நாடு முழுவதும் கரோனா வைரஸ் அச்சுறுத்தலினால் மே 3ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் இம்மாதம் தொடங்கவிருந்த ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன், காலவரையறையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவிப்பை வெளியிட்டது.
இந்நிலையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அஞ்சும் சோப்ரா, மகளிருக்கான ஐபிஎல் தொடர் விரைவில் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளர்.
இது குறித்து அவர் கூறுகையில், "மகளிர் ஐபிஎல் தொடர் விரைவில் ஆரம்பிக்கவுள்ளோம். மேலும் கடந்தாண்டு நான்கு அணிகளைக் கொண்டு நடைபெற்ற இத்தொடர் தற்போது ஏழு அணிகளைக் கொண்டு நடைபெறும். அதற்கான வேலைகள் முழுவீச்சில் நடைபெற்றுவருகின்றன.
![அஞ்சும் சோப்ரா](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-6949991-thumbnail-3x2-anjum_2704newsroom_1587961572_5.jpg)