ETV Bharat / sports

1983... ஒரு மனிதன்... ஒரு கனவு... ஒரு கோப்பை... உலக கிரிக்கெட்டின் சரித்திரம் மாறிய கதை

author img

By

Published : Jun 25, 2019, 7:29 PM IST

Updated : Jun 25, 2019, 8:01 PM IST

இந்தியாவின் அதிகபட்ச வெற்றி என்பது உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக வெஸ்ட் இண்டீஸை ஒரு போட்டியில் மட்டுமே வென்றிருந்தது. எனவே அப்போதைய நிலையில் விமானம் ஏறிய இந்திய அணியில், ஒரு வீரர் மட்டுமே உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்ற கனவோடு சென்றார்.

கபில் தேவ்

முன்கதை:

1983 உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப் போட்டியின் ஹைலட்ஸ்களை வீட்டில் பார்த்துக் கொண்டிருந்தபோது, எதார்த்தமாக வீட்டிற்கு வந்த அப்பா கபில் தேவ் பந்துவீசுவதைப் பார்த்து இது இறுதிப்போட்டிதானே என உடன் உட்கார்ந்து முழு ஹைலைட்ஸையும் பார்த்துச் சென்றார். ஆம், இது கபில் தேவ் பெயரை கேட்கும்போதும், பார்க்கும்போதும் அந்த தலைமுறையினருக்கு கண் இமைக்கும் நேரத்தில் ஒவ்வொருவருக்குள்ளும் இருந்த இளைஞன் அவர்களுக்குள் வந்து செல்கிறான்.

WORLD CUP
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில்...

உலகக்கோப்பையை இந்தியாவுக்காக வென்றது ஆடிய 11 வீரர்களும்தானே... ஏன் அனைவரும் கபில் தேவ் புராணம் பாடுகிறீர்கள் என கேட்பவர்களுக்காகதான் இதனை எழுதுகிறோம். இதுவும் நிச்சயம் கபில் தேவ் புராணமாகதான் இருக்கபோகிறது.

1983 உலகக்கோப்பை தொடருக்கு ஒரு ஆண்டுக்கு முன்னதாகதான் கபில் தேவ் என்னும் இளைஞன் கேப்டனாக்கப்பட்டார். முற்றிலும் ”அவாள்” மட்டுமே நிறைந்திருந்த அணியில் கபில் தேவ் எனும் கிராமத்து இளைஞன் அணியில் இடம்பிடித்ததோடு மட்டுமல்லாமல், உலகக்கோப்பைத் தொடரில் அணியை வழிநடத்தவும் செய்தார்.

WORLD CUP
கபிலுடன் சக இந்திய அணியினர்

உலகக்கோப்பை தொடருக்கு தயாரான இந்திய வீரர்களில் பெரும்பாலானோர் தொடர் முழுமையாக நிறைவுபெறும் முன் சுற்றுலா செல்ல அமெரிக்காவுக்கு டிக்கெட் பதிவு செய்துகொண்டனர். ஏனென்றால் 1975, 1979ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடர்களில் இந்திய அணியின் செயல்பாடுகள் அப்படி. அதனால் இங்கிலாந்துக்கு சென்று கிரிக்கெட் விளையாடுவதை இன்னொரு தேனிலவாக எண்ணிய இந்திய வீரர்களின் எண்ணங்களை ஒருவர் சுக்குநூறாக உடைத்துப்போட்டார்.

அப்போது ஒருநாள் போட்டிகளை அதிகம் விளையாடியது வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள்தான். அதனால் இந்தியாவின் அதிகபட்ச வெற்றி என்பது உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக வெஸ்ட் இண்டீஸை ஒரு போட்டியில் வென்றது மட்டுமே. அப்போதைய நிலைமையில் விமானம் ஏறிய இந்திய அணி வீரர்களில் ஒருவர் மட்டுமே உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்ற கனவோடு சென்றார்.

WORLD CUP
லார்ட்ஸ் மைதானத்தில் கபில்

உலகக்கோப்பை 1983:

