ETV Bharat / sports

உமர் அக்மல் வழக்கு, 11ஆம் தேதி விசாரணை!

author img

By

Published : Jun 6, 2020, 5:11 AM IST

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் உமர் அக்மல், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனக்கு விதித்துள்ள தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ள வழக்கின் விசாரணை ஜூன்11ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Umar Akmal's appeal against 3-year ban to be heard on June 11
Umar Akmal's appeal against 3-year ban to be heard on June 11

பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரராக வலம்வந்தவர் உமர் அக்மல். இவர் மீது பாகிஸ்தான் சூப்பர் லீக் (பிஎஸ்எல்) டி20 தொடரில் ஸ்பாட் ஃபிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்தது. இதனையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (பிசிபி) ஊழல் தடுப்புப் பிரிவினர் விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில் இவ்வழக்கை விசாரணை செய்த நீதிபதி ஃபசல், உமர் அக்மல் மீதான சூதாட்டம் குறித்தான குற்றச்சாட்டுகள் நிரூபணமானதால், அவர் மூன்று ஆண்டுகளுக்கு எவ்வித கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்கக்கூடாது எனத் தடைவிதித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து உமர் அக்மல், தனக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்திருந்தார். இந்நிலையில் இவர் தொடர்ந்திருந்த மேல்முறையீடு வழக்கானது வருகிற ஜூன் 11ஆம் தேதி விசாரணைக்கு வருவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உமர் அக்மல் மீதான தடை உத்தரவை எதிர்த்து, அவர் செய்த மேல்முறையீடு வழக்கு விசாரணை ஜூன் 11ஆம் தேதி நடக்கவுள்ளது என்று தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் அணிக்காக, உமர் அக்மல் இறுதியாக கடந்தாண்டு அக்டோபர் மாதம் இலங்கை அணிக்கு எதிரான டி20 போட்டியில் விளையாடியிருந்தார். இதுவரை உமர் அக்மல் 16 டெஸ்ட், 121 ஒருநாள், 84 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஐபிஎல் சீசன் சிறந்த தொடக்கமாக அமையும்'-தீபக் சஹர்

பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரராக வலம்வந்தவர் உமர் அக்மல். இவர் மீது பாகிஸ்தான் சூப்பர் லீக் (பிஎஸ்எல்) டி20 தொடரில் ஸ்பாட் ஃபிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்தது. இதனையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (பிசிபி) ஊழல் தடுப்புப் பிரிவினர் விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில் இவ்வழக்கை விசாரணை செய்த நீதிபதி ஃபசல், உமர் அக்மல் மீதான சூதாட்டம் குறித்தான குற்றச்சாட்டுகள் நிரூபணமானதால், அவர் மூன்று ஆண்டுகளுக்கு எவ்வித கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்கக்கூடாது எனத் தடைவிதித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து உமர் அக்மல், தனக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்திருந்தார். இந்நிலையில் இவர் தொடர்ந்திருந்த மேல்முறையீடு வழக்கானது வருகிற ஜூன் 11ஆம் தேதி விசாரணைக்கு வருவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உமர் அக்மல் மீதான தடை உத்தரவை எதிர்த்து, அவர் செய்த மேல்முறையீடு வழக்கு விசாரணை ஜூன் 11ஆம் தேதி நடக்கவுள்ளது என்று தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் அணிக்காக, உமர் அக்மல் இறுதியாக கடந்தாண்டு அக்டோபர் மாதம் இலங்கை அணிக்கு எதிரான டி20 போட்டியில் விளையாடியிருந்தார். இதுவரை உமர் அக்மல் 16 டெஸ்ட், 121 ஒருநாள், 84 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஐபிஎல் சீசன் சிறந்த தொடக்கமாக அமையும்'-தீபக் சஹர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.