ETV Bharat / state

கடையின் லாக்கரை உடைத்து ரூ.15லட்சம் கொள்ளை!

author img

By

Published : Oct 1, 2019, 12:59 PM IST

சென்னை : குளிர்பானம் விநியோகம் செய்யும் கடையின் லாக்கரை உடைத்து ரூ.15லட்சத்தை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

கடையிமன் லாக்கர் உடைத்து ரூ.15 லட்சம் கொள்ளை

சென்னை ஏகத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயகுமார்(55). இவர் நெற்குன்றம் பால்வாடி தெருவில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக குளிர்பானம், பிஸ்கட் போன்ற பொருட்களை விநியோகம் செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

மேலும், இந்த நிறுவனத்தில் 60க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 28ஆம் தேதி இரவு வரவு செலவு கணக்கு பார்த்ததில் ரூ.15 லட்சம் இருந்துள்ளது. அதனை லாக்கரில் வைத்து பூட்டிவிட்டுச் சென்றுள்ளார்.

பின்னர், நேற்று காலை நிறுவனத்தை திறந்த ஜெயகுமார், லாக்கரில் உள்ள பணத்தை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றதைக்கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

பின்பு, இது தொடர்பாக அவர் கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இப்புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க : கோலம்போட்ட பெண்ணிடம் கொள்ளையடித்த அடையாளம் தெரியாத நபர்!

சென்னை ஏகத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயகுமார்(55). இவர் நெற்குன்றம் பால்வாடி தெருவில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக குளிர்பானம், பிஸ்கட் போன்ற பொருட்களை விநியோகம் செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

மேலும், இந்த நிறுவனத்தில் 60க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 28ஆம் தேதி இரவு வரவு செலவு கணக்கு பார்த்ததில் ரூ.15 லட்சம் இருந்துள்ளது. அதனை லாக்கரில் வைத்து பூட்டிவிட்டுச் சென்றுள்ளார்.

பின்னர், நேற்று காலை நிறுவனத்தை திறந்த ஜெயகுமார், லாக்கரில் உள்ள பணத்தை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றதைக்கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

பின்பு, இது தொடர்பாக அவர் கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இப்புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க : கோலம்போட்ட பெண்ணிடம் கொள்ளையடித்த அடையாளம் தெரியாத நபர்!

Intro:Body:நெற்குன்றத்தில் கடையின் லாக்கரை உடைத்து 15லட்சம் கொள்ளை.

சென்னை ஏகத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார்(55).இவர் நெற்குன்றம் பால்வாடி தெருவில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக குளிர்பானம் மற்றும் பிஸ்கட் ஆகிய பொருட்களை விநியோகம் செய்யும் நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார்.

மேலும் இந்த அலுவலகத்தில் 60க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.இந்நிலையில் கடந்த 28ஆம் தேதி இரவு வரவு செலவு கணக்குகளை ஜெயகுமார் பார்த்துவிட்டு சுமார் 15 லட்ச ரூபாய் லாக்கரில் வைத்துவிட்டு சென்று உள்ளார்.

பின்னர் நேற்று காலை நிறுவனத்தை திறக்கும் போது மர்ம நபர் சிலர் மேஜையில் உள்ள சாவியை எடுத்து லாக்கரில் உள்ள பணத்தை திருடி சென்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.மேலும் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவான டிவிஆர் கருவியையும் மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.

இது தொடர்பாக ஜெயக்குமார் கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். இப்புகாரின் அடிப்படையில் போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.