சமீபத்தில் வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் பகுதியை மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளதைக் கொண்டாடும் விதத்தில், 15 கிலோ மீட்டர் தூரம் வரை மாநில அளவிலான மாரத்தான் போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியை அமைச்சர் கே.சி. வீரமணி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்தப் போட்டியில் தமிழ்நாடு மட்டுமல்லாது கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலத்தில் இருந்தும் 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் இந்த மாரத்தான் போட்டியில் ஜோலார்பேட்டை பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் அசோக்குமார் 41.16.32 விநாடி நேரத்தில் கடந்து முதல் பரிசை தட்டிச்சென்றார். இதில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு ரொக்கப் பணமும், கோப்பைகளும் வழங்கப்பட்டன.
இதையும் படிங்க: திருச்சியில் தேசிய அளவிலான செஸ் போட்டி இன்று தொடக்கம்!