சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் திருடுபோன செல்ஃபோன்களை அதன் உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி இன்று (ஏப்ரல்.20) நடைபெற்றது. இதற்கு காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் தலைமை தாங்கினார்.
இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, "சென்னையில் திருடுபோன செல்ஃபோன்களை ஐ.எம்.இ.ஐ எண் உதவியுடன் காவல் துறையினர் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று மீட்டு வந்துள்ளனர். கடந்த நான்கு மாதங்களில் மட்டும் ரூ.1.55 கோடி மதிப்புள்ள 1,382 செல்ஃபோன்களை மீட்டு அதன் உரியவர்களிடம் காவல் துறையினர் ஒப்படைத்துள்ளனர்.
கடந்த ஏழு மாதங்களில் மட்டும் ரூ.4.39 கோடி மதிப்புள்ள 4,000 செல்ஃபோன்களை மீட்டு அதன் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.