#Johorcup: 21 வயதுக்குட்பட்டோருக்கான ஹாக்கி அணிகளுக்கு இடையில் நடைபெறும் சுல்தான் ஆஃப் ஜோஹர் கோப்பை ஹாக்கித் தொடர் மலேசியாவின் ஜோஹர் பஹ்ரு நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்திய அண்டர்21 அணி ஜப்பான் அண்டர்21 அணியை எதிர்கொண்டது.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தின் தொடக்கம் முதலே தனது ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜப்பான் அணி, ஆட்டத்தின் 22ஆவது நிமிடத்தில் கோலடித்து அசத்தியது. அதன் பின் ஆட்டத்தின் 38ஆவது நிமிடத்தில் தனது இரண்டாவது கோலையும் அடித்தது.
இதன் மூலம் ஜப்பான் அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. அதன்பின் நடைபெற்ற ஆட்டத்திலும் மந்தீப் மோர் கோலடித்து இந்திய அணியின் கோல் கணக்கைத் தொடங்கினார்.
-
Hockey: The Indian junior team lost a high octane game to Japan 3-4 at the Sultan of Johor Cup#SOJC #SultanOfJohorCup #JPNvIND pic.twitter.com/9Tj0YRvwZE
— Doordarshan Sports (@ddsportschannel) October 15, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Hockey: The Indian junior team lost a high octane game to Japan 3-4 at the Sultan of Johor Cup#SOJC #SultanOfJohorCup #JPNvIND pic.twitter.com/9Tj0YRvwZE
— Doordarshan Sports (@ddsportschannel) October 15, 2019Hockey: The Indian junior team lost a high octane game to Japan 3-4 at the Sultan of Johor Cup#SOJC #SultanOfJohorCup #JPNvIND pic.twitter.com/9Tj0YRvwZE
— Doordarshan Sports (@ddsportschannel) October 15, 2019
ஆனால், அதன் பின்னும் ஜப்பான் அணி மேலும் ஒரு கோலடித்து இந்திய அணியின் வெற்றிக் கனவிற்கு முற்றுப் புள்ளி வைத்தது. இறுதி வரை போராடிய இந்திய அணி 3-4 என்ற கோல் கணக்கில் ஜப்பான் அணியிடம் போராடி தோல்வியடைந்தது.
சுல்தான் ஆஃப் ஜோஹர் கோப்பை ஹாக்கித் தொடரில் இந்திய அண்டர்21 அணி அடைந்த முதல் தோல்வி, இது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:#Johorcup: 'எங்க ஆட்டம் வெறித்தனம் தான்' - நியூசிலாந்தை திணறடித்த இந்தியா!