முதல் போட்டியே ஜாம்பவான் அணியான வெஸ்ட் இண்டீஸை எதிர்த்து ஆட வேண்டும். நடுவரிசை வீரரான யஷ்பால் ஷர்மாவின் சிறப்பான ஆட்டத்தால் வெஸ்ட் இண்டீஸ் அணியை இந்தியா வெல்கிறது. அதைத் தொடர்ந்து சிறப்பாக ஆடினாலும், இந்திய அணியினருக்கு நம்பிக்கை இல்லை. குரூப் சுற்றின் கடைசி போட்டியான ஜிம்பாப்வே அணியிடன் கபில் ஆடிய ஆட்டம் அனைவரையும் ஆட்டம் காணச் செய்தது. அவர் அடித்த ஒவ்வொரு ரன்னிலும் இந்திய அணியின் மன உறுதி அதிகமானது. அங்கிருந்துதான் உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்கிற எண்ணம் இந்திய அணியின் மற்ற வீரர்களுக்கு ஏற்பட்டது. அரையிறுதியில் சொந்த நாட்டு ரசிகர்களுக்கு முன் ஆடிய இங்கிலாந்து அணியை வீழ்த்தி இறுதிக்குள் நுழைய அங்கு மீண்டும் வெஸ்ட் இண்டீஸை சந்திக்க வேண்டிய நிலை. அடிபட்ட சிங்கமாக வெஸ்ட் இண்டீஸ் காத்துக் கொண்டிருக்க இந்தியா சிக்கியது என அனைவரும் நினைத்தனர். ஏன் இந்திய வீரர்களே அப்படித்தான் நினைத்திருப்பார்கள்.

இறுதிப் போட்டி:

’கிரிக்கெட்டின் மெக்கா’ எனப்படும் லார்ட்ஸ் மைதானத்தில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியோ ஆட்டத்தை வேகமாக முடித்துவிடலாம் என எண்ணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. ராபர்ட்ஸ், கார்னர், மார்ஷல், ஹோல்டிங் என மிகவும் அச்சுறுத்தலான பந்துவீச்சுக் கூட்டணியை எதிர்கொள்ள இந்திய அணியின் பேட்டிங் வரிசை தொடை நடுங்கியபடியே களமிறங்கியது.

சுனில் கவாஸ்கர் வந்த வேகத்தில் ராபர்ஸ் வீசிய இன் ஸ்விங்கருக்கு பலியாகி வெளியேற, இந்திய ரசிகர்களின் விழிகள் இருண்டது. அணியின் சிறந்த பேட்ஸ்மேன் இரண்டு ரன்களில் ஆட்டமிழந்த காட்சி, ரசிகர்களின் உலகக்கோப்பைக் கனவை யோசிக்க வைத்தது. பின்னர் தொடக்க வீரர் ஸ்ரீகாந்த் - அமர்நாத் இருவரும் இணைந்தனர். ஸ்ரீகாந்திற்கு ராபர்ஸின் பந்து தொல்லைக் கொடுக்க, அமர்நாத்திற்கு மார்ஷலின் பந்து பயம் கொடுத்தது.

இருவரும் இதுகுறித்து களத்தில் ஆலோசித்து, ஸ்ரீகாந்த் மார்ஷலின் பந்தையும், அமர்நாத் ராபர்ட்ஸ் பந்தையும் எதிர்கொள்ள முடிவு செய்தனர். ஆம், கண்ணை மூடிக்கொண்டு ”போனால் போகட்டும் போடா” என ஸ்ரீகாந்த் விளாசியதில் இந்திய அணியின் இரண்டாவது விக்கெட்டுக்கு 57 ரன்கள் சேந்தது.

கண்ணை மூடிக்கொண்டு ஆடிய ஆட்டத்தில் ஸ்ரீகாந்த 38 ரன்கள் எடுத்து வெளியேற, தொடர்ந்து ஹோல்டிங் வீசிய இன் ஸ்விங்கரில் ஸ்டம்புகள் பறக்க அமர்நாத் 26 ரன்களில் நடையைக் கட்டினார். பின்னர் வந்த சந்தீப் பாட்டீஸ் 27, யஷ்பால் ஷர்மா 11, கபில் தேவ் 15 என கோம்ஸ் பந்தில் ஆட்டமிழக்க, உலகக்கோப்பைக் கனவை லார்ட்ஸில் காவு கொடுத்துவிட்டோமோ என்று ரசிகர்கள் நினைக்க ஆரம்பித்துவிட்டனர்.

டெய்லண்டர்களின் போராட்டத்திற்கு பிறகு, இறுதியாக இந்திய அணி 54.4 ஓவர்களில் 183 ரன்களை எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. மூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றப்போகிறோம் என்ற ஆசையில் விண்டீஸ் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மைதானத்தில் இந்தியா வென்றுவிடும் என்ற எண்ணம் ஒருவருக்கும் இருந்திருக்காது. ஆனால் நடந்ததோ அதிசயமே அசந்து போகும் எட்டாவது அதிசயம்.

