10 நாடுகளைச் சேர்ந்த பல்வேறு கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் உலகக்கோப்பைத் தொடர் இங்கிலாந்தில், மே 30-ல் தொடங்குகிறது. நான்கு வருடங்களுக்கு ஒருமுறையே நடக்கும் உலகக் கோப்பையை வெல்வதற்கு கிரிக்கெட் அணிகளுக்கிடையே மிகப்பெரிய போராட்டம் நடக்கும். இதனால் உலகக்கோப்பைத் தொடர் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த வருடம் தொடங்கும் உலகக் கோப்பை தொடரை நேரில் கண்டு ரசிப்பதற்கான டிக்கெட் விற்பனை எப்போது தொடங்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த வேளையில், மார்ச் 23-ல் டிக்கெட் விற்பனைத் தொடங்கும் என ஐசிசி அறிவித்துள்ளது.
டிக்கெட்டுகள் உலகக்கோப்பை இணையதளத்தில் கிடைக்கும் எனவும், வழக்கம்போல் முதலில் வருபவர்களுக்கே முன்னுறிமை என தெரிவித்துள்ளதால் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.