ETV Bharat / state

சென்னையில் திருடுபோன 4,000 செல்ஃபோன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு

author img

By

Published : Apr 21, 2021, 12:01 AM IST

சென்னையில் திருடுபோன 4,000 செல்ஃபோன்களை அதன் உரியவர்களிடம் ஒப்படைத்துள்ளதாக காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.

சென்னையில் திருடுபோன செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு
சென்னையில் திருடுபோன செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் திருடுபோன செல்ஃபோன்களை அதன் உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி இன்று (ஏப்ரல்.20) நடைபெற்றது. இதற்கு காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் தலைமை தாங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, "சென்னையில் திருடுபோன செல்ஃபோன்களை ஐ.எம்.இ.ஐ எண் உதவியுடன் காவல் துறையினர் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று மீட்டு வந்துள்ளனர். கடந்த நான்கு மாதங்களில் மட்டும் ரூ.1.55 கோடி மதிப்புள்ள 1,382 செல்ஃபோன்களை மீட்டு அதன் உரியவர்களிடம் காவல் துறையினர் ஒப்படைத்துள்ளனர்.

சென்னையில் திருடுபோன செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு

கடந்த ஏழு மாதங்களில் மட்டும் ரூ.4.39 கோடி மதிப்புள்ள 4,000 செல்ஃபோன்களை மீட்டு அதன் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

சென்னையில் சைபர் கிரைம் காவல் நிலையங்களில் கடந்த ஏழு மாதங்களில் பண மோசடி தொடர்பான ஏராளமான புகார்கள் வந்தன. அதில் ரூ.2.80 லட்சம் பணத்தை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வந்த 7 போலி கால் சென்டர்கள் கண்டறியப்பட்டுள்ளன. அதில் ரூ.10 கோடிக்கும் மேல் பண மோசடி நடந்துள்ளது. இது தொடர்பாக பலரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்" இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படிங்க: பகல் நேரத்தில் வெளி மாவட்ட பேருந்துகள் இயக்கம்

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் திருடுபோன செல்ஃபோன்களை அதன் உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி இன்று (ஏப்ரல்.20) நடைபெற்றது. இதற்கு காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் தலைமை தாங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, "சென்னையில் திருடுபோன செல்ஃபோன்களை ஐ.எம்.இ.ஐ எண் உதவியுடன் காவல் துறையினர் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று மீட்டு வந்துள்ளனர். கடந்த நான்கு மாதங்களில் மட்டும் ரூ.1.55 கோடி மதிப்புள்ள 1,382 செல்ஃபோன்களை மீட்டு அதன் உரியவர்களிடம் காவல் துறையினர் ஒப்படைத்துள்ளனர்.

சென்னையில் திருடுபோன செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு

கடந்த ஏழு மாதங்களில் மட்டும் ரூ.4.39 கோடி மதிப்புள்ள 4,000 செல்ஃபோன்களை மீட்டு அதன் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

சென்னையில் சைபர் கிரைம் காவல் நிலையங்களில் கடந்த ஏழு மாதங்களில் பண மோசடி தொடர்பான ஏராளமான புகார்கள் வந்தன. அதில் ரூ.2.80 லட்சம் பணத்தை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வந்த 7 போலி கால் சென்டர்கள் கண்டறியப்பட்டுள்ளன. அதில் ரூ.10 கோடிக்கும் மேல் பண மோசடி நடந்துள்ளது. இது தொடர்பாக பலரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்" இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படிங்க: பகல் நேரத்தில் வெளி மாவட்ட பேருந்துகள் இயக்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.