இங்கிலாந்து நாட்டில் நடைபெற்றுவரும் இங்கிலீஸ் பிரீமியர் லீக் கால்பந்து தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதனிடையே இந்தத் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் நவ்ரிச் சிட்டி எஃப்சி - டோட்டன்ஹோம் அணிகள் மோதின. மிகவும் பரபரப்பாக நடந்த இப்போட்டியில் இரு அணிகளும் 1-1 என சமநிலை வகித்ததால், வெற்றியாளரைத் தீர்மானிக்க பெனால்டி ஷுட் அவுட் முறை கடைப்பிடிக்கப்பட்டது.
அப்போது நவ்ரிச் அணியின் கீப்பர் டிம் க்ருலின், எதிரணிகள் அடித்த பந்துகளின் குறிப்புகளை தனது வாட்டர் பாட்டிலில் குறிப்புகளாக எடுத்து, அவர்கள் அடுத்ததாக அடிக்கும் ஷாட் குறித்து யூகித்துள்ளார்.
அவர் எதிர்பார்த்தது போலவே எதிரணியின் வீரரும் பந்தை கார்னருக்கு அடிக்க, டிம் அதனை லாவகமாக தடுத்து நிறுத்தினார். இதன்மூலம் நவ்ரிச் அணி 3-2 என்ற கணக்கில் பெனால்டி ஷூட் அவுட் முறையில் வெற்றியைப் பெற்றது. வாட்டர் பாட்டிலில் குறிப்பெடுத்து எதிரணியின் வெற்றியைத் தடுத்து நிறுத்திய கோல் கீப்பர் டிம் க்ருலினுக்கு பாராட்டுகள் குவிந்துவருகின்றன.
இதையும் படிங்க:ஆறாவது முறையாக மகளிர் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா!