செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள வீரணகுண்ணம் கிராமத்தைச் சேர்ந்தவர் பார்த்தசாரதி. இவர் தச்சு தொழில் செய்துவருகிறார். இவரது மனைவி வசந்திக்கும் (36) இவருக்கும் அடிக்கடி குடும்ப சண்டை ஏற்படும் நிலை இருந்து வந்துள்ளது.
நேற்று முன்தினம் மாலை வழக்கம் போல் பார்த்தசாரதியின் குடிப்பழக்கத்தால் தகராறு ஏற்பட்டதையடுத்து கணவன், மனைவி இருவருக்கும் தகராறு முற்றியது.
இதனால் ஆத்திரம் அடைந்த வசந்தி தனது பெண் குழந்தைகள் திவ்ய பாரதி (12), கவி ஸ்ரீ (10) இருவரையும் அழைத்துக் கொண்டு ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். இந்தத் தற்கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க... ரயிலில் பெண் தற்கொலை - பயணிகள் அதிர்ச்சி!