ETV Bharat / state

‘அதிநவீன தொழில்நுட்பத்தில் தமிழ்நாட்டில் ஆதித்யா ஏவுதள மையம்’

author img

By

Published : Feb 10, 2020, 11:15 PM IST

அரியலூர்: தமிழ்நாட்டில் அமைய உள்ள ஆதித்யா ஏவுதள மையம் ஸ்ரீஹரிகோட்டாவை விட அதிநவீன தொழில்நுட்பத்தில் உருவாக இருப்பதாக, விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.

scientist_annadurai
scientist_annadurai

அரியலூர் அண்ணா பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை பங்கேற்று, மாணவர்களிடையே உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து அனுப்பிய 60க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்கள், வெற்றிகரமாக விண்ணில் செயல்பட்டு வருகின்றன. இவை தொலைதொடர்புக்கும் தொலை உணர்வுக்கும் உதவும் வகையில் செயல்பட்டு வருவதாகவும், மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவது தொடர்பான முயற்சியில் இஸ்ரோ ஈடுபட்டுவருவதாகவும் தெரிவித்தார்.

Scientist Annadurai

தொடர்ந்து பேசிய மயில்சாமி அண்ணாதுரை, ஆதித்யா ஏவுதள மையம் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றும் தமிழ்நாட்டில் அமைய உள்ள இத்தலம், ஸ்ரீஹரிகோட்டாவை விட அதிநவீன தொழில்நுட்பத்தில் அமைக்க ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டார்.

இதையும் படிங்க: ஆஸ்கர் விருதுகள் 2020 - வெற்றியாளர்கள் பட்டியல்

அரியலூர் அண்ணா பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை பங்கேற்று, மாணவர்களிடையே உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து அனுப்பிய 60க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்கள், வெற்றிகரமாக விண்ணில் செயல்பட்டு வருகின்றன. இவை தொலைதொடர்புக்கும் தொலை உணர்வுக்கும் உதவும் வகையில் செயல்பட்டு வருவதாகவும், மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவது தொடர்பான முயற்சியில் இஸ்ரோ ஈடுபட்டுவருவதாகவும் தெரிவித்தார்.

Scientist Annadurai

தொடர்ந்து பேசிய மயில்சாமி அண்ணாதுரை, ஆதித்யா ஏவுதள மையம் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றும் தமிழ்நாட்டில் அமைய உள்ள இத்தலம், ஸ்ரீஹரிகோட்டாவை விட அதிநவீன தொழில்நுட்பத்தில் அமைக்க ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டார்.

இதையும் படிங்க: ஆஸ்கர் விருதுகள் 2020 - வெற்றியாளர்கள் பட்டியல்

Intro:அரியலூர் தமிழ்நாட்டில் குறைந்த செலவில் ஏவுதளம் அமைய உள்ளது ஸ்ரீஹரிகோட்டா விட தொழில்நுட்பத்தில் சிறப்பாக அமைய வாய்ப்புள்ளது விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேட்டி


Body:அரியலூர் அண்ணா பொறியியல் கல்லூரியில் இந்திய விண்வெளி ஆய்வு கழகத்தின் செயற்கைக்கோள் மையத்தின் முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை மாணவரிடையே கலந்துரையாடலில் ஈடுபட்டார் பின்ன செய்தி அல்ல சந்தித்தபோது தற்போது நாம் அனுப்பிய 60க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் செயல்பட்டு வருகிறது இது தொலை தொடர்புக்கும் தொலை உணர்வுக்கும் பல துறைகளுக்கு உதவும் வகையில் செயல்பட்டு வருகிறது செயல்கள் அனைத்திற்கும் ஆயுட்காலம் உள்ளது மேலும் புது ஆய்வுகள் இந்திய மண்ணிலிருந்து மனிதனை விண்வெளிக்கு அனுப்புவது அதற்கான முயற்சியில் இஸ்ரோ ஈடுபட்டுள்ளது ஆதித்யா திட்டம் சிறப்பாக செயல்பட வேண்டும் தமிழ்நாட்டில் இத்தலம் அமைய உள்ளது இது ஸ்ரீஹரிகோட்டா விட தொழில்நுட்பத்தில் முயற்சியாக அமைய வாய்ப்புள்ளது ஆய்வுப் பணிகள் முடிந்த பிறகு சில, வரு வரு டங்களில் அமையும் என்றார்


Conclusion:மாணவர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்தார் இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ரத்னா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் ஆகியோர் உடன் இருந்தனர்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.