ETV Bharat / state

கிறிஸ்துமஸ் நாளில் பைக் ரேஸ்; 2 நாட்களில் சென்னையில் 15 பேர் கைது

கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது, பைக்ரேஸில் ஈடுபட்ட 13 கல்லூரி மாணவர்கள் உட்பட 15 பேரை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சென்னை போலீசார் கைது செய்துள்ளனர்.

author img

By

Published : Dec 27, 2022, 4:07 PM IST

Etv Bharat
Etv Bharat

சென்னை: கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி(Christmas), நள்ளிரவில் இளைஞர்கள் பைக்குகளில் அதிவேகமாகவும் சாகசம் புரிந்தும் பைக் ரேஸில் ஈடுபடுவதைத் தடுக்கவும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்நிலையில், சில இளைஞர்கள் பைக் ரேஸ் சாகசங்களில் நள்ளிரவில் ஈடுபட்டதாக தெரியவந்த நிலையில், பைக் ரேஸ் நடக்கும் இடங்களிலும் சிசிடிவிகளின் அடிப்படையில் சில இளைஞர்களின் பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அத்தோடு பைக் சாகசங்களில் ஈடுபட்டவர்களையும் கைது செய்தனர். அந்த வகையில், நேப்பியர் பாலத்தில் பைக் ரேஸில் ஈடுபட்ட இருவரை அண்ணா சதுக்கம் சட்டம் ஒழுங்கு போலீசார் நேற்று கைது செய்தனர். பாண்டி பஜார் போக்குவரத்து போலீசார் 7 பேரை கைது செய்தனர்.

இதில் ஆகாஷ், டேவிட் ஆகிய இருவர் நேற்று இரவு பாண்டிபஜார் போக்குவரத்து போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் தனுஷ், மனோஜ், சந்தோஷ், விஜய், முகமது செரீப் ஆகிய 5 பேரை கைது செய்த பாண்டி பஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

அதேபோல, அண்ணா சதுக்கம் போக்குவரத்து போலீசார் நேற்று இரவு கல்லூரி மாணவர்களான சூர்யா, சையது அர்பாத் மற்றும் மெக்கானிக் பிரதீப் ஆகிய 3 பேரை சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இன்று (டிச.27) காலை மேலும் 3 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக, பைக் ரேஸில் ஈடுபட்டால் கடுமையான தண்டை வழங்கப்படும் என காவல் துறை தெரிவித்துள்ள நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது பைக் ரேஸில் ஈடுபட்ட 15 பேரை கைது செய்துள்ளனர்.

இதையும் படிங்க: தென்காசியில் பைக் ரைடு சென்றாரா அஜித்..? உண்மையில் நடந்தது என்ன?

சென்னை: கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி(Christmas), நள்ளிரவில் இளைஞர்கள் பைக்குகளில் அதிவேகமாகவும் சாகசம் புரிந்தும் பைக் ரேஸில் ஈடுபடுவதைத் தடுக்கவும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்நிலையில், சில இளைஞர்கள் பைக் ரேஸ் சாகசங்களில் நள்ளிரவில் ஈடுபட்டதாக தெரியவந்த நிலையில், பைக் ரேஸ் நடக்கும் இடங்களிலும் சிசிடிவிகளின் அடிப்படையில் சில இளைஞர்களின் பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அத்தோடு பைக் சாகசங்களில் ஈடுபட்டவர்களையும் கைது செய்தனர். அந்த வகையில், நேப்பியர் பாலத்தில் பைக் ரேஸில் ஈடுபட்ட இருவரை அண்ணா சதுக்கம் சட்டம் ஒழுங்கு போலீசார் நேற்று கைது செய்தனர். பாண்டி பஜார் போக்குவரத்து போலீசார் 7 பேரை கைது செய்தனர்.

இதில் ஆகாஷ், டேவிட் ஆகிய இருவர் நேற்று இரவு பாண்டிபஜார் போக்குவரத்து போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் தனுஷ், மனோஜ், சந்தோஷ், விஜய், முகமது செரீப் ஆகிய 5 பேரை கைது செய்த பாண்டி பஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

அதேபோல, அண்ணா சதுக்கம் போக்குவரத்து போலீசார் நேற்று இரவு கல்லூரி மாணவர்களான சூர்யா, சையது அர்பாத் மற்றும் மெக்கானிக் பிரதீப் ஆகிய 3 பேரை சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இன்று (டிச.27) காலை மேலும் 3 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக, பைக் ரேஸில் ஈடுபட்டால் கடுமையான தண்டை வழங்கப்படும் என காவல் துறை தெரிவித்துள்ள நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது பைக் ரேஸில் ஈடுபட்ட 15 பேரை கைது செய்துள்ளனர்.

இதையும் படிங்க: தென்காசியில் பைக் ரைடு சென்றாரா அஜித்..? உண்மையில் நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.