கால்பந்து விளையாட்டில் போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைசிறந்த வீரராக விளங்குகிறார். 34 வயதான இவர், தற்போது இத்தாலியின் யுவென்டஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இவர், சமீபத்தில் சர்வதேச போட்டிகளிலும், கிளப் போட்டிகளிலும் சேர்த்து 700 கோல்களை அடித்த ஆறாவது வீரர் என்ற சாதனைப் படைத்தார்.
அண்மையில் நடைபெற்ற சீரி ஏ கால்பந்து கிளப் போட்டியில் யுவென்டஸ் அணியை போலோக்னா அணி எதிர் கொண்டது. இப்போட்டி தொடங்குவதற்கு முன்னதாக யுவென்டஸ் அணி சார்பில், 700 கோல்கள் அடித்து சாதனைப் படைத்த ரொனால்டோவிற்கு, 700 எண் எனப் பொறித்த ஸ்பெஷல் ஜெர்சி வழங்கி கெளரவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, நடைபெற்ற போட்டியின் 19ஆவது நிமிடத்தில் ரொனால்டோ கோலடித்து அசத்தினார். கால்பந்து அரங்கில் அவர் அடிக்கும் 701ஆவது கோல் இதுவாகும். அதன்பின், அட்டாக்கிங் முறையில் விளையாடிய போலோக்னா வீரர் டனிலோ மிரட்டலான கோல் அடித்தார்.
-
Before kick-off for #JuveBologna, President Andrea Agnelli presents @Cristiano with his own commemorative #CR700 shirt! 👏👏👏 pic.twitter.com/sFGfHyuDhy
— JuventusFC (@juventusfcen) October 19, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Before kick-off for #JuveBologna, President Andrea Agnelli presents @Cristiano with his own commemorative #CR700 shirt! 👏👏👏 pic.twitter.com/sFGfHyuDhy
— JuventusFC (@juventusfcen) October 19, 2019Before kick-off for #JuveBologna, President Andrea Agnelli presents @Cristiano with his own commemorative #CR700 shirt! 👏👏👏 pic.twitter.com/sFGfHyuDhy
— JuventusFC (@juventusfcen) October 19, 2019
இதையடுத்து, ஆட்டத்தின் 54ஆவது நிமிடத்தில் போலோக்னா டிஃபெண்டர்கள் செய்த தவறை சரியாக பயன்படுத்திக் கொண்ட யுவென்டஸ் வீரர் பைஜாமிக், கோலாக்கினார். இறுதியில், யுவென்டஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் போலோக்னா அணியை வீழ்த்தியது.