுக ஃபைல்ஸ் பார்ட்-2 ஜூலை முதல் வாரம் வெளியாகும்' - அண்ணாமலை

Last Updated : May 13, 2023, 6:21 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.