அகமதாபாத் : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த 5ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இதன் 12வது லீக் ஆட்டமாக இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் மோதின. டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களான இமாம் உல் ஹக் - அப்துல்லா ஷபீக் களம் இறங்கினர். 7 ஓவர்கள் வரை நல்ல தொடக்கத்தை தந்த பாகிஸ்தான் ஜோடியை வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் உடைத்தார். முகமது சிராஜ் பந்துவீச்சில், அப்துல்லா ஷபீக் 20 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார்.
-
India continue their unbeaten run against Pakistan in the Men's @cricketworldcup with an emphatic win in Ahmedabad 👊#CWC23 | #INDvPAK pic.twitter.com/jfjRfvO5k6
— ICC (@ICC) October 14, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">India continue their unbeaten run against Pakistan in the Men's @cricketworldcup with an emphatic win in Ahmedabad 👊#CWC23 | #INDvPAK pic.twitter.com/jfjRfvO5k6
— ICC (@ICC) October 14, 2023India continue their unbeaten run against Pakistan in the Men's @cricketworldcup with an emphatic win in Ahmedabad 👊#CWC23 | #INDvPAK pic.twitter.com/jfjRfvO5k6
— ICC (@ICC) October 14, 2023
அதன் பின் இமாம் உல் ஹக்கும் ஆட்டமிழக்க, ரிஸ்வான் - பாபர் அசாம் கூட்டணி கைகோர்த்தது. இந்த கூட்டணி சிறுது நேரம் தாக்கு பிடித்து அணிக்கு ரன்களை சேர்த்தது. நிதானமான ஆட்டத்தை கையாண்ட பாபர் அசாம் 50 ரன்கள் எடுத்த நிலையில், சிராஜ் வீசிய பந்தில் போல்ட் ஆகி வெளியேறினார்.
அதனைத் தொடர்ந்து ஒருவர் பின் ஒருவராக ஆட்டமிழக்க, பாகிஸ்தான் அணி 42.5 ஓவர்கள் முடிவில் 191 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி சார்பில் ஹர்திக் பண்டியா, பும்ரா, சிராஜ், குல்தீப் யாதவ், ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினர்.