WORLD CUP
ஹெய்ன்ஸ் விக்கெட்டை வீழ்த்திய பல்விந்தர் சிங்குடன் இந்திய அணி

இடைவேளை முடிந்து இந்திய அணி வீரர்களிடம் கபில் தேவ் உரையாற்றினார். அந்த உரை சென்ட்டிமென்ட்டாகவோ, உணர்ச்சியின் வெளிப்பாடாகவோ இல்லை. அது போருக்கு செல்லும் முன் முகாலாய பேரரசர் பாபர் ஆற்றிய உரைக்கு சமமாக இருந்தது என ட்ரெஸ்ஸிங் ரூமில் அந்த உரையை கேட்டவர்கள் கூறினார்கள். ஆம், துவண்டு போன மனிதனுக்கு ஆறுதல் கூறும் வார்த்தைகள், வாழ்க்கையை மடைமாற்றுவதாக இருக்க வேண்டும் அணைக் கட்டாக இருக்கக் கூடாது. இந்திய வீரர்கள் துவண்டு போனதைக் கண்ட கபில், கேப்டனாக, ஒரு போர் வீரனாக அணியை முன்நின்று அழைத்து சென்றார். அதன் பின்னர் மைதானத்தில் நடந்தவையெல்லாம் அதிசயம் அல்ல. கபில் தேவ் என்னும் ஆதர்ச நாயகனின் வெறித்தனமான உழைப்பு.

WORLD CUP
விக்கெட் எடுத்த மகிழ்ச்சியில் இந்திய வீரர்

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பல்விந்தர் சிங் வீசிய இன்-ஸ்விங்கரை கணிக்காத கார்டன் போல்டாகி வெளியேறுவார். இந்திய ரசிகர்களின் முதுகு சிறிது நிமிர்ந்தது. வீரர்களின் முதுகும்தான்.

WORLD CUP
கபிலுடன் சக இந்திய அணியினர்

என்னமோ நடக்கிறது என எண்ணிய ரசிகர்களின் மனதில் இடியாய் சர் விவியன் ரிச்சர்ட்ஸ் களமிறங்கினார். ரிச்சர்ட்ஸ் ஒரு பக்கத்தில் அதிரடியில் பொளந்துகட்ட, மதன் லால் வீசிய பந்தில் ஹெய்ன்ஸ் கேட்ச் கொடுத்து வெளியேறினார். வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. பின்னர் கேப்டன் கிளைவ் லாய்டு வர, அதிரடியாக ஆடிய ரிச்சர்ட்ஸ் மதன் வீசிய பந்தை அடிக்க முயன்று டாப் எட்ஜ் ஆக, அதனை மிஸ் செய்துவிடக்கூடாது மிஸ் செய்துவிட்டால் உலகக் கோப்பை மிஸ் ஆகிவிடும் என்பதில் தீர்க்கமாக கபில் தேவ் அன்று ஓடிய ஓட்டத்தில் ஆரம்பித்தது இந்திய கிரிக்கெட் அணியின் இன்றைய ஓட்டம்.

WORLD CUP
விவியன் ரிச்சர்ட்ஸின் கேட்ச்சை பிடித்தபோது...

ரிச்சர்ட்ஸ் விக்கெட்டை எடுத்த பிறகு சிறிது நிமிர்ந்த ரசிகர்களின் முதுகுகள் அந்த நொடி லார்ட்ஸில் கம்பீரமாக நிமிர்ந்து அமர்ந்தது. அதுமட்டுமின்றி எழுந்து ஆரவாரம் செய்யவும் தூண்டியது. ஏனெனில் ரிச்சர்ட்ஸ் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என சொல்லி தெரிய வேண்டியதில்லை.

”ரிச்சர்ட்ஸை ஆட்டமிழக்கச் செய்த அந்த ஓவரை தன்னிடமிருந்து மதன் லால், நான் வீசுகிறேன் என வலுக்கட்டாயமாக பந்தை வாங்கி வீசினார்” என கபில் தேவ் பின்னாட்களில் அந்த த்ரில் மொமண்ட்டை நினைவுகூர்கிறார்.

ஆட்டம் பரபரப்பாக இருக்கிறது. எதிரணி பந்துவீச்சாளர்களை வேட்டையாடும் வேட்டைக்காரன் ஒருவர் களத்தில் நிற்கிறார். அந்த சமயத்தில் மித வேக பந்துவீச்சாளர் ஒருவர் வந்து வலுக்கட்டாயமாக கேப்டனிடம் இருந்து நான்தான் வீசுவேன் என பந்தை பிடுங்கினால் எந்த கேப்டனும் அவரை திட்டவோ, அலட்சியப்படுத்தவோ வாய்ப்புண்டு. ஆனால், கபில் மட்டும்தான் நம்பிக்கையாக பேசுபவனிடம் பந்தை கொடுக்கலாம் என எண்ணி அதனை செயல்படுத்தினார். அங்குதான் கபில் தேவ் கேப்டனாக நிமிர்ந்து நின்றார்.

கடைசி நிமிடம்:

வேட்டைக்காரனை மூட்டைக் கட்டி அனுப்பியாகிவிட்டது. அதன் பின்னர் வந்த கோம்ஸ் 5, லாய்டு 8 என விக்கெட்டுகள் நில நடுக்கத்தில் விழும் கட்டடங்கள் போல் சரிய, இந்திய ரசிகர்கள் கடவுளை வேண்ட, கபில் உழைப்பை வேண்டினார். பின்னர் வந்த விக்கெட் கீப்பர் ஜெஃப் டுஜன் - மார்ஷல் இணை சிறிது நேரம் தாக்கு பிடித்து ரன்களை சேர்க்க, அமர்நாத் வந்து அந்த ஜோடி செய்து கொண்டிருந்த வேலையை முடித்துவைத்தார். பின்னர் ராபர்ட்ஸை கபில் தேவ் வீழ்த்த, ஹோல்டிங் ஆறு ரன்களில் ஆட்டமிழந்து இந்தியா வென்றவுடன் ரசிகர்கள் முதல்முறையாக வெற்றி பெற்ற பூரிப்புடன் லார்ட்ஸ் அதிர மைதானத்திற்குள் ஓடினர். வீரர்களோ பெவிலியன் நோக்கி ஓடினர்.

ஆம், கடந்த இரண்டு உலகக்கோப்பையை வென்று கிரிக்கெட் உலகின் பேரரசனாக திகழ்ந்த வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி இந்திய அணி வீழ்த்தி முதன்முதலாக அரசனாக முடிசூடிக்கொள்ளும் நேரம் வந்துவிட்டது.

WORLD CUP
உலகக்கோப்பை வென்ற மகிழ்ச்சியில் இந்திய வீரர்கள்

சில நாட்களுக்கு முன்னதாக உலகக்கோப்பையை வெல்வோம் என தங்களாலேயே நம்ப முடியாத இந்திய வீரர்கள் உலகக்கோப்பையை வென்றுவிட்டனர். எந்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சாளர்களையும், பேட்ஸ்மேன்களையும் கண்டு சர்வதேச கிரிக்கெட் மிரண்டதோ, அதே வெஸ்ட் இண்டீஸ் அணியை 43 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்திவிட்டது. அந்த ஒரு வெற்றிதான் இன்றும் இந்திய கிரிக்கெட் அணியின் முதுகெலும்பு. அந்த முதுகெலும்பை முதன்முதலில் நிமிரச் செய்தது கபில் தேவ் செய்த சம்பவம்.

WORLD CUP
ஷாம்பைனுடன் வந்த கபில் தேவ்

கடைசி வார்த்தை:

அந்த போட்டி தொடங்குவதற்கு முன்னதாக கபில் தேவ், ஓய்வறையில் நுழையும்போதே ஷாம்பைனுடன்தான் நுழைந்திருக்கிறார். ஏனெனில் இந்த போட்டியில் வெற்றி பெற போகிறோம் அதை கொண்டாட ஷாம்பைன் வேண்டுமென்று அவருக்கு முன்னரே தெரிந்திருக்கிறது. அதேபோல் உலகக்கோப்பையை வென்றெடுத்தார். பெரிய அணிகள் மட்டுமே வெல்ல முடியும் என நினைத்த உலகக்கோப்பையை சிறிய அணியான இந்தியா கைப்பற்றியது. அதுவும் லார்ட்ஸில்.

அதன் பின்னர்தான், மற்ற அணிகளும் உலகக்கோப்பை தொடர்களில் ஆதிக்கம் செலுத்த தொடங்கினர். அந்த வகையில் இன்று பல கிரிக்கெட் அணிகள் உலகக்கோப்பையில் ஆதிக்கம் செலுத்தினாலும் அதுக்கு விதை கபில் போட்டது.

உலகக்கோப்பையை பெற்றுவிட்டு கபில் இப்படி கூறினார். “ஒவ்வொரு வீரரும் சிறப்பாக விளையாடினோம். உலகக்கோப்பையையும் தாண்டி வாழ்க்கைக்காகவும் விளையாடினோம்” ஆம்... இந்திய கிரிக்கெட்டின் உயிர் உருவானது அந்த ஒரு போட்டியில்தான். இந்திய கிரிக்கெட்டின் வாழ்க்கை தொடங்கியது அந்த ஒரு போட்டியிலிருந்துதான். கபில் தேவ் என்னும் நாயகனின் கனவு மட்டுமல்ல ஒட்டுமொத்த தேசத்தின் கனவும் நனவானது அந்த ஒரு போட்டியால்தான்...

கபில் தேவ்
கபில் தேவ் - அமர்நாத்

முன்கதை:

1983 உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப் போட்டியின் ஹைலட்ஸ்களை வீட்டில் பார்த்துக் கொண்டிருந்தபோது, எதார்த்தமாக வீட்டிற்கு வந்த அப்பா கபில் தேவ் பந்துவீசுவதைப் பார்த்து இது இறுதிப்போட்டிதானே என உடன் உட்கார்ந்து முழு ஹைலைட்ஸையும் பார்த்துச் சென்றார். ஆம், இது கபில் தேவ் பெயரை கேட்கும்போதும், பார்க்கும்போதும் அந்த தலைமுறையினருக்கு கண் இமைக்கும் நேரத்தில் ஒவ்வொருவருக்குள்ளும் இருந்த இளைஞன் அவர்களுக்குள் வந்து செல்கிறான்.

WORLD CUP
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில்...

உலகக்கோப்பையை இந்தியாவுக்காக வென்றது ஆடிய 11 வீரர்களும்தானே... ஏன் அனைவரும் கபில் தேவ் புராணம் பாடுகிறீர்கள் என கேட்பவர்களுக்காகதான் இதனை எழுதுகிறோம். இதுவும் நிச்சயம் கபில் தேவ் புராணமாகதான் இருக்கபோகிறது.

1983 உலகக்கோப்பை தொடருக்கு ஒரு ஆண்டுக்கு முன்னதாகதான் கபில் தேவ் என்னும் இளைஞன் கேப்டனாக்கப்பட்டார். முற்றிலும் ”அவாள்” மட்டுமே நிறைந்திருந்த அணியில் கபில் தேவ் எனும் கிராமத்து இளைஞன் அணியில் இடம்பிடித்ததோடு மட்டுமல்லாமல், உலகக்கோப்பைத் தொடரில் அணியை வழிநடத்தவும் செய்தார்.

WORLD CUP
கபிலுடன் சக இந்திய அணியினர்

உலகக்கோப்பை தொடருக்கு தயாரான இந்திய வீரர்களில் பெரும்பாலானோர் தொடர் முழுமையாக நிறைவுபெறும் முன் சுற்றுலா செல்ல அமெரிக்காவுக்கு டிக்கெட் பதிவு செய்துகொண்டனர். ஏனென்றால் 1975, 1979ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடர்களில் இந்திய அணியின் செயல்பாடுகள் அப்படி. அதனால் இங்கிலாந்துக்கு சென்று கிரிக்கெட் விளையாடுவதை இன்னொரு தேனிலவாக எண்ணிய இந்திய வீரர்களின் எண்ணங்களை ஒருவர் சுக்குநூறாக உடைத்துப்போட்டார்.

அப்போது ஒருநாள் போட்டிகளை அதிகம் விளையாடியது வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள்தான். அதனால் இந்தியாவின் அதிகபட்ச வெற்றி என்பது உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக வெஸ்ட் இண்டீஸை ஒரு போட்டியில் வென்றது மட்டுமே. அப்போதைய நிலைமையில் விமானம் ஏறிய இந்திய அணி வீரர்களில் ஒருவர் மட்டுமே உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்ற கனவோடு சென்றார்.

WORLD CUP
லார்ட்ஸ் மைதானத்தில் கபில்

உலகக்கோப்பை 1983:

முதல் போட்டியே ஜாம்பவான் அணியான வெஸ்ட் இண்டீஸை எதிர்த்து ஆட வேண்டும். நடுவரிசை வீரரான யஷ்பால் ஷர்மாவின் சிறப்பான ஆட்டத்தால் வெஸ்ட் இண்டீஸ் அணியை இந்தியா வெல்கிறது. அதைத் தொடர்ந்து சிறப்பாக ஆடினாலும், இந்திய அணியினருக்கு நம்பிக்கை இல்லை. குரூப் சுற்றின் கடைசி போட்டியான ஜிம்பாப்வே அணியிடன் கபில் ஆடிய ஆட்டம் அனைவரையும் ஆட்டம் காணச் செய்தது. அவர் அடித்த ஒவ்வொரு ரன்னிலும் இந்திய அணியின் மன உறுதி அதிகமானது. அங்கிருந்துதான் உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்கிற எண்ணம் இந்திய அணியின் மற்ற வீரர்களுக்கு ஏற்பட்டது. அரையிறுதியில் சொந்த நாட்டு ரசிகர்களுக்கு முன் ஆடிய இங்கிலாந்து அணியை வீழ்த்தி இறுதிக்குள் நுழைய அங்கு மீண்டும் வெஸ்ட் இண்டீஸை சந்திக்க வேண்டிய நிலை. அடிபட்ட சிங்கமாக வெஸ்ட் இண்டீஸ் காத்துக் கொண்டிருக்க இந்தியா சிக்கியது என அனைவரும் நினைத்தனர். ஏன் இந்திய வீரர்களே அப்படித்தான் நினைத்திருப்பார்கள்.

இறுதிப் போட்டி:

’கிரிக்கெட்டின் மெக்கா’ எனப்படும் லார்ட்ஸ் மைதானத்தில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியோ ஆட்டத்தை வேகமாக முடித்துவிடலாம் என எண்ணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. ராபர்ட்ஸ், கார்னர், மார்ஷல், ஹோல்டிங் என மிகவும் அச்சுறுத்தலான பந்துவீச்சுக் கூட்டணியை எதிர்கொள்ள இந்திய அணியின் பேட்டிங் வரிசை தொடை நடுங்கியபடியே களமிறங்கியது.

சுனில் கவாஸ்கர் வந்த வேகத்தில் ராபர்ஸ் வீசிய இன் ஸ்விங்கருக்கு பலியாகி வெளியேற, இந்திய ரசிகர்களின் விழிகள் இருண்டது. அணியின் சிறந்த பேட்ஸ்மேன் இரண்டு ரன்களில் ஆட்டமிழந்த காட்சி, ரசிகர்களின் உலகக்கோப்பைக் கனவை யோசிக்க வைத்தது. பின்னர் தொடக்க வீரர் ஸ்ரீகாந்த் - அமர்நாத் இருவரும் இணைந்தனர். ஸ்ரீகாந்திற்கு ராபர்ஸின் பந்து தொல்லைக் கொடுக்க, அமர்நாத்திற்கு மார்ஷலின் பந்து பயம் கொடுத்தது.

இருவரும் இதுகுறித்து களத்தில் ஆலோசித்து, ஸ்ரீகாந்த் மார்ஷலின் பந்தையும், அமர்நாத் ராபர்ட்ஸ் பந்தையும் எதிர்கொள்ள முடிவு செய்தனர். ஆம், கண்ணை மூடிக்கொண்டு ”போனால் போகட்டும் போடா” என ஸ்ரீகாந்த் விளாசியதில் இந்திய அணியின் இரண்டாவது விக்கெட்டுக்கு 57 ரன்கள் சேந்தது.

கண்ணை மூடிக்கொண்டு ஆடிய ஆட்டத்தில் ஸ்ரீகாந்த 38 ரன்கள் எடுத்து வெளியேற, தொடர்ந்து ஹோல்டிங் வீசிய இன் ஸ்விங்கரில் ஸ்டம்புகள் பறக்க அமர்நாத் 26 ரன்களில் நடையைக் கட்டினார். பின்னர் வந்த சந்தீப் பாட்டீஸ் 27, யஷ்பால் ஷர்மா 11, கபில் தேவ் 15 என கோம்ஸ் பந்தில் ஆட்டமிழக்க, உலகக்கோப்பைக் கனவை லார்ட்ஸில் காவு கொடுத்துவிட்டோமோ என்று ரசிகர்கள் நினைக்க ஆரம்பித்துவிட்டனர்.

டெய்லண்டர்களின் போராட்டத்திற்கு பிறகு, இறுதியாக இந்திய அணி 54.4 ஓவர்களில் 183 ரன்களை எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. மூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றப்போகிறோம் என்ற ஆசையில் விண்டீஸ் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மைதானத்தில் இந்தியா வென்றுவிடும் என்ற எண்ணம் ஒருவருக்கும் இருந்திருக்காது. ஆனால் நடந்ததோ அதிசயமே அசந்து போகும் எட்டாவது அதிசயம்.

