ETV Bharat / state

கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட தம்பதிக்கு விஷம் வைத்த நபர்: கணவன் மரணம் - மனைவிக்கு சிகிச்சை - A man who poisoned a couple who demanded a refund husband death treatment of his wife

சென்னை: கொடுத்த பணத்தை திருப்பிக்கேட்ட தம்பதிக்கு  பிரசாதத்தில் விஷம் வைத்த நபரால் கணவன் உயிரிழந்தார்.

chennai
author img

By

Published : Sep 24, 2019, 4:06 PM IST

சென்னை காசிமேடு சூரிய நாராயண தெருவில் வசித்துவருபவர்கள் கார்த்திக், மனைவி தம்பதி. இவர்கள் இருவருக்கும் சர்வேஷ், சார்வின் என இரு மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு கார்த்திக், வேலாயுதம் என்பவரிடம் அரசு வேலைக்காக ரூ.4 லட்சம் கொடுத்துள்ளார். இதனைத்தொடர்ந்து, வேலாயுதம் வேலையும் வாங்கி தராமல் கொடுத்த பணத்தையும் திருப்பி தராமல் ஏமாற்றி வந்துள்ளார்.

இந்த சூழலில் இன்று வேலாயுதம், கார்த்திக்கை தொலைபேசியில் அழைத்து உங்களுக்கு அரசு வேலை கிடைத்துவிட்டது. அதற்கான நியமன கடிதத்தை நேரில் வந்து பெற்றுக்கொள்ளுகள் என தெரிவித்திருக்கிறார். இதனை நம்பி கார்த்திக்கும் தன் மனைவியுடன் எம்.கே.பி நகரில் உள்ள வேலாயுதம் வீட்டுக்கு சென்றுள்ளார்.

அங்கு சென்ற அவருக்கு, சாய்பாபா பிரசாதம் சாப்பிடுங்கள் எனக்கூறி ஒரு பொடியை வேலாயுதம் கொடுத்துள்ளார். இதை வாங்கி இருவரும் சாப்பிட்டு முடித்தனர். பின்னர் கார்த்திக்கிற்கு லேசான மயக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனால் சந்தேமடைந்த அவர்கள் அங்கிருந்து கிளம்பி இருசக்கர வாகனத்தில் முல்லை நகர் பேருந்து நிலையம் அருகே வந்தபோது கார்த்திக் வாகனத்தை நிறுவிட்டு மயங்கி விழுந்துள்ளார்.

சரண்யாவுக்கும் மயக்கம் வர தொடங்கியுள்ளது. பின்னர் இருவரையும் அருகிலிருந்தவர்கள் ஆம்புலன்ஸை வரவழைத்து அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

chennai
வேலாயுதம்

மருத்துவமனையில் கார்த்திக் சிகிக்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் சரண்யா தீவிர சிகிக்சை பெற்றுவருகிறார். இதுகுறித்து, மருத்துவர்கள் கூறுகையில் இவர்கள் இருவருக்கும் விஷம் அளிக்கப்பட்டதாக தெரிவித்தனர்.

அதனடிப்படையில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து வேலாயுதத்தை கைது செய்து விசாரணை நடத்தியதில், கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதால் அவருக்கு விஷம் கொடுத்ததாக தெரிவித்தார்.

இதையும் படிங்க:

குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தற்கொலை செய்துகொண்ட தாய்!

சென்னை காசிமேடு சூரிய நாராயண தெருவில் வசித்துவருபவர்கள் கார்த்திக், மனைவி தம்பதி. இவர்கள் இருவருக்கும் சர்வேஷ், சார்வின் என இரு மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு கார்த்திக், வேலாயுதம் என்பவரிடம் அரசு வேலைக்காக ரூ.4 லட்சம் கொடுத்துள்ளார். இதனைத்தொடர்ந்து, வேலாயுதம் வேலையும் வாங்கி தராமல் கொடுத்த பணத்தையும் திருப்பி தராமல் ஏமாற்றி வந்துள்ளார்.

இந்த சூழலில் இன்று வேலாயுதம், கார்த்திக்கை தொலைபேசியில் அழைத்து உங்களுக்கு அரசு வேலை கிடைத்துவிட்டது. அதற்கான நியமன கடிதத்தை நேரில் வந்து பெற்றுக்கொள்ளுகள் என தெரிவித்திருக்கிறார். இதனை நம்பி கார்த்திக்கும் தன் மனைவியுடன் எம்.கே.பி நகரில் உள்ள வேலாயுதம் வீட்டுக்கு சென்றுள்ளார்.

