ETV Bharat / state

பாராளுமன்றத்தில் நுழைய முடியாத தார்மீக குற்றவாளி வைகோ - தமிழிசை காட்டம்! - தமிழக பா.ஜ.க

சென்னை: "வைகோ தான் ஒரு குற்றவாளி என்பதை உணர்ந்து பேச வேண்டும். பாராளுமன்றத்தில் நுழையமுடியாத தார்மீக குற்றவாளி வைகோ" என்று, தமிழிசை குற்றச்சாட்டியுள்ளார்.

தலைவர் தமிழிசை
author img

By

Published : Jul 16, 2019, 11:44 PM IST

தமிழ்நாடு பாஜக தலைமை அலுவலகத்தில் மக்கள் குறைகள் கேட்டறியும் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு மக்கள் குறைகளை கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களிட்ம் பேசிய அவர், “அஞ்சல் துறையில் அந்தெந்த பிராந்திய மொழிகளில் தேர்வு எழுதலாம் என்று அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். துறை ரீதியான அலுவலர்கள் கேட்டுக் கொண்டதால்தான் இந்தி மொழி பற்றிய அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன. இதற்கும் அமைச்சகத்துக்கும் சம்பந்தம் இல்லை.

திருமயத்தில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்குள்ளும் நிலை ஏற்பட்டதால் ரயில்வே துறையினர் கேட்டு கொண்டதால் தான் அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. 2016 ஆம் ஆண்டு அஞ்சல் துறை தேர்வில் நடைபெற்ற முறைகேட்டில் தமிழர் அல்லாதோர் அதிகம் பேர் தேர்ச்சி பெற்றனர். எனவே தான் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியானது.

தமிழக பாஜக தலைவர் தமிழிசை செய்தியாளர் சந்திப்பு

ராஜபக்சே குற்றவாளி என்று வைகோ கூறுகிறார். அந்த ராஜபக்சேவுக்கு துணை போன காங்கிரஸ் குற்றவாளி. அந்த காங்கிஸ் உடன் கூட்டணி வைத்துள்ள திமுக ஒரு குற்றவாளி. அவர்களோடு கூட்டு வைத்த வைகோ ஒரு குற்றவாளி. வைகோ தான் ஒரு குற்றவாளி என்பதை உணர்ந்து பேச வேண்டும். பாராளுமன்றத்தில் நுழையமுடியாத தார்மீக குற்றவாளி வைகோ. ஆளும்கட்சியாக கூட்டணி ஆட்சியை நடத்தியபோது ஈழத் தமிழர்களை காக்க முடிவியல்லை என்றால் ஆளும்கட்சியாக இருப்பதற்கு திமுகவுக்கு தகுதியில்லை. எதிர்க்கட்சியாக இருப்பதற்கு தான் திமுகவுக்கு தகுதி இருக்கிறது. துர்கா ஸ்டாலின் அத்திவரதரை தரிசித்திருப்பது, குடும்பமே ஸ்டாலினை புறக்கணிக்கிறது என்றுதான் கூற வேண்டும் எனத் தெரிவித்தார்.

தமிழ்நாடு பாஜக தலைமை அலுவலகத்தில் மக்கள் குறைகள் கேட்டறியும் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு மக்கள் குறைகளை கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களிட்ம் பேசிய அவர், “அஞ்சல் துறையில் அந்தெந்த பிராந்திய மொழிகளில் தேர்வு எழுதலாம் என்று அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். துறை ரீதியான அலுவலர்கள் கேட்டுக் கொண்டதால்தான் இந்தி மொழி பற்றிய அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன. இதற்கும் அமைச்சகத்துக்கும் சம்பந்தம் இல்லை.

திருமயத்தில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்குள்ளும் நிலை ஏற்பட்டதால் ரயில்வே துறையினர் கேட்டு கொண்டதால் தான் அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. 2016 ஆம் ஆண்டு அஞ்சல் துறை தேர்வில் நடைபெற்ற முறைகேட்டில் தமிழர் அல்லாதோர் அதிகம் பேர் தேர்ச்சி பெற்றனர். எனவே தான் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியானது.

தமிழக பாஜக தலைவர் தமிழிசை செய்தியாளர் சந்திப்பு

ராஜபக்சே குற்றவாளி என்று வைகோ கூறுகிறார். அந்த ராஜபக்சேவுக்கு துணை போன காங்கிரஸ் குற்றவாளி. அந்த காங்கிஸ் உடன் கூட்டணி வைத்துள்ள திமுக ஒரு குற்றவாளி. அவர்களோடு கூட்டு வைத்த வைகோ ஒரு குற்றவாளி. வைகோ தான் ஒரு குற்றவாளி என்பதை உணர்ந்து பேச வேண்டும். பாராளுமன்றத்தில் நுழையமுடியாத தார்மீக குற்றவாளி வைகோ. ஆளும்கட்சியாக கூட்டணி ஆட்சியை நடத்தியபோது ஈழத் தமிழர்களை காக்க முடிவியல்லை என்றால் ஆளும்கட்சியாக இருப்பதற்கு திமுகவுக்கு தகுதியில்லை. எதிர்க்கட்சியாக இருப்பதற்கு தான் திமுகவுக்கு தகுதி இருக்கிறது. துர்கா ஸ்டாலின் அத்திவரதரை தரிசித்திருப்பது, குடும்பமே ஸ்டாலினை புறக்கணிக்கிறது என்றுதான் கூற வேண்டும் எனத் தெரிவித்தார்.

