ETV Bharat / state

அட்சய திருதியை... வியக்க வைக்கும் விஷயங்கள் - பாகம் 1

author img

By

Published : May 7, 2019, 9:39 AM IST

Updated : May 7, 2019, 1:05 PM IST

அட்சய திருதியையின் முக்கியத்துவத்தையும், பெருமைகளையும் `பவிஷ்யோத்தர-புராணம்‘ விரிவாக விவரிக்கிறது. அட்சய திருதியை குறித்த அபூர்வ விஷயங்கள் பற்றி காணலாம்.

akshaya thiruthiyai secrets matters

அட்சய திருதியை அன்று நகைக்கடைகளில் நகை வாங்குபவர்களின் கூட்டம் அலைமோதும். அப்படி அலைமோதும் மக்களின் பார்வைக்காக அட்சய திருதியை குறித்து வியக்க வைக்கும் விஷயங்களை வைக்கிறோம். பின்வருமாறு:

  • அட்சய திருதியை தினத்தன்றுதான் கிருதயுகம் பிறந்தது.
  • கங்கை நதி பூமியை முதன் முதலில் அட்சய திருதியை தினத்தன்றுதான் தொட்டது.
  • வனவாச காலத்தில் பாண்டவர்கள் அட்சயப் பாத்திரம் பெற்றது அட்சய திருதியை தினத்தன்றுதான்.
  • அட்சய திருதியை நாளில்தான் மணிமேகலை அட்சய பாத்திரம் பெற்றாள்.
  • அட்சய திருதியையின் முக்கியத்துவத்தையும், பெருமைகளையும் `பவிஷ்யோத்தர-புராணம்‘ விரிவாக விவரிக்கிறது.
  • அட்சய திருதியை தினத்தன்றுதான் ஐஸ்வர்ய லட்சுமி, தான்ய லட்சுமி அவதாரங்கள் நிகழ்ந்தன.
  • அட்சய திருதியை தினத்தன்றுதான் குபேரன் - நிதி கலசங்களை பெற்றார்.
  • சிவபெருமான் அன்னபூரணியிடம் பிட்சாடனராக வந்து யாசகம் பெற்றது அட்சய திருதியை தினத்தன்றுதான்.
  • ஸ்ரீரங்கம் கோயில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்
  • பராசக்தியின் ஒரு அம்சமான சாகம்பரிதேவி இந்த உலகில் காய்கறிகளையும், மூலிகைச் செடிகளையும் உருவாக்கியவர் என்று புராணம் சொல்கிறது. அட்சய திருதியை தினத்தன்றுதான் அவர் காய்கறி, மூலிகைகளை உருவாக்கினார்.
  • அட்சய திருதியை தினத்தன்றுதான் விஷ்ணுவின் ஆறாவது அவதாரமான பரசுராமர் அவதரித்தார்.
  • ரோகிணி நட்சத்திர நாளில் வரும் அட்சய திருதியை மிக, மிக சிறப்பு வாய்ந்ததாகும்.
  • அட்சய திருதியை நாளில்தான் விநாயகருக்கு மகாபாரதத்தை வியாசர் போதித்தார்.
  • வடமாநிலங்களில் அட்சய திருதியை தினத்தன்று திருமணம் நடத்துவதை புனிதமாகக் கருதுகிறார்கள்.
  • ஹரியானா, பஞ்சாபில் அதிகமாக உள்ள ஜாட் இனத்தவர்கள் அட்சய திருதியை தினத்தன்று மறக்காமல் மண்வெட்டி எடுத்துக் கொண்டு வயலுக்குச் செல்வார்கள்.

மேலும், பல்வேறு சுவாரஸ்ய தகவல்களை இனிவரும் பாகங்களில் காணலாம்.

அட்சய திருதியை அன்று நகைக்கடைகளில் நகை வாங்குபவர்களின் கூட்டம் அலைமோதும். அப்படி அலைமோதும் மக்களின் பார்வைக்காக அட்சய திருதியை குறித்து வியக்க வைக்கும் விஷயங்களை வைக்கிறோம். பின்வருமாறு:

  • அட்சய திருதியை தினத்தன்றுதான் கிருதயுகம் பிறந்தது.
  • கங்கை நதி பூமியை முதன் முதலில் அட்சய திருதியை தினத்தன்றுதான் தொட்டது.
  • வனவாச காலத்தில் பாண்டவர்கள் அட்சயப் பாத்திரம் பெற்றது அட்சய திருதியை தினத்தன்றுதான்.
  • அட்சய திருதியை நாளில்தான் மணிமேகலை அட்சய பாத்திரம் பெற்றாள்.
  • அட்சய திருதியையின் முக்கியத்துவத்தையும், பெருமைகளையும் `பவிஷ்யோத்தர-புராணம்‘ விரிவாக விவரிக்கிறது.
  • அட்சய திருதியை தினத்தன்றுதான் ஐஸ்வர்ய லட்சுமி, தான்ய லட்சுமி அவதாரங்கள் நிகழ்ந்தன.
  • அட்சய திருதியை தினத்தன்றுதான் குபேரன் - நிதி கலசங்களை பெற்றார்.
  • சிவபெருமான் அன்னபூரணியிடம் பிட்சாடனராக வந்து யாசகம் பெற்றது அட்சய திருதியை தினத்தன்றுதான்.
  • ஸ்ரீரங்கம் கோயில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்
  • பராசக்தியின் ஒரு அம்சமான சாகம்பரிதேவி இந்த உலகில் காய்கறிகளையும், மூலிகைச் செடிகளையும் உருவாக்கியவர் என்று புராணம் சொல்கிறது. அட்சய திருதியை தினத்தன்றுதான் அவர் காய்கறி, மூலிகைகளை உருவாக்கினார்.
  • அட்சய திருதியை தினத்தன்றுதான் விஷ்ணுவின் ஆறாவது அவதாரமான பரசுராமர் அவதரித்தார்.
  • ரோகிணி நட்சத்திர நாளில் வரும் அட்சய திருதியை மிக, மிக சிறப்பு வாய்ந்ததாகும்.
  • அட்சய திருதியை நாளில்தான் விநாயகருக்கு மகாபாரதத்தை வியாசர் போதித்தார்.
  • வடமாநிலங்களில் அட்சய திருதியை தினத்தன்று திருமணம் நடத்துவதை புனிதமாகக் கருதுகிறார்கள்.
  • ஹரியானா, பஞ்சாபில் அதிகமாக உள்ள ஜாட் இனத்தவர்கள் அட்சய திருதியை தினத்தன்று மறக்காமல் மண்வெட்டி எடுத்துக் கொண்டு வயலுக்குச் செல்வார்கள்.

மேலும், பல்வேறு சுவாரஸ்ய தகவல்களை இனிவரும் பாகங்களில் காணலாம்.

அட்சய திருதியை... வியக்க வைக்கும் விஷயங்கள் - பாகம் 2

அட்சய திருதியை... வியக்க வைக்கும் விஷயங்கள் - பாகம் 3

அட்சய திருதியை... வியக்க வைக்கும் விஷயங்கள் - பாகம் 4

Intro:Body:Conclusion:
Last Updated : May 7, 2019, 1:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.