WORLD CUP
ஹெய்ன்ஸ் விக்கெட்டை வீழ்த்திய பல்விந்தர் சிங்குடன் இந்திய அணி

இடைவேளை முடிந்து இந்திய அணி வீரர்களிடம் கபில் தேவ் உரையாற்றினார். அந்த உரை சென்ட்டிமென்ட்டாகவோ, உணர்ச்சியின் வெளிப்பாடாகவோ இல்லை. அது போருக்கு செல்லும் முன் முகாலாய பேரரசர் பாபர் ஆற்றிய உரைக்கு சமமாக இருந்தது என ட்ரெஸ்ஸிங் ரூமில் அந்த உரையை கேட்டவர்கள் கூறினார்கள். ஆம், துவண்டு போன மனிதனுக்கு ஆறுதல் கூறும் வார்த்தைகள், வாழ்க்கையை மடைமாற்றுவதாக இருக்க வேண்டும் அணைக் கட்டாக இருக்கக் கூடாது. இந்திய வீரர்கள் துவண்டு போனதைக் கண்ட கபில், கேப்டனாக, ஒரு போர் வீரனாக அணியை முன்நின்று அழைத்து சென்றார். அதன் பின்னர் மைதானத்தில் நடந்தவையெல்லாம் அதிசயம் அல்ல. கபில் தேவ் என்னும் ஆதர்ச நாயகனின் வெறித்தனமான உழைப்பு.

WORLD CUP
விக்கெட் எடுத்த மகிழ்ச்சியில் இந்திய வீரர்

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பல்விந்தர் சிங் வீசிய இன்-ஸ்விங்கரை கணிக்காத கார்டன் போல்டாகி வெளியேறுவார். இந்திய ரசிகர்களின் முதுகு சிறிது நிமிர்ந்தது. வீரர்களின் முதுகும்தான்.

WORLD CUP
கபிலுடன் சக இந்திய அணியினர்

என்னமோ நடக்கிறது என எண்ணிய ரசிகர்களின் மனதில் இடியாய் சர் விவியன் ரிச்சர்ட்ஸ் களமிறங்கினார். ரிச்சர்ட்ஸ் ஒரு பக்கத்தில் அதிரடியில் பொளந்துகட்ட, மதன் லால் வீசிய பந்தில் ஹெய்ன்ஸ் கேட்ச் கொடுத்து வெளியேறினார். வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. பின்னர் கேப்டன் கிளைவ் லாய்டு வர, அதிரடியாக ஆடிய ரிச்சர்ட்ஸ் மதன் வீசிய பந்தை அடிக்க முயன்று டாப் எட்ஜ் ஆக, அதனை மிஸ் செய்துவிடக்கூடாது மிஸ் செய்துவிட்டால் உலகக் கோப்பை மிஸ் ஆகிவிடும் என்பதில் தீர்க்கமாக கபில் தேவ் அன்று ஓடிய ஓட்டத்தில் ஆரம்பித்தது இந்திய கிரிக்கெட் அணியின் இன்றைய ஓட்டம்.

WORLD CUP
விவியன் ரிச்சர்ட்ஸின் கேட்ச்சை பிடித்தபோது...

ரிச்சர்ட்ஸ் விக்கெட்டை எடுத்த பிறகு சிறிது நிமிர்ந்த ரசிகர்களின் முதுகுகள் அந்த நொடி லார்ட்ஸில் கம்பீரமாக நிமிர்ந்து அமர்ந்தது. அதுமட்டுமின்றி எழுந்து ஆரவாரம் செய்யவும் தூண்டியது. ஏனெனில் ரிச்சர்ட்ஸ் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என சொல்லி தெரிய வேண்டியதில்லை.

”ரிச்சர்ட்ஸை ஆட்டமிழக்கச் செய்த அந்த ஓவரை தன்னிடமிருந்து மதன் லால், நான் வீசுகிறேன் என வலுக்கட்டாயமாக பந்தை வாங்கி வீசினார்” என கபில் தேவ் பின்னாட்களில் அந்த த்ரில் மொமண்ட்டை நினைவுகூர்கிறார்.

ஆட்டம் பரபரப்பாக இருக்கிறது. எதிரணி பந்துவீச்சாளர்களை வேட்டையாடும் வேட்டைக்காரன் ஒருவர் களத்தில் நிற்கிறார். அந்த சமயத்தில் மித வேக பந்துவீச்சாளர் ஒருவர் வந்து வலுக்கட்டாயமாக கேப்டனிடம் இருந்து நான்தான் வீசுவேன் என பந்தை பிடுங்கினால் எந்த கேப்டனும் அவரை திட்டவோ, அலட்சியப்படுத்தவோ வாய்ப்புண்டு. ஆனால், கபில் மட்டும்தான் நம்பிக்கையாக பேசுபவனிடம் பந்தை கொடுக்கலாம் என எண்ணி அதனை செயல்படுத்தினார். அங்குதான் கபில் தேவ் கேப்டனாக நிமிர்ந்து நின்றார்.