Intro:Body:சென்னையிலுள்ள தமிழக பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் மக்கள் குறைகள் கேட்டறியும் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை செளந்தர்ராஜன் கலந்துகொண்டு மக்கள் குறைகளை கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களிட்ம் பேசிய அவர், “ 15 ஆம் தேதி முதல் 21 தேதி வரை உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இயற்கை நலனை கருதி 1 வாக்குச்சாவடிக்கு ஐந்து மரங்களை நட்டு வருகிறோம். மழை வந்துள்ளது. ஆண்டவனுக்கு நன்றி. யாகம் செய்தவர்களுக்கும் தியாகம் செய்தவர்களுக்கும் நன்றி. நம் தாகத்தை தீர்க்கும் என்று நம்புகிறேன்.

அஞ்சல் துறையில் அந்தந்த பிராந்திய மொழிகளில் தேர்வு எழுதலாம் என்று மதிப்பிற்குரிய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். அதற்கு அவருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். துறை ரீதியான அதிகாரிகள் கேட்டு கொண்டதால் தான் இந்தி மொழி பற்றிய அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன. இதற்கும் அமைச்சகத்துக்கும் சமபந்தம் இல்லை. திருமயத்தில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்குள்ளும் நிலை ஏற்பட்டதால் ரயில்வே துறையினர் கேட்டு கொண்டதால் தான் அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. 2016 ஆம் ஆண்டு அஞ்சல் துறை தேர்வில் நடைபெற்ற முறைகேட்டில் தமிழர் அல்லாதோர் அதிகம் பேர் தேர்ச்சி பெற்றனர். எனவே தான் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியானது.

தற்போது இது தி.மு.க. வுக்கு கிடைத்த வெற்றி என்று கூறி வருகின்றனர். பிஒரச்னைக்கு செவி சாய்க்கின்ற அரசு மத்தியில் இருக்கிறது. இதே திமுக ஆட்சியில் தான் நம் தோப்புல் கொடியான ஈழத் தமிழர்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்டனர். இதற்கு ராஜினாமா நாடகம், உண்ணாவிரத நாடகம் என்று பல நாடகங்களை நடத்தியது தி.மு.க. அன்று மத்தியில் இருந்த காங்கிரஸ் இவர்களுக்கு செவி சாய்த்தா. இது தான் காங்கிரசுக்கும் பா.ஜ.க வுக்கும் இருக்கும் வித்தியாசம்.

ராஜபக்சே குற்றவாளி என்று வைகோ கூறுகிறார். அந்த ராஜபக்சேவுக்கு துணை போன காங்கிரஸ் குற்றவாளி. அந்த காங்கிரசுடன் கூட்டணி வைத்துள்ள திமுக ஒரு குற்றவாளி. அவர்களோடு கூட்டு வைத்த வைகோ ஒரு குற்றவாளி. வைகோ தான் ஒரு குற்றவாளி என்பதை உணர்ந்து பேச வேண்டும். பத்திரிகையாளர் கேட்ட கேள்விக்கு பொறுமையாக பதில் கூற முடியாத வைகோ நாடாளுமன்றத்தில் சிறப்பாக பேசி வரும் அமைச்சர்கள் பாராளுமன்ற நாகரீகத்தோடு பேசவில்லை என்று கூறுகிறார். பாராளுமன்றத்தில் நுழையமுடியாத தார்மீக குற்றவாளி வைகோ. நீங்கள் எந்த கேள்வி கேட்டாலும் நான் மெதுவாக பதில் சொல்வேன். வைகோ மாதிரி நீங்கள் எந்த பத்திரிகை என்று கேட்க மாட்டேன்.

ஆளும்கட்சியாக, கூட்டணி ஆட்சியை நடத்திய போது ஈழத் தமிழர்களை காக்க முடிவியல்லை என்றால் ஆளும்கட்சியாக இருப்பதற்கு தி.மு.க வுக்கு தகுதியில்லை. எதிர்க்கட்சியாக இருப்பதற்கு தான் தி.மு.க வுக்கு தகுதி இருக்கிறது.

தமிழக அரசாங்க பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்துள்ளது என்பதை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். அரசாங்க பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து தனியார் பள்ளிகளில் அதிகரித்துள்ளது. இதில் தி.மு.க வினர் நடத்திவரும் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை எவ்வளவு அதிகரித்துள்ளது என்று கூற வேண்டும். மது உற்பத்தி போல் தான் எல்லா தொழிற்சாலைகளையும் அவர்கள் தான் நடத்தி வருகிறார்களே. துர்கா ஸ்டாலின் அத்திவரதரை தரிசித்திருப்பது குடும்பமே ஸ்டாலினை புறக்கணிக்கிறது என்று தான் கூற வேண்டும்.

உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் என்று தான் நானும் வலியுறுத்தி வருகிறேன்” என்று தெரிவித்தார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.