ETV Bharat / state

அரியலூரில் மூன்றாயிரம் மரக்கன்று நடும் பணி தொடக்கம்! - மரக்கன்றுகள் நடும் பணி

அரியலூர்: நெடுஞ்சாலை ஓரங்களில் மூன்றாயிரம் மரக்கன்றுகளை நடும் பணியை நெடுஞ்சாலைத் துறையினர் தொடங்கியுள்ளனர்.

ariyalur highway workers
author img

By

Published : Sep 23, 2019, 11:37 PM IST

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் நெடுஞ்சாலை துறையினர் சார்பில் விருத்தாச்சலம், கும்பகோணம், மதனத்தூர் நெடுஞ்சாலையில் 10 அடி உயரம் கொண்ட மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றுவருகின்றன. இதில், 3000 மரக்கன்றுகள் நடுவதை இலக்காக வைத்து தற்போது 1,000 மரக்கன்றுகள் நெடுஞ்சாலையின் இரு புறங்களிலும் நடப்பட்டு வருகின்றன.

ஜெயங்கொண்டம், மதனத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள சாலையின் இரு ஓரங்களிலும் வேம்பு ,அரச மரம், ஆலமரம், நாவல் மரம், மகிழம்பூ மரம் போன்ற மரக்கன்றுகள் நடும் பணியை நெடுஞ்சாலைத் துறையினர் செய்துவருகின்றனர். நடப்பட்ட மரங்களை பாதுகாக்கும் வகையில் சுற்றிலும் மூங்கில் வேலி அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த மரக்கன்றுகளுக்கு சொட்டு நீர் பாசனம் முறையில் தண்ணீர் விடுவதற்கு அதன் அருகே குழாய்களும் அமைக்கப்பட்டுள்ளன.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் நெடுஞ்சாலை துறையினர் சார்பில் விருத்தாச்சலம், கும்பகோணம், மதனத்தூர் நெடுஞ்சாலையில் 10 அடி உயரம் கொண்ட மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றுவருகின்றன. இதில், 3000 மரக்கன்றுகள் நடுவதை இலக்காக வைத்து தற்போது 1,000 மரக்கன்றுகள் நெடுஞ்சாலையின் இரு புறங்களிலும் நடப்பட்டு வருகின்றன.

ஜெயங்கொண்டம், மதனத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள சாலையின் இரு ஓரங்களிலும் வேம்பு ,அரச மரம், ஆலமரம், நாவல் மரம், மகிழம்பூ மரம் போன்ற மரக்கன்றுகள் நடும் பணியை நெடுஞ்சாலைத் துறையினர் செய்துவருகின்றனர். நடப்பட்ட மரங்களை பாதுகாக்கும் வகையில் சுற்றிலும் மூங்கில் வேலி அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த மரக்கன்றுகளுக்கு சொட்டு நீர் பாசனம் முறையில் தண்ணீர் விடுவதற்கு அதன் அருகே குழாய்களும் அமைக்கப்பட்டுள்ளன.

Intro:அரியலூர் - நெடுஞ்சாலை ஓரங்களில் 3 ஆயிரம் மரம் நடும் பணி தொடக்கம் -சொட்டு நீர் முறைப்படி தண்ணீர் பாசனம்Body: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் நெடுஞ்சாலை துறையினர் சார்பில் விருத்தாச்சலம்,கும்பகோணம், மதனத்தூர் நெடுஞ்சாலையில் 10 அடி உயரம் கொண்ட மரக்கன்றுகளை நடும் பணி நடைபெற்று வருகிறது.

இதில் 3000 மரக்கன்றுகள் நடுவதை இலக்குவைத்துள்ளனர். தற்போது 1,000 மரக்கன்றுகள் நெடுஞ்சாலையின் இரு புறங்களிலும் நடப்பட்டு வருகிறது.

இப்பணி தற்போது ஜெயங்கொண்டம் மதனத்தூர் இடையே அனணக்குடம் அருகே சாலையின் இரு ஓரங்களிலும் ஐந்து விதமான மரக்கன்றுகள் நடப்படுகின்றன.

அதில் வேம்பு ,அரசமரம், ஆலமரம், நாவல் மரம், மகிழம்பூ மரம் போன்ற மரக்கன்றுகள் நெடுஞ்சாலைத் துறையின் மூலமாக நடப்பட்டு வருகின்றன.

நடப்பட்ட மரங்களை பாதுகாக்கும் பொருட்டு அவற்றை சுற்றிலும் மூங்கில் வேலி அமைக்கப்பட்டு வருகிறது.
மேலும் இந்த மரக்கன்றுகளுக்கு சொட்டு நீர் பாசனம் முறையில் தண்ணீர் விடுவதற்கு அதன் அருகே குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன.

Conclusion: மேலும் இந்த சாலை ஓரம் தற்போது நடப்படும் மரங்களால் வருங்காலத்தில் மரத்தின் நிழல் மூலம் மனிதர்களும் அடர்த்தியாக வளர கூடிய மரங்களால் பறவைகளும் பெரிய அளவில் பயன் அடையும் என நெடுஞ்சாலைத்துறையிர் தெரிவிக்கின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.