ETV Bharat / sports

பாரா ஒலிம்பிக் வில்வித்தை: ராகேஷ்குமார் காலிறுதிக்குத் தகுதி

author img

By

Published : Aug 31, 2021, 8:53 AM IST

Updated : Aug 31, 2021, 10:54 AM IST

டோக்கியோ பாரா ஒலிம்பிக் வில்வித்தைப் போட்டியில் இந்திய வீரர் ராகேஷ்குமார் காலிறுதிக்குத் தகுதிபெற்றுள்ளார்.

ராகேஷ்குமார்
ராகேஷ்குமார்

டோக்கியோவில் நடந்துவரும் பாரா ஒலிம்பிக்கில் 54 இந்திய வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இதுவரை 2 தங்கம், 4 வெள்ளி, 1 வெண்கலம் என இந்தியா ஏழு பதக்கங்களை வென்றுள்ளது. அந்தவகையில், காம்பவுண்ட் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஸ்லோவாகியா வீரர் மரியன் மரெகாக்கை (Marian Marecak) எதிர்கொண்டார்.

ஆரம்பத்தில் ஜொலிக்க தவறிய ராகேஷ் 53 புள்ளிகளுடன் பின்தங்கியிருந்தார். பின்னர், சிறப்பாகச் செயல்பட்ட அவர் 140-க்கு 137 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றியைத் தனதாக்கினார்.

இதன் மூலம், வில்வித்தைப் போட்டியில் இந்திய வீரர் ராகேஷ்குமார் காலிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளார். முன்னதாக, இரண்டாவது சுற்றுப் போட்டியில் ஹாங்காங் வீரர் சென் நகாய்-வை ராகேஷ்குமார் தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: PARALYMPIC SHOOTING: இறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்றார் ரூபினா ஃபிரான்சிஸ்

டோக்கியோவில் நடந்துவரும் பாரா ஒலிம்பிக்கில் 54 இந்திய வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இதுவரை 2 தங்கம், 4 வெள்ளி, 1 வெண்கலம் என இந்தியா ஏழு பதக்கங்களை வென்றுள்ளது. அந்தவகையில், காம்பவுண்ட் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஸ்லோவாகியா வீரர் மரியன் மரெகாக்கை (Marian Marecak) எதிர்கொண்டார்.

ஆரம்பத்தில் ஜொலிக்க தவறிய ராகேஷ் 53 புள்ளிகளுடன் பின்தங்கியிருந்தார். பின்னர், சிறப்பாகச் செயல்பட்ட அவர் 140-க்கு 137 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றியைத் தனதாக்கினார்.

இதன் மூலம், வில்வித்தைப் போட்டியில் இந்திய வீரர் ராகேஷ்குமார் காலிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளார். முன்னதாக, இரண்டாவது சுற்றுப் போட்டியில் ஹாங்காங் வீரர் சென் நகாய்-வை ராகேஷ்குமார் தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: PARALYMPIC SHOOTING: இறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்றார் ரூபினா ஃபிரான்சிஸ்

Last Updated : Aug 31, 2021, 10:54 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.