ETV Bharat / sports

மாநில அளவிலான மாரத்தான் போட்டி - மாணவர்கள் அசத்தல்! - அசோக்குமார்  41.16.32 வினாடி நேரத்தில் கடந்து முதல் பரிசை தட்டிச்சென்றார்

வேலூர்: திருப்பத்தூர் புதிய மாவட்டமாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அப்பகுதியில் மாநில அளவிலான மாரத்தான் போட்டி நடைபெற்றது.

State Level Marathon Competition
author img

By

Published : Nov 10, 2019, 8:59 PM IST

சமீபத்தில் வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் பகுதியை மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளதைக் கொண்டாடும் விதத்தில், 15 கிலோ மீட்டர் தூரம் வரை மாநில அளவிலான மாரத்தான் போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியை அமைச்சர் கே.சி. வீரமணி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்தப் போட்டியில் தமிழ்நாடு மட்டுமல்லாது கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலத்தில் இருந்தும் 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் இந்த மாரத்தான் போட்டியில் ஜோலார்பேட்டை பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் அசோக்குமார் 41.16.32 விநாடி நேரத்தில் கடந்து முதல் பரிசை தட்டிச்சென்றார். இதில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு ரொக்கப் பணமும், கோப்பைகளும் வழங்கப்பட்டன.

மாநில அளவிலான மாரத்தான் போட்டி

இதையும் படிங்க: திருச்சியில் தேசிய அளவிலான செஸ் போட்டி இன்று தொடக்கம்!

சமீபத்தில் வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் பகுதியை மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளதைக் கொண்டாடும் விதத்தில், 15 கிலோ மீட்டர் தூரம் வரை மாநில அளவிலான மாரத்தான் போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியை அமைச்சர் கே.சி. வீரமணி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்தப் போட்டியில் தமிழ்நாடு மட்டுமல்லாது கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலத்தில் இருந்தும் 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் இந்த மாரத்தான் போட்டியில் ஜோலார்பேட்டை பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் அசோக்குமார் 41.16.32 விநாடி நேரத்தில் கடந்து முதல் பரிசை தட்டிச்சென்றார். இதில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு ரொக்கப் பணமும், கோப்பைகளும் வழங்கப்பட்டன.

மாநில அளவிலான மாரத்தான் போட்டி

இதையும் படிங்க: திருச்சியில் தேசிய அளவிலான செஸ் போட்டி இன்று தொடக்கம்!

Intro:திருப்பத்தூர் புதிய மாவட்டமாக உதயமானதை முன்னிட்டு மாரத்தான் போட்டி நடைபெற்றது.அமைச்சர் K.C.வீரமணி கொடியசைத்து துவக்கிவைத்தார்Body:



வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுக்கா & ஒன்றியத்திற்கு உட்பட்ட சோமனாயக்கன் பட்டி பகுதியிலிருந்து நாட்றம்பள்ளி மைதானம் வரை 15 கிலோமீட்டர் தூரம் வரை மாரத்தான் போட்டி நடைபெற்றது இந்த போட்டியை அமைச்சர் கேசி .வீரமணி துவக்கி வைத்தார் இந்த போட்டியில் தமிழ் நாட்டில் பல பகுதியிலிருந்தும் கர்நாடகா. ஆந்திரா.கேரளா.ஆகிய மாநிலத்தில் இருந்தும் 1000க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர் இந்த மாரத்தான் போட்டியில் 15 கிலோமீட்டர் தூரத்தை குறைந்த நேரத்தை கணக்கில் கொண்டு பரிசுகள் வழங்கப்பட்டது


இந்த போட்டியில் முதல் பரிசு பெற்றவர் ஜோலார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார் கல்லூரி மாணவன் 41.16.32 வினாடி நேரத்தில் கடந்து 20.ஆயிரம் ரூபாய் பெற்று முதல் பரிசு பெற்றுள்ளார்

இரண்டாவது பரிசு ஜவ்வாது மலை புதூர் நாடு பகுதியை சேர்ந்த தமிழ்நாடு காவல்துறையில் பணிபுரியும் ஹரிகிருஷ்ணன் இவர் 41.36. வினாடி கடந்து வெற்றி பெற்று 15.ஆயிரம் ரூபாய் பெற்றார்

மூன்றாவது பரிசு கர்நாடக மாநிலத்தை சேர்ந்த நஞ்சுண்டா 41.36.02 தூரத்தை கடந்து வெற்றி பெற்று 10.ஆயிரம் ரூபாய் பெற்றார் மற்றும் விளையாட்டில் கலந்து கொண்ட அனைவருக்கும் கோப்பைகள் வழங்கப்பட்டது...Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.