அங்கு சென்ற அவருக்கு, சாய்பாபா பிரசாதம் சாப்பிடுங்கள் எனக்கூறி ஒரு பொடியை வேலாயுதம் கொடுத்துள்ளார். இதை வாங்கி இருவரும் சாப்பிட்டு முடித்தனர். பின்னர் கார்த்திக்கிற்கு லேசான மயக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனால் சந்தேமடைந்த அவர்கள் அங்கிருந்து கிளம்பி இருசக்கர வாகனத்தில் முல்லை நகர் பேருந்து நிலையம் அருகே வந்தபோது கார்த்திக் வாகனத்தை நிறுவிட்டு மயங்கி விழுந்துள்ளார்.

சரண்யாவுக்கும் மயக்கம் வர தொடங்கியுள்ளது. பின்னர் இருவரையும் அருகிலிருந்தவர்கள் ஆம்புலன்ஸை வரவழைத்து அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

chennai
வேலாயுதம்

மருத்துவமனையில் கார்த்திக் சிகிக்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் சரண்யா தீவிர சிகிக்சை பெற்றுவருகிறார். இதுகுறித்து, மருத்துவர்கள் கூறுகையில் இவர்கள் இருவருக்கும் விஷம் அளிக்கப்பட்டதாக தெரிவித்தனர்.

அதனடிப்படையில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து வேலாயுதத்தை கைது செய்து விசாரணை நடத்தியதில், கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதால் அவருக்கு விஷம் கொடுத்ததாக தெரிவித்தார்.

இதையும் படிங்க:

குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தற்கொலை செய்துகொண்ட தாய்!

Intro:Body:*பிரசாதத்தில் சல்பியூரிக் பவுடர் கலந்து எம்கேபி நகரில் தம்பதியினரை கொலை செய்ய முயற்சி செய்ததாக மோசடியில் கைது செய்யப்பட்ட நபர் வாக்குமூலம்*

சென்னை காசிமேடு சூரிய நாராயண தெருவை சேர்ந்தவர் கார்த்திக் காசிமேடு பகுதியில் ஜெராக்ஸ் கடை நடத்தி வந்தார். இவருக்கு சரண்யா என்கிற மனைவியும் சர்வேஷ், சர்வின் என்ற இரு மகன்களும் உள்ளனா்.

கார்த்திக் சுமார் 4 வருடத்திற்கு முன்பு எம்.கே.பி நகர் பகுதியில் உள்ள வேலாயுதம் என்பவரிடம் அரசு வேலைக்காக ரூபாய் 4 லட்சம் கொடுத்திருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் வேலாயுதம் அரசு வேலையும் வாங்கி தராமல் பணத்தையும் திருப்பி தராமலும் ஏமாற்றி வந்ததாகவும், இந்நிலையில் இன்று வேலாயுதம் உங்களுக்கு அரசு வேலைக்கான நியமன கடிதம் வந்துள்ளதாகவும் அதை நேரில் வந்து பெற்றுக்கொள்ளுங்கள் என கூறியுள்ளார்.

இதையடுத்து கார்த்திக் தனது மனைவி சரண்யாவுடன் இன்று காலை எம்.கே.பி நகர் பகுதியில் உள்ள வேலாயுதம் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது வேலாயுதம் ஸ்ரீரடி சாய்பாபா பிரசாதம் என்று கூறி ஒரு பொடியை கார்த்திக் மற்றும் சரண்யாவுக்கு கொடுத்து சாப்பிட கூறியுள்ளார். இந்நிலையில் கார்த்திக்கு லேசான மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனே கார்த்திக் பொடியை சாப்பிட்டு கொண்டிருந்த சரண்யாவை சாப்பிட வேண்டாம் என்று கூறி உடனடியாக அங்கிருந்து தனது இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு, முல்லை நகர் பேருந்து நிலையம் அருகே வந்தபோது கார்த்திக் வாகனத்தை நிறுத்திவிட்டு மயங்கி விழுந்துள்ளார். சரண்யாவுக்கு லேசான மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்கு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

அங்கு சிகிச்சை பலனின்றி கார்த்திக் பரிதாபமாக உயிரிழந்தார். சரண்யா தீவிர சிகிச்சை பிரிவில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து எம்.கே.பி நகர் போலீசார் வழக்குபதிவு செய்து வேலாயுதம் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். விசாரணையில் வேலாயுதம் கொடுத்த பணத்தை கேட்டதற்காக கார்த்திக் மற்றும் சரண்யா தம்பதியினருக்கு பிரசாதத்தில் சல்பர் பவுடரை கலந்து கொடுத்து அவர்களை கொலை செய்ய முயற்சி செய்தது தெரியவந்துள்ளது.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.