ETV Bharat / state

திமுகவை மொத்தமாக காலி செய்வோம் - பிரேமலதா - May day wishes From Premalatha Vijayakanth

சென்னை: உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு கோயம்பேடு தேமுதிக தலைமை கழகத்தில் கொடியை ஏற்றி, தொழிலாளர்களுக்கு இனிப்புகளை வழங்கினார் விஜயகாந்த்.

May day wishes From Premalatha Vijayakanth
author img

By

Published : May 1, 2019, 8:06 PM IST

உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை கழகத்தில் கொடியை ஏற்றிக் கூடியிருந்த ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இனிப்புகளை வழங்கி, காக்கி சீருடை வழங்கினார். அதன்பின் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், ‘தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு தேமுதிக சார்பில் மே தின வாழ்த்துக்கள் கூறிக்கொள்கிறேன். நான்கு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக சட்டப்பேரவை உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர். இது சபாநாயகரும், தேர்தல் ஆணையமும்தான் முடிவு செய்ய வேண்டும்.

தேமுதிக சார்பில் நான்கு தொகுதிகளுக்குப் பரப்புரைச் செய்ய வேண்டும் என முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார். அதனடிப்படையில் எந்தெந்த தொகுதிகளில் தேமுதிக பரப்புரை செய்வோம் என்பது குறித்து விரைவில் அறிவிப்போம். சாதி கலவரங்களைத் தூண்டுபவர்கள் யாராக இருந்தாலும் கண்டிக்க வேண்டிய ஒன்று. இதைத் தூண்டுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் முடிவுக்குப் பின் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்ற எதிர்க்கட்சியின் கருத்து குறித்த கேள்விக்கு, மே 23ஆம் தேதி எல்லா கேள்விகளுக்கும் விடை கிடைக்கும்’ என்றார்.

உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை கழகத்தில் கொடியை ஏற்றிக் கூடியிருந்த ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இனிப்புகளை வழங்கி, காக்கி சீருடை வழங்கினார். அதன்பின் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், ‘தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு தேமுதிக சார்பில் மே தின வாழ்த்துக்கள் கூறிக்கொள்கிறேன். நான்கு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக சட்டப்பேரவை உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர். இது சபாநாயகரும், தேர்தல் ஆணையமும்தான் முடிவு செய்ய வேண்டும்.

தேமுதிக சார்பில் நான்கு தொகுதிகளுக்குப் பரப்புரைச் செய்ய வேண்டும் என முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார். அதனடிப்படையில் எந்தெந்த தொகுதிகளில் தேமுதிக பரப்புரை செய்வோம் என்பது குறித்து விரைவில் அறிவிப்போம். சாதி கலவரங்களைத் தூண்டுபவர்கள் யாராக இருந்தாலும் கண்டிக்க வேண்டிய ஒன்று. இதைத் தூண்டுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் முடிவுக்குப் பின் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்ற எதிர்க்கட்சியின் கருத்து குறித்த கேள்விக்கு, மே 23ஆம் தேதி எல்லா கேள்விகளுக்கும் விடை கிடைக்கும்’ என்றார்.

உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை கழகத்தில் கொடியை ஏற்றி கூடியிருந்த  ஆட்டோ தொழிலாளர்களுக்கு இனிப்புகளை வழங்கி, காக்கி சீருடை வழங்கினார்.

இதில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், கழக துணை செயலாளர்கள் எல்.கே.சுதிஷ்,பார்த்தசாரதி,மாவட்ட செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகள்,  தொண்டர்கள், தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

 *பிரமலதா விஜயகாந்த் செய்தியாளர் சந்திப்பு..*

தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு தேமுதிக சார்பில் மே தின வாழ்த்துக்கள்..

4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைப்பெற உள்ளது அதற்கு முன்னதாக எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர்..இது சபாநாயகர் மற்றும் தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்ய வேண்டும்.

4 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் தேமுதிக கடுமையாக உழைத்து வெற்றிக்காக பாடுபடுவோம்..

4 தொகுதிகளில் நான் பிரச்சாரத்தில் ஈடுபடுவேன்.

 தேமுதிக சார்பில் 4 தொகுதிகளுக்கு பிரச்சாரம் செய்ய வெண்டும் என முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார். அதனடிப்படையில் எந்ததெந்த தொகுதிகளில் தேமுதிக பிரச்சாரம் செய்வோம் என்பது குறித்து விரைவில் அறிவிப்போம்.

 திமுக ஆட்சியில் கூட சபாநாயகர் நடுநிலையோடு இல்லை என்று கூறிய பிரேமலதா, இது எதிர்க்கட்சிகள் வேண்டும் என்றே கூறும் பொய் குற்றச்சாட்டு என்றார்.

 ஜாதி கலவரங்களை தூண்டுபவர்கள் யாராக இருந்தாலும் கண்டிக்க வேண்டிய ஒன்று. இதில் தூண்டுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 தேர்தல் முடிவுக்கு பின் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்ற எதிர்க்கட்சி கருத்து குறித்த கேள்விக்கு, மே 23ம் தேதி எல்லா கேள்விகளுக்கும் விடை கிடைக்கும்.

எங்கள் கூட்டணி 40 மட்டுமல்ல, 18 சட்டமன்ற இடைத்தேர்தலிலும் வெற்றி பெறுவோம். மேலும் இந்த ஆட்சி தொடரும் என்று தெரிவித்தார்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.