ETV Bharat / state

ரூ. 44 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்; சுங்கத்துறை அதிரடி - chennai airport

சென்னை: திருவனந்தபுரம், சிங்கப்பூரிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 44 லட்சம் மதிப்புள்ள ஒரு கிலோ தங்கம் சுங்கத்துறை அலுவலர்களால் பறிமுதல் செய்யப்பட்டது.

Chennai
Chennai
author img

By

Published : Feb 3, 2020, 10:29 PM IST

சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அலுவலர்கள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அதில் சார்ஜாவிலிருந்து திருவனந்தபுரம் வழியாக சென்னைக்கு வந்த விமானப் பயணிகள் கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த ஸ்ரீஜீத் (23), அகமது சலீக் (27) ஆகியோர் உடைமைகளில் ரூ. 28 லட்சம் மதிப்புள்ள 663 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

அதேபோல், சிங்கப்பூரிலிருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த மலேசியாவைச் சேர்ந்த ராஜா சைஜா நாகராஜன் (37) என்ற பெண்மணியின் உடமைகளில் ரூ.16 லட்சத்து 71 ஆயிரம் மதிப்புள்ள 396 கிராம் கடத்தல் தங்க சங்கிலிகள் கைப்பற்றப்பட்டன. மொத்தம் ரூ. 44 லட்சத்து 71 ஆயிரம் மதிப்புள்ள ஒரு கிலோ 59 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டன.

சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அலுவலர்கள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அதில் சார்ஜாவிலிருந்து திருவனந்தபுரம் வழியாக சென்னைக்கு வந்த விமானப் பயணிகள் கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த ஸ்ரீஜீத் (23), அகமது சலீக் (27) ஆகியோர் உடைமைகளில் ரூ. 28 லட்சம் மதிப்புள்ள 663 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

அதேபோல், சிங்கப்பூரிலிருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த மலேசியாவைச் சேர்ந்த ராஜா சைஜா நாகராஜன் (37) என்ற பெண்மணியின் உடமைகளில் ரூ.16 லட்சத்து 71 ஆயிரம் மதிப்புள்ள 396 கிராம் கடத்தல் தங்க சங்கிலிகள் கைப்பற்றப்பட்டன. மொத்தம் ரூ. 44 லட்சத்து 71 ஆயிரம் மதிப்புள்ள ஒரு கிலோ 59 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டன.

இதையும் படிங்க: சென்னை விமான நிலையத்தில் ரூ.1.87 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்

Intro:திருவனந்தபுரம், சிங்கப்பூரில் இருந்து வந்த கடத்தி வந்த ரூ. 44 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ தங்கம் பறிமுதல் Body:திருவனந்தபுரம், சிங்கப்பூரில் இருந்து வந்த கடத்தி வந்த ரூ. 44 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்திற்கு பெரும் அளவில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது. இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் இருந்தனர். அப்போது சார்ஜாவில் இருந்து திருவந்தபுரம் வழியாக சென்னைக்கு விமானம் வந்தது. திருவனந்தபுரத்தில் இருந்து உள்நாட்டு பயணியாக பயணம் செய்த கேரளா கோழிக்கோட்டை சேர்ந்த ஸ்ரீஜீத்(23), அகமது சலீக்(27) ஆகியோரை சந்தேகத்தின் பேரில் சுங்க இலாகா அதிகாரிகள் நிறுத்தி விசாரித்தனர். அப்போது முன்னுக்கு பின் முரணாக பேசியதால் உடமைகளை சோதனை செய்தபோது எதுவுமில்லை. பின்னர் தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்த போதும் எதுவும் இல்லை. பின்னர் 2 பேரின் காலணி சற்று வித்தியாசமாக இருந்தது. இதையடுத்து காலணியை(ஷு) கழுற்றி சோதனை செய்தனர். அதில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். 2 பேரிடம் இருந்து ரூ. 28 லட்சம் மதிப்புள்ள 663 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.

சிங்கப்பூரில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த மலேசியாவை சேர்ந்த ராஜா சைஜா நாகராஜன் (37) என்ற பெண்னை நிறுத்தி விசாரித்தனர். அவரது உடமைக்குள் ரூ. 16 லட்சத்தி 71 ஆயிரம் மதிப்புள்ள 396 கிராம் தங்க சங்கிலிகளை கைப்பற்றினார்கள்.

3 பேரிடம் இருந்து ரூ. 44 லட்சத்தி 71 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 59 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். பிடிப்பட்டவர்களிடம் யாருக்காக கடத்தி வந்தனர், இதன் பின்னணியில் யார் உள்ளனர் என அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.