கடைசி நிமிடம்:

வேட்டைக்காரனை மூட்டைக் கட்டி அனுப்பியாகிவிட்டது. அதன் பின்னர் வந்த கோம்ஸ் 5, லாய்டு 8 என விக்கெட்டுகள் நில நடுக்கத்தில் விழும் கட்டடங்கள் போல் சரிய, இந்திய ரசிகர்கள் கடவுளை வேண்ட, கபில் உழைப்பை வேண்டினார். பின்னர் வந்த விக்கெட் கீப்பர் ஜெஃப் டுஜன் - மார்ஷல் இணை சிறிது நேரம் தாக்கு பிடித்து ரன்களை சேர்க்க, அமர்நாத் வந்து அந்த ஜோடி செய்து கொண்டிருந்த வேலையை முடித்துவைத்தார். பின்னர் ராபர்ட்ஸை கபில் தேவ் வீழ்த்த, ஹோல்டிங் ஆறு ரன்களில் ஆட்டமிழந்து இந்தியா வென்றவுடன் ரசிகர்கள் முதல்முறையாக வெற்றி பெற்ற பூரிப்புடன் லார்ட்ஸ் அதிர மைதானத்திற்குள் ஓடினர். வீரர்களோ பெவிலியன் நோக்கி ஓடினர்.

ஆம், கடந்த இரண்டு உலகக்கோப்பையை வென்று கிரிக்கெட் உலகின் பேரரசனாக திகழ்ந்த வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி இந்திய அணி வீழ்த்தி முதன்முதலாக அரசனாக முடிசூடிக்கொள்ளும் நேரம் வந்துவிட்டது.

WORLD CUP
உலகக்கோப்பை வென்ற மகிழ்ச்சியில் இந்திய வீரர்கள்

சில நாட்களுக்கு முன்னதாக உலகக்கோப்பையை வெல்வோம் என தங்களாலேயே நம்ப முடியாத இந்திய வீரர்கள் உலகக்கோப்பையை வென்றுவிட்டனர். எந்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சாளர்களையும், பேட்ஸ்மேன்களையும் கண்டு சர்வதேச கிரிக்கெட் மிரண்டதோ, அதே வெஸ்ட் இண்டீஸ் அணியை 43 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்திவிட்டது. அந்த ஒரு வெற்றிதான் இன்றும் இந்திய கிரிக்கெட் அணியின் முதுகெலும்பு. அந்த முதுகெலும்பை முதன்முதலில் நிமிரச் செய்தது கபில் தேவ் செய்த சம்பவம்.

WORLD CUP
ஷாம்பைனுடன் வந்த கபில் தேவ்

கடைசி வார்த்தை:

அந்த போட்டி தொடங்குவதற்கு முன்னதாக கபில் தேவ், ஓய்வறையில் நுழையும்போதே ஷாம்பைனுடன்தான் நுழைந்திருக்கிறார். ஏனெனில் இந்த போட்டியில் வெற்றி பெற போகிறோம் அதை கொண்டாட ஷாம்பைன் வேண்டுமென்று அவருக்கு முன்னரே தெரிந்திருக்கிறது. அதேபோல் உலகக்கோப்பையை வென்றெடுத்தார். பெரிய அணிகள் மட்டுமே வெல்ல முடியும் என நினைத்த உலகக்கோப்பையை சிறிய அணியான இந்தியா கைப்பற்றியது. அதுவும் லார்ட்ஸில்.

அதன் பின்னர்தான், மற்ற அணிகளும் உலகக்கோப்பை தொடர்களில் ஆதிக்கம் செலுத்த தொடங்கினர். அந்த வகையில் இன்று பல கிரிக்கெட் அணிகள் உலகக்கோப்பையில் ஆதிக்கம் செலுத்தினாலும் அதுக்கு விதை கபில் போட்டது.

உலகக்கோப்பையை பெற்றுவிட்டு கபில் இப்படி கூறினார். “ஒவ்வொரு வீரரும் சிறப்பாக விளையாடினோம். உலகக்கோப்பையையும் தாண்டி வாழ்க்கைக்காகவும் விளையாடினோம்” ஆம்... இந்திய கிரிக்கெட்டின் உயிர் உருவானது அந்த ஒரு போட்டியில்தான். இந்திய கிரிக்கெட்டின் வாழ்க்கை தொடங்கியது அந்த ஒரு போட்டியிலிருந்துதான். கபில் தேவ் என்னும் நாயகனின் கனவு மட்டுமல்ல ஒட்டுமொத்த தேசத்தின் கனவும் நனவானது அந்த ஒரு போட்டியால்தான்...

கபில் தேவ்
கபில் தேவ் - அமர்நாத்
Intro:Body:

1983 WORLD CUP SPECIAL STORY


Conclusion:
Last Updated : Jun 25, 2019, 8:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.