ETV Bharat / state

விழாவை தொடக்கி வைக்க வந்த ஆட்சியர் பிளாஸ்டிக்கை முடக்கி வைத்தார்!

author img

By

Published : Oct 2, 2019, 11:40 PM IST

அரியலூர்: தமிழ்நாடு காதி கிராப்ட் நிலையத்தில் சிறப்பு விற்பனை நிகழ்ச்சியை தொடங்கிவைக்கச் சென்ற மாவட்ட ஆட்சியர் அங்கிருந்த தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை அகற்ற உத்தரவிட்டார்.

ariyalur

காந்தி பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு கிராம தொழில் வாரியத்தின் காதி கிராப்ட் நிலையத்தில் சிறப்பு விற்பனை நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனை தொடங்கி வைக்க அரியலூர் மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் சென்றார். சிறப்பு விற்பனையை தொடக்கி வைத்த அவர், அந்நிலையத்தில் தடைசெய்யப்பட்ட தேநீர் கப்புகள், பிளாஸ்டிக் பைகள் இருப்பதை கவனித்துள்ளார்.

இதனால், காதி கிராப்ட் நிலைய மேலாளரை அழைத்து, அங்குள்ள தடைசெய்யப்பட்ட அனைத்துப் பிளாஸ்டிக் பொருட்களையும் உடனடியாக அகற்ற உத்தரவிட்டார்.

மேலும், இதனை வாங்கிய கடைகளைக் கண்டறிந்து விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் தடைசெய்யப்பட்ட பொருட்களை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு நகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:

"நாம் தினமும் டீக்கு பதிலாக பிளாஸ்டிக்கை குடிக்கிறோம்" - அதிர்ச்சி தகவலை வெளியிட்ட ஆராய்ச்சியாளர்

காந்தி பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு கிராம தொழில் வாரியத்தின் காதி கிராப்ட் நிலையத்தில் சிறப்பு விற்பனை நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனை தொடங்கி வைக்க அரியலூர் மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் சென்றார். சிறப்பு விற்பனையை தொடக்கி வைத்த அவர், அந்நிலையத்தில் தடைசெய்யப்பட்ட தேநீர் கப்புகள், பிளாஸ்டிக் பைகள் இருப்பதை கவனித்துள்ளார்.

இதனால், காதி கிராப்ட் நிலைய மேலாளரை அழைத்து, அங்குள்ள தடைசெய்யப்பட்ட அனைத்துப் பிளாஸ்டிக் பொருட்களையும் உடனடியாக அகற்ற உத்தரவிட்டார்.

மேலும், இதனை வாங்கிய கடைகளைக் கண்டறிந்து விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் தடைசெய்யப்பட்ட பொருட்களை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு நகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:

"நாம் தினமும் டீக்கு பதிலாக பிளாஸ்டிக்கை குடிக்கிறோம்" - அதிர்ச்சி தகவலை வெளியிட்ட ஆராய்ச்சியாளர்

Intro:அரியலூர் தமிழ்நாடு கிராம வாரியம் காதிகிராப்ட் வைக்கப்பட்டிருந்த டீ கப்புகள் தடைசெய்யப்பட்ட கடைகளை அகற்ற மாவட்ட ஆட்சியர் உத்தரவு


Body:அரியலூர் மாவட்டத்தில் காந்தி பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு கிராம தொழில் வாரியம் காதி கிராப்ட் சார்பில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்ப னை இன்று தொடங்குவதாக இருந்தது அதனை மாவட்ட ஆட்சியர் தொடக்கி வைப்பதாகும் இருந்தது நிகழ்ச்சிக்கு வந்த மாவட்ட ஆட்சியர் வெளியில் வைக்கப்பட்டிருந்த டீ கப்புகள் உள்ளே இருந்த தடைசெய்யபட்ட பைகளை அகற்ற உத்தரவிட்டார் மேலும் மற்ற பொருட்களை பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ள தகவல் தெரிவித்தார்


Conclusion:உடனடியாக அரியலூரில் கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் கடைசி படைப்புகளை கண்டறியுமாறு நகராட்சி ஆணையர் உத்தரவிட்டார்

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.