ETV Bharat / sports

வயசெல்லாம் ஒரு பிரச்னையா பாஸ்.. ரோகித், கோலி குறித்து சுனில் கவாஸ்கர் கருத்து!

author img

By PTI

Published : Jan 6, 2024, 5:08 PM IST

Sunil Gavaskar:35-36 வயதை கடந்தாலும், ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரின் ஃபீல்டிங் திறன் சிறப்பாக உள்ளது என சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

டெல்லி: தென் ஆப்பிரிக்கா சுற்றுப் பயணத்தில் இந்திய அணி டெஸ்ட் மற்றும் டி20 போட்டியை சமன் செய்தது. ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. குறிப்பாக, 13 ஆண்டுகளுக்குப் பிறகு தென் ஆப்பிரிக்கா மண்ணில் டெஸ்ட் தொடரை இந்திய அணி சமன் செய்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, இந்திய அணி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் விளையாட உள்ளது. இந்த சூழலில்தான் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி, தாங்கள் டி20 போட்டிகளில் விளையாட பிசிசிஐயிடம் ஆர்வம் காட்டியுள்ளனர். இத்தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்ய அஜித் அகர்கார் தலைமையிலான தேர்வுக் குழு நேற்று (ஜன.05) காணொலி வாயிலாக கூடியது.

2022 டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியின் மோசமான தோல்விக்கு பின்னர் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா டி20 போட்டிகளில் விளையாடவில்லை. அதேபோல், வரும் ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் டி20 உலகக் கோப்பை நடைபெற உள்ளது.

இதற்கான அட்டவணையையும் நேற்று (ஜன.05) சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெளியிட்டிருந்தது. இந்த நிலையில், ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி டி20 போட்டிகளில் விளையாட ஆர்வம் தெரிவித்தது கவனம் பெற்றது. இந்நிலையில், 35-36 வயதை கடந்தாலும், ஃபீல்டிங்கில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் சிறப்பாக செயல்படக்கூடிய தன்மையை கொண்டவர்கள் என சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது, "கடந்த ஒன்றரை ஆண்டுகளாக விராட் கோலி சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவர் 2023 உலகக் கோப்பை தொடரில் அபாரமாக ஆடினார். 3 சதங்கள் உள்பட 750 ரன்கள் குவித்தார். எனவே, வெள்ளை பந்து கிரிக்கெட்டில் அவருடைய பேட்டிங் குறித்து எவ்வித சந்தேகமும் இல்லை.

அதேநேரம், ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஃபீல்டிங் சிறப்பாக உள்ளது. சில நேரங்களில் 35, 36 போன்ற வயதை எட்டும்போது, சரியாக ஃபீல்டிங் செய்ய முடியாது. அதனால் ஃபீல்டிங் செட் செய்யும் பொழுது, அவர்களை எங்கு நிற்க வைப்பது என்ற குழப்பம் ஏற்படும்.

ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியைப் பொறுத்தவரை, அது ஒரு பிரச்னையாக இருக்காது. அவர்களது ஃபீல்டிங் சிறப்பாக உள்ளது. ரோகித் கேப்டனாக இருப்பாரா என்பது பற்றி தெரியவில்லை. ஆனால், யார் இந்திய அணியை வழிநடத்தினாலும், அவருடைய அனுபவம் பயனுள்ளதாக இருக்கும்" என கூறினார்.

இதையும் படிங்க: 2024 - டி20 உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணை வெளியீடு.. ஜூன் 9ஆம் தேதி இந்தியா - பாகிஸ்தான் மோதல்!

டெல்லி: தென் ஆப்பிரிக்கா சுற்றுப் பயணத்தில் இந்திய அணி டெஸ்ட் மற்றும் டி20 போட்டியை சமன் செய்தது. ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. குறிப்பாக, 13 ஆண்டுகளுக்குப் பிறகு தென் ஆப்பிரிக்கா மண்ணில் டெஸ்ட் தொடரை இந்திய அணி சமன் செய்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, இந்திய அணி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் விளையாட உள்ளது. இந்த சூழலில்தான் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி, தாங்கள் டி20 போட்டிகளில் விளையாட பிசிசிஐயிடம் ஆர்வம் காட்டியுள்ளனர். இத்தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்ய அஜித் அகர்கார் தலைமையிலான தேர்வுக் குழு நேற்று (ஜன.05) காணொலி வாயிலாக கூடியது.

2022 டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியின் மோசமான தோல்விக்கு பின்னர் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா டி20 போட்டிகளில் விளையாடவில்லை. அதேபோல், வரும் ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் டி20 உலகக் கோப்பை நடைபெற உள்ளது.

இதற்கான அட்டவணையையும் நேற்று (ஜன.05) சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெளியிட்டிருந்தது. இந்த நிலையில், ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி டி20 போட்டிகளில் விளையாட ஆர்வம் தெரிவித்தது கவனம் பெற்றது. இந்நிலையில், 35-36 வயதை கடந்தாலும், ஃபீல்டிங்கில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் சிறப்பாக செயல்படக்கூடிய தன்மையை கொண்டவர்கள் என சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது, "கடந்த ஒன்றரை ஆண்டுகளாக விராட் கோலி சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவர் 2023 உலகக் கோப்பை தொடரில் அபாரமாக ஆடினார். 3 சதங்கள் உள்பட 750 ரன்கள் குவித்தார். எனவே, வெள்ளை பந்து கிரிக்கெட்டில் அவருடைய பேட்டிங் குறித்து எவ்வித சந்தேகமும் இல்லை.

அதேநேரம், ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஃபீல்டிங் சிறப்பாக உள்ளது. சில நேரங்களில் 35, 36 போன்ற வயதை எட்டும்போது, சரியாக ஃபீல்டிங் செய்ய முடியாது. அதனால் ஃபீல்டிங் செட் செய்யும் பொழுது, அவர்களை எங்கு நிற்க வைப்பது என்ற குழப்பம் ஏற்படும்.

ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியைப் பொறுத்தவரை, அது ஒரு பிரச்னையாக இருக்காது. அவர்களது ஃபீல்டிங் சிறப்பாக உள்ளது. ரோகித் கேப்டனாக இருப்பாரா என்பது பற்றி தெரியவில்லை. ஆனால், யார் இந்திய அணியை வழிநடத்தினாலும், அவருடைய அனுபவம் பயனுள்ளதாக இருக்கும்" என கூறினார்.

இதையும் படிங்க: 2024 - டி20 உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணை வெளியீடு.. ஜூன் 9ஆம் தேதி இந்தியா - பாகிஸ்தான் மோதல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.