ETV Bharat / sports

'இது எங்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி' - ஜேசன் ஹோல்டர்!

author img

By

Published : Jul 13, 2020, 5:35 PM IST

செளதாம்டன்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்றது தங்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி என வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டர் தெரிவித்துள்ளார்.

'A massive win': West Indies captain Jason Holder after win over England in 1st Test
'A massive win': West Indies captain Jason Holder after win over England in 1st Test

கரோனா காரணமாக 117 நாள்கள் நடைபெறாமல் இருந்த சர்வதேச கிரிக்கெட் போட்டிகள், கடந்த ஜூலை எட்டாம் தேதியிலிருந்து மீண்டும் நடைபெற தொடங்கியுள்ளன. இங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி செளதாம்டனில் நடைபெற்றது.

முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 204 ரன்களும், வெஸ்ட் இண்டீஸ் 318 ரன்களும் எடுத்தன. இதையடுத்து, 114 ரன்கள் பின்தங்கிய நிலையில், தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து அணி நேற்றைய கடைசி ஆட்ட நாள் தொடக்கத்தில் 313 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதனால் 200 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி ஜெர்மைன் பிளாக்வுட்டின் சிறப்பான ஆட்டத்தால் இப்போட்டியில் நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இப்போட்டியில் ஒன்பது விக்கெட்டுகளை வீழ்த்திய வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர் ஷெனான் கேப்ரியல் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில், இப்போட்டியில் கிடைத்த வெற்றி குறித்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டர் கூறுகையில், "இந்த வெற்றி எங்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும். இங்கிலாந்து அணியை அவர்களது சொந்த மண்ணில் வீழ்த்துவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.

இதற்கு முன்னால் கடந்த முறை (2017இல்) சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது ஹெட்டிங்கிலியில் நடைபெற்ற போட்டியில் நாங்கள் அவர்களை வீழ்த்தினோம். அதனால் அந்த வெற்றியின் உணர்வு எப்படி இருக்கும் என்பதை நாங்கள் அறிவோம்.

ஆனால் அதற்குப் பிறகு இங்கிலாந்து அணியில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதால், அவர்கள் மிகப்பெரிய அணியாக மாறினர். குறிப்பாக, அவர்களது சொந்த மண்ணில் அசைக்க முடியாத அணியாகவே திகழ்ந்தனர். இப்படி இருக்கையில் இந்தத் தொடரின் முதல் போட்டியில் வெற்றிபெற்றது எங்களுக்கு நம்பிக்கையளிக்கிறது.

முதல் போட்டியில் நாங்கள் வெளிப்படுத்திய ஆட்டத்திறனைக் கண்டு எங்களுக்குப் பெருமையாகவும் இருக்கிறது. ஷெனான் கேப்ரியல் பந்துவீசிய விதம் ஒன்றும் எங்களுக்கு ஆச்சரியமாக இல்லை. அவருக்குத் தெரிந்ததை வைத்து அவர் பந்து வீசுகிறார். கடந்த காலங்களில் அவர் எதிர்பார்த்த அளவிற்குப் பந்து வீச அவரது உடல் ஒத்துழைக்கவில்லை.

ஆனால் இம்முறை உடற்தகுதியில் தேர்ச்சிபெற்ற அவர், சிறப்பாகஒ பந்து வீசியதே எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வெற்றிக்கு அவரது பங்களிப்பு அளப்பரியது.

விளையாடும் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றிபெற வேண்டும் என்றுதான் நாங்கள் விரும்புவோம். ஆனால் களத்தில் களமிறங்கிய பிறகு நாங்கள் எதிர்பார்த்தது நடந்ததில்லை. கடந்த காலங்களில் எந்த ஒரு தொடரையும் நாங்கள் வெற்றியுடன் தொடங்கியதில்லை. ஆனால், இம்முறை இந்தத் தொடரைச் சிறப்பாகத் தொடங்கியதை, மிக முக்கியமானதாகப் பார்க்கிறேன்" என்றார்.

இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் 16ஆம் தேதி ஒல்ட் டிரஃபோர்ட் மைதானத்தில் நடைபெற உள்ளது.

கரோனா காரணமாக 117 நாள்கள் நடைபெறாமல் இருந்த சர்வதேச கிரிக்கெட் போட்டிகள், கடந்த ஜூலை எட்டாம் தேதியிலிருந்து மீண்டும் நடைபெற தொடங்கியுள்ளன. இங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி செளதாம்டனில் நடைபெற்றது.

முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 204 ரன்களும், வெஸ்ட் இண்டீஸ் 318 ரன்களும் எடுத்தன. இதையடுத்து, 114 ரன்கள் பின்தங்கிய நிலையில், தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து அணி நேற்றைய கடைசி ஆட்ட நாள் தொடக்கத்தில் 313 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதனால் 200 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி ஜெர்மைன் பிளாக்வுட்டின் சிறப்பான ஆட்டத்தால் இப்போட்டியில் நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இப்போட்டியில் ஒன்பது விக்கெட்டுகளை வீழ்த்திய வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர் ஷெனான் கேப்ரியல் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில், இப்போட்டியில் கிடைத்த வெற்றி குறித்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டர் கூறுகையில், "இந்த வெற்றி எங்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும். இங்கிலாந்து அணியை அவர்களது சொந்த மண்ணில் வீழ்த்துவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.

இதற்கு முன்னால் கடந்த முறை (2017இல்) சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது ஹெட்டிங்கிலியில் நடைபெற்ற போட்டியில் நாங்கள் அவர்களை வீழ்த்தினோம். அதனால் அந்த வெற்றியின் உணர்வு எப்படி இருக்கும் என்பதை நாங்கள் அறிவோம்.

ஆனால் அதற்குப் பிறகு இங்கிலாந்து அணியில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதால், அவர்கள் மிகப்பெரிய அணியாக மாறினர். குறிப்பாக, அவர்களது சொந்த மண்ணில் அசைக்க முடியாத அணியாகவே திகழ்ந்தனர். இப்படி இருக்கையில் இந்தத் தொடரின் முதல் போட்டியில் வெற்றிபெற்றது எங்களுக்கு நம்பிக்கையளிக்கிறது.

முதல் போட்டியில் நாங்கள் வெளிப்படுத்திய ஆட்டத்திறனைக் கண்டு எங்களுக்குப் பெருமையாகவும் இருக்கிறது. ஷெனான் கேப்ரியல் பந்துவீசிய விதம் ஒன்றும் எங்களுக்கு ஆச்சரியமாக இல்லை. அவருக்குத் தெரிந்ததை வைத்து அவர் பந்து வீசுகிறார். கடந்த காலங்களில் அவர் எதிர்பார்த்த அளவிற்குப் பந்து வீச அவரது உடல் ஒத்துழைக்கவில்லை.

ஆனால் இம்முறை உடற்தகுதியில் தேர்ச்சிபெற்ற அவர், சிறப்பாகஒ பந்து வீசியதே எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வெற்றிக்கு அவரது பங்களிப்பு அளப்பரியது.

விளையாடும் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றிபெற வேண்டும் என்றுதான் நாங்கள் விரும்புவோம். ஆனால் களத்தில் களமிறங்கிய பிறகு நாங்கள் எதிர்பார்த்தது நடந்ததில்லை. கடந்த காலங்களில் எந்த ஒரு தொடரையும் நாங்கள் வெற்றியுடன் தொடங்கியதில்லை. ஆனால், இம்முறை இந்தத் தொடரைச் சிறப்பாகத் தொடங்கியதை, மிக முக்கியமானதாகப் பார்க்கிறேன்" என்றார்.

இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் 16ஆம் தேதி ஒல்ட் டிரஃபோர்ட் மைதானத்தில் நடைபெற உள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.