ETV Bharat / sports

Ind vs SA : தொடர் யாருக்கு? 3வது டி20 கிரிக்கெட்டில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா மோதல்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 14, 2023, 6:01 AM IST

India Vs South Africa 3rd T20 : இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பெர்க் மைதானத்தில் இன்று (டிச. 14) நடைபெறுகிறது.

Etv Bharat
Etv Bharat

ஜோகன்னஸ்பெர்க் : தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள இந்திய அணி, தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி கடந்த டிசம்பர் 10ஆம் தேதி டர்பனில் நடைபெற இருந்தது.

தொடர் கனமழை காரணமாக டாஸ் கூட போடப்படாமல் அந்த ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி கடந்த டிசம்பர் 12ஆம் தேதி கெபெர்ஹாவில் நடைபெற்று. முதலில் விளையாடிய இந்திய அணி 19 புள்ளி ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்தது.

தொடர் மழை காரணமாக டக் வொர்த் லிவீஸ் விதிப்படி வெற்றி இலக்கு குறைக்கப்பட்டது. தொடர்ந்து விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 13 புள்ளி 5 ஓவர்களில் 154 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் தொடரில் 1-க்கு 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பெர்க் மைதானத்தில் இன்று (டிச. 14) நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டும் தொடரை 1-க்கு 1 என்ற கணக்கில் சமன் செய்ய முடியும் என்பதால் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது.

கடைசி ஆட்டத்தில் மழையின் தாக்கம் அதிகம் இருந்ததால் மைதானத்தில் தண்ணீர் தேங்கி, தென் ஆப்பிரிக்க அணிக்கு சாதகமாக அமைந்தது. இன்றைய ஆட்டத்திலும் மழையின் தாக்கம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் டாஸ் வெல்வது என்பது கட்டாயமாக பார்க்கப்படுகிறது.

மற்றபடி இந்திய வீரர்கள் பேட்டிங், பந்துவீச்சு என அனைத்திலும் பலமாக காணப்படுகின்றனர். உடல் நல பிரச்சினைகள் காரணமாக கடந்த ஆட்டத்தில் விளையாடாமல் போன ருதுராஜ் கெய்க்வாட் இன்றைய ஆட்டத்தில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சிறுசிறு மாற்றங்கள் இன்றைய ஆட்டத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், உள்ளூர் சுழல் தென் ஆப்பிரிக்க அணிக்கு பக்க பலமாக உள்ளது.

தென் ஆப்பிரிக்காவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்த இந்திய வீரர்கள் கடுமையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டி உள்ளது. தொடரை கைப்பற்ற தென் ஆப்பிரிக்க அணியும், சமன் செய்ய இந்திய அணியும் முயற்சிக்கும் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. அதேநேரம் இந்த ஆட்டத்தில் மழையின் தாக்கல் இருக்கும் எனக் கூறப்படுவதால் வருண பகவான் வழிவிட வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

போட்டிக்கான இரு அணி வீரர்களின் உத்தேச பட்டியல் :

இந்தியா : சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ரின்கு சிங், ரவீந்திர ஜடேஜா, அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், குல்தீப் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர், தீபக் சாஹர், ரவி பிஷ்னோய், இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட்

தென் ஆப்பிரிக்கா : எய்டன் மார்க்ரம் (கேப்டன்), ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), ரீசா ஹென்ட்ரிக்ஸ், மேத்யூ ப்ரீட்ஸ்கே, டேவிட் மில்லர், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அண்டில் பெஹ்லுக்வாயோ, லிசாட் வில்லியம்ஸ், தப்ரைஸ் ஷம்சி, கேசவ் மஹாராஜ், நந்த்ரே பர்கர்.

இதையும் படிங்க : விஜய் ஹசாரே டிராபி : தமிழகத்தை வீழ்த்தி அரியானா முதல் முறையாக இறுதி போட்டிக்கு தகுதி!

ஜோகன்னஸ்பெர்க் : தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள இந்திய அணி, தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி கடந்த டிசம்பர் 10ஆம் தேதி டர்பனில் நடைபெற இருந்தது.

தொடர் கனமழை காரணமாக டாஸ் கூட போடப்படாமல் அந்த ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி கடந்த டிசம்பர் 12ஆம் தேதி கெபெர்ஹாவில் நடைபெற்று. முதலில் விளையாடிய இந்திய அணி 19 புள்ளி ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்தது.

தொடர் மழை காரணமாக டக் வொர்த் லிவீஸ் விதிப்படி வெற்றி இலக்கு குறைக்கப்பட்டது. தொடர்ந்து விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 13 புள்ளி 5 ஓவர்களில் 154 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் தொடரில் 1-க்கு 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பெர்க் மைதானத்தில் இன்று (டிச. 14) நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டும் தொடரை 1-க்கு 1 என்ற கணக்கில் சமன் செய்ய முடியும் என்பதால் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது.

கடைசி ஆட்டத்தில் மழையின் தாக்கம் அதிகம் இருந்ததால் மைதானத்தில் தண்ணீர் தேங்கி, தென் ஆப்பிரிக்க அணிக்கு சாதகமாக அமைந்தது. இன்றைய ஆட்டத்திலும் மழையின் தாக்கம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் டாஸ் வெல்வது என்பது கட்டாயமாக பார்க்கப்படுகிறது.

மற்றபடி இந்திய வீரர்கள் பேட்டிங், பந்துவீச்சு என அனைத்திலும் பலமாக காணப்படுகின்றனர். உடல் நல பிரச்சினைகள் காரணமாக கடந்த ஆட்டத்தில் விளையாடாமல் போன ருதுராஜ் கெய்க்வாட் இன்றைய ஆட்டத்தில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சிறுசிறு மாற்றங்கள் இன்றைய ஆட்டத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், உள்ளூர் சுழல் தென் ஆப்பிரிக்க அணிக்கு பக்க பலமாக உள்ளது.

தென் ஆப்பிரிக்காவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்த இந்திய வீரர்கள் கடுமையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டி உள்ளது. தொடரை கைப்பற்ற தென் ஆப்பிரிக்க அணியும், சமன் செய்ய இந்திய அணியும் முயற்சிக்கும் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. அதேநேரம் இந்த ஆட்டத்தில் மழையின் தாக்கல் இருக்கும் எனக் கூறப்படுவதால் வருண பகவான் வழிவிட வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

போட்டிக்கான இரு அணி வீரர்களின் உத்தேச பட்டியல் :

இந்தியா : சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ரின்கு சிங், ரவீந்திர ஜடேஜா, அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், குல்தீப் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர், தீபக் சாஹர், ரவி பிஷ்னோய், இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட்

தென் ஆப்பிரிக்கா : எய்டன் மார்க்ரம் (கேப்டன்), ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), ரீசா ஹென்ட்ரிக்ஸ், மேத்யூ ப்ரீட்ஸ்கே, டேவிட் மில்லர், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அண்டில் பெஹ்லுக்வாயோ, லிசாட் வில்லியம்ஸ், தப்ரைஸ் ஷம்சி, கேசவ் மஹாராஜ், நந்த்ரே பர்கர்.

இதையும் படிங்க : விஜய் ஹசாரே டிராபி : தமிழகத்தை வீழ்த்தி அரியானா முதல் முறையாக இறுதி போட்டிக்கு தகுதி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.