ETV Bharat / state

பொன்பரப்பி விவகாரம்: தமிழக அரசுக்கு தினகரன் கண்டனம்

author img

By

Published : Apr 21, 2019, 8:54 AM IST

Updated : Apr 21, 2019, 9:51 AM IST

அரியலூர்: பொன்பரப்பி கிராமத்தில் நடத்த வன்முறைகள் கவலை அளிப்பதாக அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.

கோப்புப்படம்

அரியலூர் மாவட்டம், பொன்பரப்பி கிராமத்தில் தேர்தலையொட்டி நடந்த மோதலும், அதன் தொடர்ச்சியாக நிகழ்ந்த வன்முறைகளும் தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், தற்போது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பொன்பரப்பி கிராமத்தில் தேர்தலையொட்டி நடந்த மோதலும், அதன் தொடர்ச்சியாக நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்களும், அப்பகுதியில் சமூகப் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும், இப்பிரச்னை குறித்து தொடக்கத்திலேயே உரிய நடவடிக்கை எடுக்காமல் இந்தளவுக்குக் கொண்டு சென்றது முதலமைச்சர் பழனிசாமி அரசின் காவல்துறைதான்.

சாதியையும், மதத்தையும் அரசியலில் தொடர்புப்படுத்தினால் சமூக அமைதியும், மக்களின் நிம்மதியும் பறிபோய்விடும். தனிப்பட்ட சிலரின் அரசியல் லாபங்களுக்காக பொது அமைதி குலைக்கப்படுவதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

மேலும், இருதரப்பிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்குவதோடு, இதனை மேலும் வளர்த்துக் குளிர்காய நினைக்கும் முயற்சிகளை அரசாங்கம் அனுமதிக்கக்கூடாது" என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அரியலூர் மாவட்டம், பொன்பரப்பி கிராமத்தில் தேர்தலையொட்டி நடந்த மோதலும், அதன் தொடர்ச்சியாக நிகழ்ந்த வன்முறைகளும் தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், தற்போது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பொன்பரப்பி கிராமத்தில் தேர்தலையொட்டி நடந்த மோதலும், அதன் தொடர்ச்சியாக நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்களும், அப்பகுதியில் சமூகப் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும், இப்பிரச்னை குறித்து தொடக்கத்திலேயே உரிய நடவடிக்கை எடுக்காமல் இந்தளவுக்குக் கொண்டு சென்றது முதலமைச்சர் பழனிசாமி அரசின் காவல்துறைதான்.

சாதியையும், மதத்தையும் அரசியலில் தொடர்புப்படுத்தினால் சமூக அமைதியும், மக்களின் நிம்மதியும் பறிபோய்விடும். தனிப்பட்ட சிலரின் அரசியல் லாபங்களுக்காக பொது அமைதி குலைக்கப்படுவதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

மேலும், இருதரப்பிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்குவதோடு, இதனை மேலும் வளர்த்துக் குளிர்காய நினைக்கும் முயற்சிகளை அரசாங்கம் அனுமதிக்கக்கூடாது" என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 பொன்பரப்பியில் நடந்த வன்முறை சம்பவம் கவலை அளிக்கிறது : டிடிவி தினகரன் 

அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் தேர்தலையொட்டி நடந்த மோதலும்அதன் தொடர்ச்சியாக நிகழ்ந்த வன்முறை சம்பவங்களும் தமிழகத்தில் பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சி அடைய வைத்து இருக்கின்றது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவிதித்தறிந்த நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொது செயலாளர் டிடிவி தினகரன் தனது கண்டனத்தை தெரிவித்துஇருக்கிறார். இது தொடர்பாக அவர் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துஇருப்பதாவது :

காவல்துறையின் தோல்வியைக் காட்டுகிறது!
அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் தேர்தலையொட்டி நடந்த மோதலும்அதன் தொடர்ச்சியாக நிகழ்ந்த வன்முறை சம்பவங்களும், அப்பகுதியில்சமூகப்பதற்றத்தை ஏற்படுத்தி இருப்பது கவலை அளிக்கிறது.தொடக்கத்திலேயே இப்பிரச்சினையில் உரிய நடவடிக்கை எடுக்காமல்இந்தளவுக்கு கொண்டு சென்ற பழனிச்சாமி அரசின் காவல்துறைக்குகண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன்.

சாதியையோ, மதத்தையோ அரசியலில் தொடர்புப்படுத்தினால் சமூகஅமைதியும் மக்களின் நிம்மதியும் பறிபோய்விடும். தனிப்பட்ட சிலரின் அரசியல்லாபங்களுக்காக பொது அமைதி  குலைக்கப்படுவதை எந்த வகையிலும்ஏற்றுக்கொள்ள முடியாது. இதனால் பாதிக்கப்படுவது அன்றாடம் உழைத்துசாப்பிடுகிற அப்பாவி ஏழை மக்கள்தான். தேர்தல்கள் வரும்; போகும்.அனைத்துத் தரப்பு மக்கள் அமைதியாக வாழ்வதுதான் முக்கியம்.

 எனவே, இரு தரப்பிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையானநிவாரணங்களை வழங்குவதோடு இதற்கு மேலும் இப்பிரச்சினையை வளர்த்துகுளிர் காய
 நினைக்கும் முயற்சிகளை அரசாங்கம் அனுமதிக்கக்கூடாது.வன்முறைக்கு காரணமானவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். உள்துறை செயலாளர், டி.ஜி.பி உள்ளிட்ட அதிகாரிகள் நேரடியாகதலையிட்டு அரியலூர் மாவட்டத்தில் முழு 
அமைதியை ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Last Updated : Apr 21, 2019, 9:51 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.