ETV Bharat / sports

படிகல் அதிரடியால் தப்பிய ஆர்சிபி! மும்பை அணிக்கு 165 ரன்கள் இலக்கு!

author img

By

Published : Oct 28, 2020, 9:12 PM IST

பெங்களூரு - மும்பை அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 164 ரன்களை குவித்தது.

IPL 2020: MI win toss, opt to field first against RCB as Rohit misses out
IPL 2020: MI win toss, opt to field first against RCB as Rohit misses out

ஐபிஎல் தொடரில் இன்று (அக்.28) நடைபெற்று வரும் 48ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதியது.

இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொல்லார்ட், பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஜோஷ் பிலீப் - தேவ்தத் படிகல் இணை அதிரடியான தொடக்கத்தை தந்தனர்.

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜோஷ் பிலீப் 33 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த கேப்டன் விராட் கோலி சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.

பின்னர் தேவ்தத்துடன் ஜோடி சேர்ந்த ஏபிடி வில்லியர்ஸ், அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

மறுமுனையில் சிறப்பாக விளையாடி வந்த தேவ்தத் படிகல், ஐபிஎல் தொடரில் தனது மூன்றாவது அரைசதத்தையும் பதிவு செய்து அசத்தினார். இதற்கிடையில் ஏபிடி வில்லியர்ஸ் 15 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த தேவ்தத் படிகல் 74 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பும்ராவிடம் விக்கெட்டை இழந்தார். பின்னர் வந்த வீரர்களும் எதிரணி பந்துவீச்சை சமாளிக்க இயலாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வெளியேறினர்.

இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஆறு விக்கெட்டுகளை மட்டும் இழந்து 164 ரன்களை குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக படிகல் 74 ரன்களையும், பிலீப் 33 ரன்களையும் எடுத்தனர்.

இதையும் படிங்க:ஆஸி., எதிரான ஒருநாள், டி20 தொடரில் அஸ்வினை சேர்க்காதது ஏன்?

ஐபிஎல் தொடரில் இன்று (அக்.28) நடைபெற்று வரும் 48ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதியது.

இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொல்லார்ட், பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஜோஷ் பிலீப் - தேவ்தத் படிகல் இணை அதிரடியான தொடக்கத்தை தந்தனர்.

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜோஷ் பிலீப் 33 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த கேப்டன் விராட் கோலி சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.

பின்னர் தேவ்தத்துடன் ஜோடி சேர்ந்த ஏபிடி வில்லியர்ஸ், அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

மறுமுனையில் சிறப்பாக விளையாடி வந்த தேவ்தத் படிகல், ஐபிஎல் தொடரில் தனது மூன்றாவது அரைசதத்தையும் பதிவு செய்து அசத்தினார். இதற்கிடையில் ஏபிடி வில்லியர்ஸ் 15 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த தேவ்தத் படிகல் 74 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பும்ராவிடம் விக்கெட்டை இழந்தார். பின்னர் வந்த வீரர்களும் எதிரணி பந்துவீச்சை சமாளிக்க இயலாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வெளியேறினர்.

இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஆறு விக்கெட்டுகளை மட்டும் இழந்து 164 ரன்களை குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக படிகல் 74 ரன்களையும், பிலீப் 33 ரன்களையும் எடுத்தனர்.

இதையும் படிங்க:ஆஸி., எதிரான ஒருநாள், டி20 தொடரில் அஸ்வினை சேர்க்காதது ஏன்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.