இது குறித்து தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கட்டடக்கலை பொறியியல் ( B.Arch) கல்வி பயில விரும்பும் மாணவர்கள் பொறியியல் கல்வி சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம்.
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள், பல்வகை தொழில்நுட்பக் கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை உள்ளடக்கிய 46 பொறியியல் சேர்க்கை உதவி மையங்கள் உதவியால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பதிவு செய்ய வழிகாட்டுதல் வழங்கப்படும்.
மாணவர்கள் விண்ணப்பங்களை இணையதளம் வாயிலாக 15. 7.2019 ஆம் தேதி முதல் 26. 7.2019 வரை 12 நாட்களுக்குள் பதிவு செய்யலாம்.
இதனைத் தொடர்ந்து, ஜுலை மாதம் இறுதி வாரத்தில் சான்றிதழ் சரிபார்த்தல் பணி 46 பொறியியல் சேர்க்கை உதவி மையங்களில் நடைபெறும். அதன்பின் இணையதள அட்டவணைப்படி கலந்தாய்வு நடைபெறும்.” என அதில் கூறப்பட்டுள்ளது.